தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
யோபு
1. வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3. மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4. மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.
5. மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6. நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்; பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7. அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது; கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8. வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை; சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9. கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.
10. பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.
11. ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்; மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12. ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13. மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14. 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்; 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15. தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16. ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17. பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18. மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19. எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20. அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21. வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
22. படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
23. அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24. ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25. காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
26. மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27. அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28. அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 42 Chapters, Current Chapter 28 of Total Chapters 42
யோபு 28:13
1. வெள்ளிக்கு விளைநிலம் உண்டு; பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.
2. மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது; கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.
3. மனிதர் இருளுக்கு இறுதி கண்டு, எட்டின மட்டும் தோண்டி, இருட்டிலும் சாவின் இருளிலும் கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.
4. மக்கள் குடியிருப்புக்குத் தொலையில் சுரங்கத்தைத் தோண்டுவர்; வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்; மனிதரிடமிருந்து கீழே இறங்கி ஊசலாடி வேலை செய்வர்.
5. மேலே நிலத்தில் உணவு விளைகின்றது; கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.
6. நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்; பொன்துகளும் அதில் கிடைக்கும்.
7. அதற்குச் செல்லும் பாதையை, ஊன் உண்ணும் பறவையும் அறியாது; கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.
8. வீறுகொண்ட விலங்குகள் அதன் மேல் சென்றதில்லை; சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.
9. கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்; மலைகளின் அடித்தளத்தையே பெயர்த்துப் புரட்டிடுவர்.
10. பாறைகள் நடுவே சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்; விலையுயர் பொருளையே அவர்களது கண் தேடும்.
11. ஒழுகும் ஊற்றுகளைத் தடுத்து நிறுத்துகின்றனர்; மறைவாய் இருப்பதை ஒளிக்குக் கொணர்கின்றனர்.
12. ஆனால், ஞானம் எங்கே கண்டெடுக்கப்படும்? அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?
13. மனிதர் அதன் மதிப்பை உணரார்; வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.
14. 'என்னுள் இல்லை' என உரைக்கும் ஆழ்கடல்; 'என்னிடம் இல்லை' என இயம்பும் பெருங்கடல்.
15. தங்கத்தைக் கொடுத்து அதைப் பெறமுடியாது; வெள்ளியால் அதன் விலையை நிறுக்க இயலாது.
16. ஓபீர்த் தங்கமும் கோமேதகமும் அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!
17. பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா; பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.
18. மணியும் பவளமும் அதற்கு இணையில்லை; மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.
19. எத்தியோப்பிய புட்பராகம் அதற்கு இணையல்ல; பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.
20. அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்? எங்குள்ளது அறிவின் உறைவிடம்?
21. வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும் ஒளிந்துள்ளது; வானத்துப் பறவைகளுக்கும் மறைவாய் உள்ளது.
22. படுகுழியும் சாவும் பகர்கின்றன; அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;
23. அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்; அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!
24. ஏனெனில், வையகத்தின் எல்லை வரை அவர் காண்கின்றார்; வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.
25. காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது, நீரினை அளவையால் அளந்தபோது,
26. மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது, இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,
27. அவர் ஞானத்தைக் கண்டார்; அதைப்பற்றி அறிவித்தார்; அதை நிலைநாட்டினார்; இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.
28. அவர் மானிடர்க்குக் கூறினார்; ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்; தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.
Total 42 Chapters, Current Chapter 28 of Total Chapters 42
×

Alert

×

tamil Letters Keypad References