1. நீர் என் உடன்பிறப்பாக இருக்கக் கூடாதா! என் அன்னையிடம் பால் குடித்தவராய் இருக்கலாகாதா! தெருவில் கண்டாலும் நான் உம்மை முத்தமிடுவேனே! அப்போது எவருமே என்னை இகழமாட்டார்.
|
2. உம்மை என் தாய் வீட்டுக்குக் கூட்டி வருவேன்; எனக்குக் கற்றுத் தந்தவளின் மனைக்குள் கொணர்ந்திடுவேன்; மணமூட்டிய திராட்சை இரசத்தை உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்; என் மாதுளம் பழச்சாற்றைப் பருகத் தருவேன்.
|
4. எருசலேம் மங்கையரே, ஆணையிட்டுக் கேட்கின்றேன்; காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்? தானே விரும்பும்வரை அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
|
5. "யார் இவள்! பாலைவெளியினின்று எழுந்து வருபவள்; தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு வருபவள் யார் இவள்?" கிச்சிலி மரத்தடியில் நான் உம்மை எழுப்பினேன்; அங்கேதான் உம்தாய் பேறுகால வேதனையுற்றாள்.
|
6. உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல் என்னைப் பொறித்திடுக; இலச்சினைப்போல் உம் கையில் பதித்திடுக; ஆம், அன்பு சாவைப்போல் வலிமைமிக்கது; அன்பு வெறி பாதாளம்போல் பொறாதது; அதன் பொறி, எரிக்கும் நெருப்புப் பொறி; அதன் கொழுந்து பொசுக்கும் தீக்கொழுந்து.
|
7. பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது; வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது; அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம் வாரியிறைக்கலாம்; ஆயினும், அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி.
|
8. நம்முடைய தங்கை சிறியவள்; அவளுக்கு முலைகள் முகிழ்க்கவில்லை; அவளைப் பெண்பேச நம் தங்கைக்காக என் செய்வோம்?
|
9. அவள் ஒரு மதிலானால் அதன்மேல் வெள்ளியரண் கட்டிடுவோம்; அவள் ஒரு கதவானால் அதனை கேதுருப் பலகையால் மூடிடுவோம்.
|
10. நான் மதில்தான்; என் முலைகள் அதன் கோபுரங்கள் போல்வன; அவர்தம் பார்வையில் நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
|
11. பாகால்-ஆமோன் என்னுமிடத்தில் சாலமோனுக்கு இருந்தது ஒரு திராட்சைத் தோட்டம், திராட்சைத் தோட்டத்தை அவர் காவலரிடம் ஒப்படைத்தார்; அதன் கனிகளுக்காக எவரும் ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
|
12. எனக்குரிய திராட்சைத் தோட்டம் என்முன்னே உளது; சாலமோனே, அந்த ஆயிரம் வெள்ளிக்காசு உம்மிடமே இருக்கட்டும்; இருநூறு காசும் பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
|
14. "என் காதலரே! விரைந்து ஓடிடுக; கலைமான் அல்லது மரைமான் குட்டிபோல நறுமணம் நிறைந்த மலைகளுக்கு விரைந்திடுக!"
|