1. {எருசலேமின் வீழ்ச்சி}PS QS ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS பாபிலோனுக்கும் கல்தேயாவின்QEQS குடிகளுக்கும் எதிராகQEQS அழிவுக் காற்றை எழுப்பி விடுவேன்.QEQS
|
2. 2. புடைப்போரைப்QEQS பாபிலோனுக்கு அனுப்பிவைப்பேன்;QEQS அவர்கள் அதைச் சலித்தெடுப்பார்கள்;QEQS தண்டனை நாளில் அவர்கள்QEQS எப்பக்கத்தினின்றும்QEQS அதற்கு எதிராக எழுந்து வருவார்கள்;QEQS அந்த நாட்டை வெறுமையாக்குவார்கள்.QEQS
|
3. 3. வில்வீரன் வில்லைQEQS நாணேற்ற விடாதீர்கள்!QEQS தன் கவசத்தைQEQS அணிந்து நிற்க விடாதீர்கள்!QEQS அதன் இளைஞர்கள் யாரையும்QEQS விட்டுவைக்காதீர்கள்QEQS அதன் படையை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.QEQS
|
4. 4. கொலையுண்டோர் கல்தேயரின் நாட்டில்QEQS வீழ்ந்து கிடப்பர்.QEQS காயமடைந்தோர்QEQS அதன் தெருக்களில் கிடப்பர்.QEQS
|
5. 5. தங்கள் கடவுளாகியQEQS படைகளின் ஆண்டவர்QEQS இஸ்ரயேலையும் யூதாவையும்QEQS கைவிட்டுவிடவில்லை.QEQS இஸ்ரயேலின் தூயவருக்கு எதிராகக்QEQS கல்தேயரின் நாடுQEQS குற்றங்களால் நிறைந்துள்ளது.QEQS
|
6. 6. பாபிலோன் நடுவினின்றுQEQS தப்பியோடுங்கள்;QEQS ஒவ்வொருவரும் தம் உயிரைக்QEQS காத்துக்கொள்ளட்டும்;QEQS அதன் குற்றங்களுக்காகQEQS நீங்கள் அழிந்து போகாதீர்கள்;QEQS இது ஆண்டவர் பழிவாங்கும் காலம்,QEQS அவரே அதற்குத்QEQS தகுந்த தண்டனை வழங்குவார்;QEQS
|
7. 7. பாபிலோன் ஆண்டவரின் கையில்QEQS பொற்கிண்ணம்போல் இருந்தது;QEQS அது மண்ணுலகு முழுவதற்கும்QEQS போதை ஊட்டியது;QEQS மக்களினங்கள் அதன்QEQS திராட்சை இரசத்தைப் பருகின;QEQS நாடுகள் வெறிகொண்டன.QEQS
|
8. 8. பாபிலோன் திடீரென்றுQEQS விழுந்து நொறுங்கிற்று;QEQS அதற்காகப் புலம்பியழுங்கள்;QEQS அதன் காயத்துக்குQEQS மருந்து கொண்டு வாருங்கள்;QEQS ஒருவேளை அது நலம் பெறலாம்!QEQS
|
9. 9. நாங்கள் பாபிலோனைக்QEQS குணப்படுத்த முயன்றோம்;QEQS அதுவோ நலம் அடைவதாயில்லை!QEQS அதைக் கைவிட்டுவிடுங்கள்;QEQS நாம் ஒவ்வொருவரும்QEQS நம் சொந்த நாட்டுக்குப் போவோம்;QEQS பாபிலோனுக்குரிய தண்டனைத் தீர்ப்புQEQS விண்ணுலகை எட்டியுள்ளது;QEQS அது வானத்தைச் சென்றடைந்துள்ளது.QEQS
|
10. 10. ஆண்டவர் நமக்குQEQS நீதி வழங்கியுள்ளார்;QEQS வாருங்கள்! நம் கடவுளானQEQS ஆண்டவரின் செயலைச்QEQS சீயோனில் பறைசாற்றுவோம்.QEQS
|
