தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சகரியா
1. இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்; மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்; வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே;
2. குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன; குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்; அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்; வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்; ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்; ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.
3. ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது; தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்; அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.
4. அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்; கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.
5. அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.
6. "யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்; யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்; அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்; அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்; ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.
7. எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்; திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்; அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்; ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
8. சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்; ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்; முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
9. மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10. நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்; அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்; இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.
11. எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்; கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்; பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்; எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.
12. ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், "என்கிறார் ஆண்டவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 14 Chapters, Current Chapter 10 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
சகரியா 10:6
1. இளவேனில் காலத்தில் மழைக்காக ஆண்டவரிடம் மன்றாடுங்கள்; ஆண்டவரே மின்னல்களை உண்டாக்குபவர்; மனிதர்க்கு அவரே மழையைத் தருபவர்; வயல்வெளிகளில் பயிரினங்களை முளைப்பிப்பவரும் அவரே;
2. குலதெய்வங்களை வீணானதையே கூறுகின்றன; குறிசொல்வோர் பொய்க்காட்சி காண்கின்றனர்; அவர்கள் போலிக் கனவுகளை எடுத்துரைக்கின்றனர்; வெறுமையான ஆறுதல் மொழிகளைச் சொல்கின்றனர்; ஆதலால், மக்கள் ஆடுகளைப்போல் சிதறுண்டு அலைந்தனர்; ஆயரில்லாததால் துன்புறுகின்றனர்.
3. ஆயர்களுக்கு எதிராக என் கோபம் பற்றியெரிகின்றது; தலைவர்களை நான் தண்டிக்கப் போகின்றேன்; ஏனெனில், படைகளின் ஆண்டவர் தம் மந்தையாகிய யூதா குடும்பத்தாரைக் கண்காணிக்கிறார்; அவர்களை வலிமைமிகு போர்க்குதிரைகளைப்போல் ஆக்குவார்.
4. அவர்களிடமிருந்தே மூலைக் கல் தோன்றும்; கூடார முளையும், போர் வில்லும், ஆட்சியாளர் அனைவரும் ஒருங்கே அவர்களிடமிருந்துதான் தோன்றுவர்.
5. அவர்கள், ஆற்றல்மிக்க போர்வீரர்களைப்போல், பகைவரைச் சேற்றில் தள்ளி மிதிப்பார்கள்.
6. "யூதா குடும்பத்தை ஆற்றல் மிக்கதாய் ஆக்குவேன்; யோசேப்பு குடும்பத்தை மீட்டருள்வேன்; அவர்கள்மீது இரக்கம் கொண்டுள்ளதால் அவர்களை நான் திரும்பி வரச்செய்வேன்; அவர்கள் என்னால் தள்ளிவிடப்படாதவர்களைப் போல் இருப்பார்கள்; ஏனெனில், நானே அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர்; நான் அவர்களின் மன்றாட்டுக்கு மறுமொழி அளிப்பேன்.
7. எப்ராயிம் மக்கள் ஆற்றல்மிக்க வீரரைப்போலாவார்கள்; திராட்சை மது அருந்தியவரின் உள்ளத்தைப்போல் அவர்கள் உள்ளம் களிப்படையும்; அவர்கள் பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழ்ச்சியுறுவார்கள்; ஆண்டவரில் அவர்கள் இதயம் மகிழ்ந்து களிப்புறும்.
8. சீழ்க்கை ஒலி எழுப்பி நான் அவர்களைச் சேர்த்துக் கொள்வேன்; ஏனெனில் நானே அவர்களை மீட்டருள்வேன்; முன்போலவே அவர்கள் பல்கிப் பெருகுவார்கள்.
9. மக்களினங்களிடையே நான் அவர்களைச் சிதறடித்தாலும், தொலை நாடுகளில் என்னை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்; தங்கள் மக்களோடு வாழ்ந்து திரும்பி வருவார்கள்.
10. நான் அவர்களை எகிப்து நாட்டினின்று திரும்பிவரச் செய்வேன்; அசீரியாவிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்; கிலயாது, லெபனோன் நாடுகளுக்கு அவர்களைக் கொண்டு வருவேன்; இடம் இல்லாமல் போகுமட்டும் வந்து சேருவார்கள்.
11. எகிப்தியக் கடலை அவர்கள் கடந்து செல்வார்கள்; கடல் அலைகள் அடித்து நொறுக்கப்படும்; பேராற்றின் ஆழங்களெல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் ஆணவம் அடக்கப்படும்; எகிப்து நாட்டின் செங்கோல் அகற்றப்படும்.
12. ஆண்டவருக்குள் அவர்களை ஆற்றல் மிக்கவர்கள் ஆக்குவேன்; ஆண்டவரின் பெயரில் அவர்கள் பெருமைகொள்வார்கள், "என்கிறார் ஆண்டவர்.
Total 14 Chapters, Current Chapter 10 of Total Chapters 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

tamil Letters Keypad References