2. தேவதாரு மரங்களே! புலம்பியழுங்கள்; ஏனெனில், கேதுரு மரங்கள் வீழ்த்தப்பட்டன; ஓங்கி வளர்ந்த மரங்கள் பாழாயின; பாசான் நாட்டுக் கருவாலி மரங்களே! புலம்பியெழுங்கள்; ஏனெனில், அடர்ந்த காடு வெட்டி வீழ்த்தப்பட்டது.
|
3. அவர்கள் அலறியழும் குரல் கேட்கின்றது; ஏனெனில் அவர்களின் மேன்மை பாழ்படுத்தப்பட்டது; இளம் சிங்கங்களின் கர்ச்சனை கேட்கின்றது; ஏனெனில், யோர்தானின் காடு அழிக்கப்பட்டது.
|
5. விலைக்கு வாங்குவோர் அவற்றைக் கொன்றுவிடுவர்; ஆயினும் குற்றப்பழி அவர்கள் மீது சுமத்தப்படாது. அவற்றை விற்பவர்களோ, "ஆண்டவர் போற்றி! போற்றி! எங்களுக்குச் செல்வம் சேர்ந்தது" என்று சொல்கிறார்கள். ஆனால் ஆயர்கள் அவற்றின்மீது இரக்கம் காட்டவில்லை.
|
6. "இனிமேல் நான் உலகில் வாழ்வோர்க்கு இரக்கம் காட்ட மாட்டேன், "என்கிறார் ஆண்டவர். இதோ! மனிதர் ஒவ்வொருவரையும் அவரவர் அடுத்திருப்பார் கையிலும் அரசர்களின் கையிலும் சிக்கும்படி ஒப்புவிக்கப் போகிறேன். அவர்கள் நாட்டை அழித்தொழிப்பார்கள். அவர்கள் கையிலிருந்து நான் யாரையும் தப்புவிக்கமாட்டேன்.
|
7. அவ்வாறே நான் வெட்டுவதற்குக் குறிக்கப்பட்ட ஆடுகளை வணிகருக்காக மேய்க்கின்ற ஆயானானேன்; நான் இரு கோல்களைக் கையிலெடுத்து, ஒன்றிற்கு "இனிமை" என்றும், மற்றதற்கு "ஒன்றிப்பு" என்றும் பெயரிட்டு அம்மந்தையை மேய்த்துவந்தேன்.
|
8. ஒரே மாதத்தில் நான் மூன்று ஆயர்களை ஒழித்து விட்டேன்; நான் அவர்களைப் பொறுத்தமட்டில் பொறுமை இழந்து விட்டேன்; அவர்களும் என்னை வெறுத்தார்கள்.
|
9. அப்போது, "இனி நான் உங்களை மேய்க்கப்போவதில்லை; சாவது சாகட்டும்; அழிவது அழியட்டும்; மீதியிருப்பவை ஒன்றை ஒன்று கடித்துக் தின்னட்டும்"
|
10. என்று நான் சொன்னேன். "இனிமை" என்ற என் கோலை எடுத்து, மக்களினங்கள் அனைத்தோடும் நான் செய்து கொண்ட உடன்படிக்கை முறியும்படி அதை முறித்துப் போட்டேன்.
|
11. அந்த உடன்படிக்கை முறிந்து போயிற்று. அவ்வாறெ என்னைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆட்டுவணிகரும் அது ஆண்டவரின் வாக்கு என்பதை உணர்ந்து கொண்டனர்.
|
12. அப்போது நான் அவர்களை நோக்கி, "உங்களுக்குச் சரி என்று தோன்றினால் என் கூலியைக் கொடுங்கள்; இல்லையேல் கொடுக்க வேண்டாம், விடுங்கள்" என்றேன். அவர்கள் எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகளைக்; கொடுத்தார்கள்.
|
13. ஆண்டவர் என்னிடம், "கருவூலத்தை நோக்கி அதைத் தூக்கி எறி; இதுதான் அவர்கள் எனக்கு அளித்த சிறந்த மதிப்பீடு!" என்றார். அவ்வாறே நான் அந்த முப்பது வெள்ளிக் காசுகளையும் கையிலெடுத்து ஆண்டவரின் இல்லத்திலிருந்த கருவூலத்தில் எறிந்துவிட்டேன்.
|
14. யூதாவுக்கும் இஸ்ரயேலுக்கும் இடையே இருந்த சகோதர ஒருமைப்பாடு முறியும்படி "ஒன்றிப்பு" என்ற இரண்டாம் கோலையும் நான் ஒடித்துப் போட்டேன்.
|
15. பின்பு ஆண்டவர் என்னை நோக்கி, "அறிவற்ற ஆயன் ஒருவனின் கருவிகளை இன்னொருமுறை எடுத்துக்கொள்" என்றார்.
|
16. ஏனெனில் இதோ நாட்டில் ஆயன் ஒருவனை எழுப்புவேன்; அவன் அழிந்து போவதைக் காப்பாற்றமாட்டேன். சிதறிப் போவதைத் தேடித் திரியமாட்டான்; எலும்பு முறிந்ததைக் குணப்படுத்தமாட்டான்; நலமாயிருப்பதற்கு உணவு கொடுக்க மாட்டான்; ஆனால் கொழுத்ததின் இறைச்சியைத் தின்பான்; அவற்றின் குளம்புகளைக்கூட நறுக்கிப் போடுவான்.
|
17. ஆடுகளைக் கைவிடுகிற பயனற்ற என் ஆயனுக்கு ஐயோ கேடு! அவனுடைய கைமேலும் வலக்கண் மேலும் வாள் வந்து விழட்டும்; அவனது கை முற்றிலும் சூம்பிப் போகட்டும்; அவனது வலக்கண் இருண்டு முற்றிலும் குருடாகட்டும்.
|