3. என்னை வெட்கமடையச் செய்யும் குத்தல்மொழி கேட்டேன்; நான் புரிந்து கொண்டதிலிருந்து விடை அளிக்க மனம் என்னை உந்துகிறது.
|
7. அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று என்றைக்கும் ஒழிந்திடுவர்; அவர்களைக் கண்டவர், எங்கே அவர்கள்? என்பர்.
|
10. ஏழைகளின் தயவை அவர்களின் குழந்தைகள் நாடுவர்; அவர்களின் கைகளே அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.
|
15. செல்வத்தை விழுங்கினர்; அதை அவர்களே கக்குவர்; இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து அதை வெளியேற்றுவார்.
|
18. தங்களின் உழைப்பின் பயனை அவர்கள் திரும்ப அளிப்பர்; அதை அவர்கள் உண்ணமாட்டார்; வணிகத்தின் வருவாயில் இன்புறார்.
|
19. ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி, இல்லாதவராக்கினர்; தாங்கள் கட்டாத வீட்டை அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.
|
23. அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது, இறைவன் தம் கோபக்கனலை அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.
|
25. அவர்கள் அதைப் பின்புறமாக இழப்பர்; மின்னும் முனை பிச்சியிலிருந்து வெளிவரும்; அச்சம் அவர்கள் மேல் விழும்.
|
26. காரிருள் அவர்களது கருவ+லத்திற்குக் காத்திருக்கும்; மூட்டாத தீ அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின் கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.
|