1. உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; கடவுளே, உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; உமது பெயரைப் போற்றுகின்றோம்; உம் வியத்தகு செயல்களை எடுத்துரைக்கின்றோம்.
|
3. உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும் நிலைகுலைந்து போகலாம்; ஆனால், நான் அதன் தூண்களை உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)
|
4. வீண் பெருமை கொள்வோரிடம், 'வீண் பெருமை கொள்ள வேண்டாம்' எனவும் பொல்லாரிடம், 'உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;
|
5. உங்கள் ஆற்றலைச் சிறிதளவும் காட்டிக்கொள்ள வேண்டாம்; தலையை ஆட்டி இறுமாப்புடன் பேச வேண்டாம்;' எனவும் சொல்வேன்.
|
7. ஆனால், கடவுளிடமிருந்தே தீர்ப்பு வரும்; அவரே ஒருவரைத் தாழ்த்துகின்றார்; இன்னொருவரை உயர்த்துகின்றார்.
|
8. ஏனெனில், மதிமயக்கும் மருந்து கலந்த திராட்சை மது பொங்கிவழியும் ஒரு பாத்திரம் ஆண்டவர் கையில் இருக்கின்றது; அதிலிருந்து அவர் மதுவை ஊற்றுவார்; உலகிலுள்ள பொல்லார் அனைவரும் அதை முற்றிலும் உறிஞ்சிக் குடித்துவிடுவர்.
|