4. என்னைப் பொறுத்த மட்டில், நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா? இல்லையேல் நான் ஏன் பொறுமை இழக்கக்கூடாது?
|
8. அவர்களின் வழிமரபினர் அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்; அவர்களின் வழித்தோன்றல்கள் அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.
|
10. அவர்களின் காளைகள் பொலிகின்றன. ஆனால் பிசகுவதில்லை; அவர்களின் பசுக்கள் கருவுறும்; ஆனால் கரு கலைவதில்லை.
|
14. அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்; 'எம்மை விட்டு அகலும்; ஏனெனில், உமது வழிகளை அறிந்து கொள்ள நாங்கள் விரும்பவில்லை;'
|
17. எத்தனைமுறை தீயோரின் ஒளி அணைகின்றது? அழிவு அவர்கள்மேல் வருகின்றது? கடவுள் தம் சீற்றத்தில் வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.
|
19. அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின் பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்? அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்; அவர்களும் அதை உணர்வர்.
|
20. அவர்களின் அழிவை அவர்களின் கண்களே காணட்டும்; எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை அவர்கள் குடிக்கட்டும்.
|
28. ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்; 'கொடுங்கோலனின் இல்லம் எங்கே? கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?'
|
31. யார் அவர்களின் முகத்துக்கு எதிரே அவர்களின் போக்கை உரைப்பார்? யார் அவர்களின் செயலுக்கேற்பக் கொடுப்பார்?
|
33. பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு இனிமையாய் இருக்கும்; மாந்தர் அனைவரும் அவர்களைப் பின்தொடர்வர்; அவர்களின் முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.
|