தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. எலிகூ தொடர்ந்து பேசலானான்;
2. சற்றுப் பொறும்; காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.
3. தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்; எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.
4. ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்; அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.
5. இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.
6. கொடியவரை அவர் வாழவிடார்; ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;
7. நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்; அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்; என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.
8. ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,
9. அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.
10. அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்; தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.
11. அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.
12. செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்றி; அவர்கள் அழிந்துபோவர்.
13. தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்; அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.
14. அவர்கள் இளமையில் மடிவர்; காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.
15. துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்; வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.
16. இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்; ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.
17. பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது; தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.
18. வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்; நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.
19. உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?
20. இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.
21. துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
22. இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்; அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?
23. அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு 'நீர் வழிதவறினிர்" எனச் சொல்ல வல்லவர் யார்?
24. அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.
25. மனித இனம் முழுவதும் அதைக் கண்டது; மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.
26. இதோ! இறைவன் பெருமை மிக்கவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்; அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை; கணக்கிட முடியாதவை.
27. நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.
28. முகில்கள் அவற்றைப் பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.
29. பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?
30. இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.
31. இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்; அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.
32. மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்; இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.
33. இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்; புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 36 of Total Chapters 42
யோபு 36:23
1. எலிகூ தொடர்ந்து பேசலானான்;
2. சற்றுப் பொறும்; காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய் நான் கூற வேண்டியவற்றை.
3. தொலையிலிருந்து என் அறிவைக் கொணர்வேன்; எனை உண்டாக்கியவர்க்கு நேர்மையை உரித்தாக்குவேன்.
4. ஏனெனில், மெய்யாகவே பொய்யன்று என் சொற்கள்; அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.
5. இதோ! இறைவன் வல்லவர்; எவரையும் புறக்கணியார்; அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.
6. கொடியவரை அவர் வாழவிடார்; ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;
7. நேர்மையாளர்மீது கொண்ட பார்வையை அகற்றார்; அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்; என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.
8. ஆனால் அவர்கள் சங்கிலியால் கட்டுண்டாரெனில், வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,
9. அவர்கள் செய்ததையும் மீறியதையும், இறுமாப்புடன் நடந்ததையும் எடுத்து இயம்புவார்.
10. அறிவுரைகளுக்கு அவர்கள் செவியைத் திறப்பார்; தீச்செயலிலிருந்து திரும்புமாறு ஆணையிடுவார்.
11. அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால், வளமாய்த் தங்கள் நாள்களையும் இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.
12. செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர். அறிவின்றி; அவர்கள் அழிந்துபோவர்.
13. தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்; அவர்களை அவர் கட்டிப்போடுகையில் உதவிக்காகக் கதறமாட்டார்.
14. அவர்கள் இளமையில் மடிவர்; காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.
15. துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்; வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.
16. இடுக்கண் வாயினின்று உங்களை இழுத்துக் காத்தார்; ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார். உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.
17. பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது; தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.
18. வளமையால் வழிபிறழாமல் பார்த்துக்கொள்ளும்; நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.
19. உம் நிறைந்த செல்வமும் வல்லமையின் முழு ஆற்றலும் இன்னலில் உமக்கு உதவுமா?
20. இருந்த இடத்திலேயே மக்கள் மடியும் இரவுக்காக ஏங்காதீர்.
21. துன்பத்தைவிட தீச்செயலையே நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.
22. இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்; அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?
23. அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்? அவர்க்கு 'நீர் வழிதவறினிர்" எனச் சொல்ல வல்லவர் யார்?
24. அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும். மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.
25. மனித இனம் முழுவதும் அதைக் கண்டது; மனிதன் தொலையிலிருந்தே அதை நோக்குவான்.
26. இதோ! இறைவன் பெருமை மிக்கவர்; நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்; அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை; கணக்கிட முடியாதவை.
27. நீர்த்துளிகளை அவர் ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.
28. முகில்கள் அவற்றைப் பொழிகின்றன; மாந்தர்மேல் அவற்றை மிகுதியாகப் பெய்கின்றன.
29. பரவும் முகில்களையும் அவர்தம் மணிப்பந்தலின் ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?
30. இதோ! தம்மைச் சுற்றி மின்னல் ஒளிரச் செய்கின்றார். கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.
31. இவற்றால், மக்களினங்கள்மீது தீர்ப்பளிக்கின்றார்; அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.
32. மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்; இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.
33. இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்; புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.
Total 42 Chapters, Current Chapter 36 of Total Chapters 42
×

Alert

×

tamil Letters Keypad References