1. யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள்.
|
3. யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை.
|
6. ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ பேசத் தொடங்கினான்; நான் வயதில் சிறியவன்; நீங்களோ பெரியவர். ஆகவே, என் கருத்தை உங்களிடம் உரைக்கத் தயங்கினேன்; அஞ்சினேன்.
|
8. ஆனால், உண்மையில் எல்லாம் வல்லவரின் மூச்சே, மனிதரில் இருக்கும் அந்த ஆவியே உய்த்துணர்வை அளிக்கின்றது.
|
11. இதோ! உம் சொற்களுக்காகக் காத்திருந்தேன், நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை, அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.
|
12. உங்களைக் கவனித்துக் கேட்டேன்; உங்களுள் எவரும் யோபின் கூற்று தவறென எண்பிக்கவில்லை. அவர் சொற்களுக்கு தக்க பதில் அளிக்கவுமில்லை.
|
13. எச்சரிக்கை! 'நாங்கள் ஞானத்தைக் கண்டு கொண்டோம்; இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்; மனிதரால் முடியாது' என்று சொல்லாதீர்கள்!
|
16. அவர்கள் பேசவில்லை; நின்று கொண்டிருந்தாலும் பதில் சொல்லவில்லை; நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?
|
19. இதோ! என் நெஞ்சம் அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது; வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.
|