3. நீர் நேர்மையாக இருப்பது எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா? நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது அவர்க்கு நன்மை பயக்குமா?
|
6. ஏனெனில், அற்பமானவற்றுக்கும் உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்; ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!
|
12. உயரத்தே விண்ணகத்தில் கடவுள் இல்லையா? வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்! அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!
|
13. ஆனால், நீர் சொல்கின்றீர்; 'இறைவனுக்கு என்ன தெரியும்? கார்முகிலை ஊடுருவிப் பார்த்து அவரால் தீர்ப்பிட முடியுமா?
|
17. அவர்கள் இறைவனிடம், 'எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர் எங்களுக்கு என்ன செய்ய முடியும்?' என்பர்.
|
18. இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை நம்மையினால் நிரப்பினார்; எனினும், தீயவரின் திட்டம் எனக்குத் தொலைவாயிருப்பதாக!
|
23. நீர் எல்லாம் வல்லவரிடம் திரும்பி வருவீராகில், நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!
|
26. அப்போது எல்லாம் வல்லவரில் நீர் நம்பிக்கை கொள்வீர். கடவுளைப் பார்த்து உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.
|