1. ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும்.
|
2. ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள் வலுவிழந்து போயின.
|
6. பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது.
|
8. தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவி சாய்த்து விட்டார்.
|
10. என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
|