1. பென்யமின் மக்களே! எருசலேமிலிருந்து தப்பியோடுங்கள்; தெக்கோவாவில் எக்காளம் ஊதுங்கள்; பேத்தக்கரேமில் தீப்பந்தம் ஏற்றுங்கள்; ஏனெனில் வடக்கிலிருந்து தீமையும் பேரழிவும் வருகின்றன.
|
3. ஆயர்கள் தங்கள் மந்தையோடு அவளிடம் வருவார்கள்; அவளைச் சுற்றிலும் கூடாரங்கள் அடிப்பார்கள்; அவரவர்தம் இடத்தில் மேய்ப்பார்கள்.
|
4. "அவளுக்கு எதிராய்ப் போருக்குத் தயாராகுங்கள்; எழுந்திருங்கள்; நண்பகலில் எதிர்த்துச் செல்வோம்; ஐயோ! பொழுது சாய்கின்றதே! மாலை நேரத்து நிழல்கள் நீள்கின்றனவே!
|
6. படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; அவளுடைய மரங்களை வெட்டுங்கள்; எருசலேமுக்கு எதிராக முற்றுகைத் தளம் எழுப்புங்கள்; அவள் தண்டிக்கப்படவேண்டிய நகர்; அவளிடம் காணப்படுவது அனைத்தும் கொடுமையே.
|
7. கேணியில் நீர் சுரந்து கொண்டிருப்பது போல் அவள் தீமைகளைச் சுரந்து கொண்டிருக்கின்றாள். வன்முறை, அழிவு என்பதே அவளிடம் எழும் குரல்; நோயும் காயமுமே என்றும் என் கண்முன் உள்ளன.
|
8. எருசலேமே, எச்சரிக்கையாய் இரு; இல்லையேல், நான் உன்னைவிட்டு அகன்று போவேன்; உன்னை மனிதர் வாழாப் பாழ்நிலம் ஆக்குவேன்.
|
9. படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; திராட்சைக் கொடிகளில் தப்புப் பழங்களை ஒன்றும் விடாது பறித்துச் சேர்ப்பது போல, இஸ்ரயேலில் எஞ்சியிருப்பதைக் கூட்டிச்சேர். திராட்சைத் தோட்டக்காரரைப்போல் கிளைகளிடையே உன் கையை விட்டுப் பார்.
|
10. நான் யாரிடம் பேசுவேன்? யாருக்கு எச்சரிக்கை விடுப்பேன்? யார் செவி கொடுப்பார்? அவர்கள் காதுகள் திறக்கப்படவில்லை; அவர்களால் செவிகொடுக்க முடியாது; ஆண்டவரின் வாக்கு அவர்களுக்குப் பழிச்சொல் ஆயிற்று; அவர்கள் அதில் இன்பம் காண்பதில்லை.
|
11. ஆண்டவரின் சீற்றம் என்னில் நிறைந்துள்ளது; அதனை அடக்கிச் சோர்ந்து போனேன்; ஆண்டவர் கூறுவது; தெருவில் இருக்கும் சிறுவர்கள்மேலும் ஒன்றாய்க் கூடியுள்ள இளைஞர்கள் மேலும் சினத்தைக் கொட்டு. கணவனும் மனைவியும், முதியோரும் வயது நிறைந்தோறும் பிடிபடுவர்.
|
12. அவர்களுடைய வீடுகளையும் நிலங்களையும்; மனைவியரையும் பிறர் கைப்பற்றுவர்; ஏனெனில், நாட்டில் குடியிருப்போருக்கு எதிராய் என் கையை நீட்டப்போகிறேன்.
|
13. ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள்; இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
|
14. அமைதியே இல்லாதபொழுது, "அமைதி, அமைதி" என்று கூறி என் மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
|
15. அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கமடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கமடையவில்லை; நாணம் என்பதே என்னவென்று அவர்களுக்குத் தெரியாது; எனவே, மடிந்து வீழ்ந்தவர்களோடு அவர்களும் வீழ்வர்; நான் அவர்களைத் தண்டிக்கும்போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.
|
16. ஆண்டவர் கூறுவது இதுவே; சாலைச் சந்திப்பில் நின்று நோக்குங்கள்; தொன்மையான பாதைகள் எவை? நல்ல வழி எது? என்று கேளுங்கள்; அதில் செல்லுங்கள். அப்போது உங்களுக்கு அமைதி கிடைக்கும். அவர்களோ, "அவ்வழியே செல்ல மாட்டோம்" என்றார்கள்.
