3. அவர்கள் பாம்பெனத் தம் நாவைக் கூர்மையாக்கிக்கொள்கின்றனர்; அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)
|
4. ஆண்டவரே! தீயோரின்; கையினின்று என்னைக் காத்தருளும்; கொடுமை செய்வோரிடமிருந்து என்னைப் பாதுகாத்தருளும்; அவர்கள் என் காலை வாரிவிடப் பார்க்கின்றார்கள்.
|
5. செருக்குற்றோர் எனக்கெனக் கண்ணியை மறைவாக வைக்கின்றனர்; தம் கயிறுகளால் எனக்கு சுருக்கு வைக்கின்றனர்;
|
6. நானோ ஆண்டவரை நோக்கி இவ்வாறு வேண்டினேன்; நீரே என் இறைவன்! ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.
|
7. என் தலைவராகிய ஆண்டவரே! எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே! போர் நடந்த நாளில் என் தலையை மறைத்துக் காத்தீர்!
|
8. ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை நிறைவேற்றாதேயும்; அவர்களின் சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும். இல்லையெனில், அவர்கள் ஆணவம் கொள்வார்கள். (சேலா)
|
9. என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன் நடக்கின்றார்கள்; அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை அவர்கள்மேலே விழுவதாக!
|
11. புறங்கூறும் நாவுடையோர் உலகில் நிலைத்து வாழாதிருப்பராக! வன்செயல் செய்வாரைத் தீமை விரட்டி வேட்டையாடுவதாக!
|
13. மெய்யாகவே, நீதிமான்கள் உமது பெயருக்கு நன்றி செலுத்துவார்கள்; நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.
|