5. அவர்களுடைய நாள்கள் உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை உம்மிடம் உள்ளது; அவர்கள் கடக்க இயலாத எல்லையைக் குறித்தீர்.
|
6. எனவே அவர்களிடமிருந்து உம் பார்வையைத் திருப்பும்; அப்பொழுது, கூலியாள்கள் தம் நாள் முடிவில் இருப்பது போல், அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.
|
7. மரத்திற்காவது நம்பிக்கையுண்டு; அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்; அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.
|
12. மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்; வானங்கள் அழியும்வரை அவர்கள் எழுவதில்லை; அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.
|
13. ஓ! என்னைப் பாதாளத்தில் ஒளித்து வைக்கமாட்டீரா? உமது சீற்றம் தணியும்வரை மறைத்து வைக்கமாட்டீரா? என்னை நினைக்க ஒருநேரம் குறிக்கமாட்டீரா?
|
14. மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா? எனக்கு விடிவு வரும்வரை, என் போராட்ட நாள்களெல்லாம் பொறுத்திருப்பேன்.
|
19. கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்; நிலத்தின் மண்ணை வெள்ளம் அடித்துப்போகும்; இவ்வாறே ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.
|
20. ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்; ஒழிந்துபோவான் அவனும்; அவனது முகத்தை உருக்குலைத்து, விரட்டியடிப்பீர்.
|