3. என்னைத் துரத்திவரும் எதிரிகளைத் தடுத்து நிறுத்தும்; ஈட்டியையும் வேலையும் கையிலெடும்; 'நானே உன் மீட்பர்' என்று என் உள்ளத்திற்குச் சொல்லும்.
|
4. என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்; மானக்கேடுற்று இழிவடையட்டும்; எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர், புறமுதுகிட்டு ஓடட்டும்.
|
8. அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்; அவர்களுக்கு வைத்த கண்ணியில் அவர்களே சிக்கக்கொள்ளட்டும்; அவர்கள் தோண்டிய குழியில் அவர்களே விழட்டும்.
|
10. ";ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே" என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.
|
11. பொய்ச்சான்று சொல்வோர் எனக்கெதிராய் எழுகின்றனர்; எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி என்னிடம் வினவுகின்றனர்.
|
12. நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்; அவர்களோ, அதற்குப் பதிலாக எனக்குத் தீங்கிழைத்தனர். என் நெஞ்சைத் துயரில் ஆழத்தினர்.
|
13. நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது சாக்கு உடுத்திக் கொண்டேன்; நோன்பிருந்து என்னை வருத்திக் கொண்டேன்; முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.
|
14. நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும் அவர்களுக்காய் மன்றாடினேன்; தாய்க்காகத் துக்கம் கொண்டாடுவோரைப்போல வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.
|
15. நான் தடுக்கி விழுந்தபோது அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்; எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்; யாதொன்றும் அறியாத என்னைச் சின்னாபின்னமாக்கி ஓயாது பழித்துரைத்தனர்.
|
16. இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து அவர்கள் என்னை இகழ்ந்தனர்; எள்ளி நகையாடினர்; என்னைப் பார்த்துப் பற்களை நறநறவென்று கடித்தனர்.
|
17. என் தலைவரே, இன்னும் எத்தனை நாள் இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?; என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும் என் ஆருயிரைச் சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.
|
19. வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர்.
|
20. ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர்.
|
24. என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்!
|
25. அவர்கள் தங்கள் உள்ளத்தில் "ஆம், நாம் விரும்பினது இதுவே" எனச் சொல்லாதபடி பாரும்! "அவனை விழுங்கிவிட்டோம்" எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும் !
|
26. எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்!
|
27. என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்; "ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர்" என்று எப்பொழுதும் சொல்லட்டும்.
|