1. யோபு, "நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
|
3. ஆனால் நான் உங்களோடு வாதாட விரும்பவில்லை. சர்வ வல்லமையுள்ள தேவனோடு நான் பேச விரும்புகிறேன். என் தொல்லைகளைப்பற்றி நான் தேவனோடு வாதாட விரும்புகிறேன்.
|
4. ஆனால் நீங்கள் மூவரும் உங்கள் அறியாமையைப் பொய்களால் மறைக்க முயல்கிறீர்கள். ஒருவரையும் குணப்படுத்த முடியாத தகுதியற்ற மருத்துவர்களைப்போல் இருக்கிறீர்கள்.
|
5. நீங்கள் அமைதியாயிருக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் செய்யத்தக்க மிகுந்த ஞானமுள்ள காரியம் அதுவேயாகும்.
|
7. நீங்கள் தேவனுக்காகப் பொய் கூறுவீர்களா? நீங்கள் கூறும் பொய்களை, நீங்கள் கூறவேண்டுமென்று தேவன் விரும்பியதாக நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?
|
8. எனக்கெதிராக தேவனை ஆதரித்துப் பேச முயன்றுகொண்டிருக்கிறீர்களா? தேவனுக்காக வழக்குகள் கொண்டுவர முடியுமா?
|
9. உங்களை தேவன் கூர்ந்து ஆராய்ந் தால், நீங்கள் சரியானவர்கள் என காண்பிப் பாரா? நீங்கள் ஜனங்களை மூடராக்குவது போல் தேவனை முட்டாளாக்க முடியும் என உண்மையாகவே எண்ணுகிறீர்களா?
|
10. ஒரு மனிதன் முக்கியமானவன் என்பதால் மட்டும் நீதிமன்றத்தில் இரகசியமாக அவன் பக்கம் சாய முடிவுசெய்தால், தேவன் உங்களை விசாரணை செய்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
|
11. தேவனுடைய மகத்துவம் (முக்கியத்துவம்) உங்களை அச்சுறுத்துகிறது. நீங்கள் அவரைக் கண்டு பயப்படுகிறீர்கள்.
|
12. உங்கள் வாக்குவாதங்கள் சாம்பலைப் போல் எந்தப் பயனுமற்றவை. உங்கள் பதில்கள் சேற்றுக்குவியல்கள் போலப் பயனற்றவை.
|
13. "அமைதியாயிருங்கள், என்னைப் பேச விடுங்கள்! பிறகு எனக்கு நேரிடும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
|
15. தேவன் என்னைக் கொன்றாலும் நான் அவரைத் தொடர்ந்து நம்புவேன். அவருக்கு முன்பாக என் பொருட்டு வாதாடுவேன்.
|
16. தேவன் என்னை வாழவிட்டால்,அது நான் அவரிடம் துணிந்து பேசியதன் விளைவாகும். தீயவன் ஒருவனும் தேவனை முகத்துக்கு முகம் பார்க்கத் துணிவதில்லை.
|
18. நான் எனக்காக வாதாட தயாராயிருக்கிறேன். எனது வாதங்களைக் கவனமாகச் சொல்வேன். நான் குற்றமற்றவன் என்று தீர்க்கப்படுவேனென்று அறிவேன்.
|
22. பின்பு என்னைக் கூப்பிடும், நான் பதில் தருவேன். அல்லது என்னைப் பேசவிடும், நீர் எனக்குப் பதில் தாரும்.
|
23. நான் எத்தனை பாவங்கள் செய்துள்ளேன்? நான் என்ன தவறு செய்தேன்? என் பாவங்களையும் எனது தவறுகளையும் எனக்குக் காட்டும்.
|
25. என்னை அச்சுறுத்த முயன்றுக்கொண்டிருக்கிறீரா? நான் காற்றில் பறக்கும் ஒரு இலைமட்டுமே யாவேன். ஒரு சிறிய காய்ந்த வைக்கோல் துண்டினை நீர் தாக்குகிறீர்.
|
26. தேவனே, எனக்கெதிராகக் கசப்பானவற்றைக் கூறுகிறீர். நான் இளமையில் செய்த பாவங்களுக்காக என்னை துன்புறச் செய்கிறீரா?
|
28. எனது ஒவ்வோர் அசைவையும் நீர் கண்ணோக்குகிறீர். அரித்துப்போகின்ற மரத்தைப்போலவும், அந்த பூச்சிகளால் அரிக்கப்படும் துணியைப் போலவும் நான் சோர்ந்து அழிந்துப்போகிறேன்" என்றான்.
|