5. எனக்கு எதிராய் நீங்களே உங்களைப் பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில், என் இழிநிலையை எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,
|
6. கடவுள்தான் என்னை நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும், வலைவீசி என்னை வளைத்தார் என்றும் அறிந்துகொள்க!
|
10. எல்லாப் பக்கமும் என்னை இடித்துக் தகர்த்தார்; நான் தொலைந்தேன்; மரம்போலும் என் நம்பிக்கையை வேரோடு பிடுங்கினார்.
|
12. அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன; அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்; என் கூடாரத்தைச் சுற்றிப் பாசறை அமைத்தனர்.
|
15. என் வீட்டு விருந்தினரும் என் பணிப்பெண்களும் என்னை அன்னியனாகக் கருதினர்; அவர்கள் கண்களுக்குமுன் நான் அயலானானேன்.
|
19. என் உயிர் நண்பர் எல்லாரும் என்னை வெறுத்தனர்; என் அன்புக்குரியவராய் இருந்தோரும் எனக்கெதிராக மாறினர்.
|
21. என் மேல் இரங்குங்கள்; என் நண்பர்காள்! என் மேல் இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில் கடவுளின் கை என்னைத் தண்டித்தது.
|
27. நானே, அவர் என் பக்கத்தில் நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்; வேறு கண்கள் அல்ல; என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.
|
28. ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்; 'அவனை எப்படி நாம் வதைப்பது? அவனிடம் அடிப்படைக் காரணத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?'
|
29. மாறாக-வாளுக்கு நீங்களே அஞ்சவேண்டும்; ஏனெனில், சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்; அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை அறிந்துகொள்வீர்கள்.
|