6. நான் நேர்மையாக இருந்தும் என்னைப் பொய்யனாக்கினார்; நான் குற்றமில்லாதிருந்தும் என் புண் ஆறாததாயிற்று.'
|
9. ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்; 'கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால் எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.'
|
10. ஆகையால், அறிந்துணரும் உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்! தீங்கிழைப்பது இறைவனுக்கும், தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும் தொலைவாய் இருப்பதாக!
|
11. ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப அவர் கைம்மாறு செய்கின்றார்; அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.
|
14. அவர்தம் ஆவியைத் தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால், தம் உயிர் மூச்சை மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,
|
17. உண்மையில், நீதியை வெறுப்பவரால் ஆட்சி செய்ய இயலுமா? வாய்மையும் வல்லமையும் உடையவரை நீர் பழிப்பீரோ?
|
19. அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய் நடத்த மாட்டார்; ஏழைகளை விடச் செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்; ஏனெனில், அவர்கள் அனைவரும் அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?
|
20. நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்; நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்; ஆற்றல் மிக்காரும் மனித உதவியின்றி அகற்றப்படுவர்.
|
27. ஏனெனில், அவரைப் பின்பற்றாமல் அவர்கள் விலகினர்; அவர்தம் நெறியனைத்தையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை;
|
29. அவர் பேசாதிருந்தால், யார் அவரைக் குறைகூற முடியும்? அவர்தம்முகத்தை மறைத்துக் கொண்டால், யார்தான் அவரைக் காணமுடியும்? நாட்டையும் தனி மனிதரையும் அவரே கண்காணிக்கின்றார்.
|
31. எவராவது இறைவனிடம் இவ்வாறு கேட்பதுண்டா; 'நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்; இனி நான் தவறு செய்யமாட்டேன்.
|
33. நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது, கடவுள் உம் கருத்துக்கேற்ப கைம்மாறு வழங்கவேண்டுமா? நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்; நான் அல்ல; ஆகையால் உமக்குத் தெரிந்ததைக் கூறும்.
|
37. யோபு தாம் பாவம் செய்ததோடு கிளர்ச்சியும் செய்கின்றார்; ஏளனமாய் நம்மிடையே அவர் கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.
|