|
17. நான் உங்களுக்குக் காவலரை நியமித்தேன். "எக்காளக் குரலுக்குச் செவி கொடுங்கள்" என்றேன். அவர்களோ, "செவிசொடுக்க மாட்டோம்" என்றார்கள்.
|
19. நிலமே, நீயும் கேள்; இதோ! இம்மக்கள்மேல் தீமை வரச்செய்வேன். அவர்களின் தீய எண்ணங்களின் விளைவே இத்தீமை. ஏனெனில், அவர்கள் என் சொற்களுக்குச் செவிசாய்க்கவில்லை; என் சட்டத்தைப் புறக்கணித்தார்கள்.
|
20. சேபா நாட்டுத் தூபமும் தூரத்து நாட்டு நறுமண நாணலும் எனக்கு எதற்கு? உங்கள் எரிபலிகள் எனக்கு ஏற்புடையவை அல்ல. உங்களின் மற்றைய பலிகளும் எனக்கு உவகை தருவதில்லை.
|
21. ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ இம் மக்களுக்கு எதிராகத் தடைக்கற்களை வைக்கப்போகிறேன். தந்தையரும் தனயரும் ஒன்றாகத் தடுக்கி விழுவர்; அடுத்திருப்பாரும் நண்பரும் அழிந்து போவர்.
|
22. ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ! வடக்கு நாட்டினின்று ஓர் இனம் வருகின்றது; மண்ணுலகின் கடை எல்லைகளினின்று பெரிய நாடு ஒன்று கிளர்ந்து எழுகின்றது.
|
23. அவர்கள் வில்லும் ஈட்டியும் ஏந்தியுள்ளார்கள்; அவர்கள் கொடியவர்; இரக்கமற்றவர்; அவர்களின் ஆரவாரம் கடலின் இரைச்சலைப் போன்றது; மகளே சீயோன்! அவர்கள் போருக்கு அணிவகுத்து குதிரைகள் மீது வருகின்றார்கள்; சவாரி செய்துகொண்டு உனக்கெதிராய் வருகின்றார்கள்;
|
24. "அவர்களைப் பற்றிய செய்தியை நாம் கேள்வியுற்றபோது நம் கைகள் தளர்ந்து போயின; கடுந்துயர் நம்மை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்ணைப் போல் நாம் தவிக்கின்றோம்.
|
25. வயல்வெளிக்குப் போகவேண்டாம்; சாலைகளில் செல்ல வேண்டாம்; ஏனெனில், எதிரியின் வாள் எங்கும் உள்ளது; சுற்றிலும் ஒரே திகில்.
|
26. மகளாகிய என் மக்களே! சாக்கு உடை உடுத்துங்கள்; சாம்பலில் புரளுங்கள்; இறந்த ஒரே பிள்ளைக்காகத் துயருற்று அழுவது போல், மனமுடைந்து அழுது புலம்புங்கள். ஏனெனில், அழிப்பவன் திடீரென நமக்கெதிராய் வருவான். "
|
27. நான் உன்னை என் மக்களுக்குள் மதிப்பீடு செய்பவனாகவும், ஆய்வாளனாகவும் ஏற்படுத்தினேன்; நீ அவர்களின் வழிகளை அறிந்து மதிப்பீடு செய்வாய்.
|
28. அவர்கள் எல்லாரும் அடங்காத கலகக்காரர்கள்; பொல்லாங்கு பேசும் ஊர்சுற்றிகள்; அவர்கள் யாவரும் வெண்கலத்தையும் இரும்பையும் போன்றவர்கள்; அவர்களின் செயல்கள் கறைபட்டவை.
|
29. துருத்திகள் தொடர்ந்து ஊதுகின்றன; காரீயம் நெருப்பில் எரித்தழிக்கப்பட்டது. தூய்மைப்படுத்தும் வேலை தொடர்ந்து நடப்பதில் பயனில்லை; ஏனெனில், தீயவர்கள் இன்னும் நீக்கப்படவில்லை.
|
30. அவர்கள் "தள்ளுபடியான வெள்ளி" என்று அழைக்கப்படுவார்கள். ஏனெனில், ஆண்டவர் அவர்களைப் புறக்கணித்துள்ளார்.
|