11. 11. அம்புகளைக் கூர்மையாக்குங்கள்;QEQS கேடயங்களைக் கையிலெடுங்கள்;QEQS ஆண்டவர் மேதிய அரசர்களைக்QEQS கிளர்ந்தெழச் செய்துள்ளார்;QEQS பாபிலோனை அழிப்பதே அவரது திட்டம்;QEQS இவ்வாறு தம் கோவிலை முன்னிட்டுQEQS ஆண்டவர் பழிவாங்குவார்.QEQS
|
12. 12. பாபிலோன் மதில்கள்மேல்QEQS கொடியேற்றுங்கள்;QEQS காவலை வலுப்படுத்துங்கள்;QEQS இரவுக் காவலாளரை நிறுத்துங்கள்;QEQS கண்ணிகளைத் தயார் செய்யுங்கள்;QEQS பாபிலோனின் குடிகளுக்கு எதிராகQEQS ஆண்டவர் உரைத்திருந்ததைத்QEQS தமது திட்டப்படியே நிறைவேற்றுவார்.QEQS
|
13. 13. நீர்வளம் கொண்டவனே!QEQS செல்வம் மிகுந்தவனே!QEQS உனக்கு முடிவு வந்துவிட்டது;QEQS உன் வாழ்நாளின் இழைQEQS துண்டிக்கப்பட்டுவிட்டது.QEQS
|
14. 14. வெட்டுக்கிளிகளைப் போன்றுQEQS எண்ணற்ற மனிதரால் உன்னைத்QEQS திண்ணமாய் நிரப்புவேன்;QEQS அவர்கள் உனக்கு எதிராகQEQS வெற்றி முழக்கம் செய்வார்கள்,QEQS என்று படைகளின் ஆண்டவர்QEQS தம்மேல் ஆணையிட்டுக் கூறியுள்ளார்.QEQS
|
15. 15. அவரே தம் ஆற்றலால்QEQS மண்ணுலகைப் படைத்தார்QEQS ; தம் ஞானத்தால்QEQS பூவுலகை நிலைநாட்டினார்;QEQS தம் கூர்மதியால்QEQS விண்ணுலகை விரித்தார்.QEQS
|
16. 16. அவர் குரல் கொடுக்க,QEQS வானத்து நீர்த்திரள்QEQS முழக்கமிடுகின்றது;QEQS மண்ணுலகின் எல்லையினின்றுQEQS முகில்கள் எழச் செய்கின்றார்;QEQS மழை பொழியுமாறுQEQS மின்னல் வெட்டச் செய்கிறார்;QEQS தம் கிடங்குகளினின்றுQEQS காற்று வீசச்செய்கிறார்.QEQS
|
17. 17. மனிதர் யாவரும் மூடர்கள்,QEQS அறிவிலிகள்;QEQS கொல்லர் எல்லாரும்QEQS தம் சிலைகளால் இகழ்ச்சியுற்றனர்;QEQS அவர்களின் வார்ப்புப் படிமங்கள்QEQS பொய்யானவை;QEQS அவற்றிற்கு உயிர் மூச்சே இல்லை.QEQS
|
18. 18. அவை பயனற்றவை,QEQS ஏளனத்துக்குரிய வேலைப்பாடுகள்;QEQS தம் தண்டனையின் காலத்தில்QEQS அவை அழிந்துவிடும்.QEQS
|
19. 19. யாக்கோபின் பங்காய் இருப்பவரோQEQS இவற்றைப் போன்றவர் அல்லர்;QEQS அவரே அனைத்தையும் உருவாக்கியவர்;QEQS தம் உரிமைச் சொத்தாகிய இனத்தைQEQS உருவாக்கியவரும் அவரே;QEQS படைகளின் ஆண்டவர் என்பதுQEQS அவர் பெயராகும்.QEQS
|
20. 20. நீ என் சம்மட்டியும்QEQS படைக்கருவியும் ஆவாய்;QEQS நான் உன்னைக்கொண்டுQEQS மக்களினங்களை நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டுQEQS அரசுகளை அழித்தொழிப்பேன்.QEQS
|
21. 21. உன்னைக்கொண்டு குதிரையையும்QEQS குதிரை வீரனையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு தேரையும்QEQS தேரோட்டியையும் நொறுக்குவேன்.QEQS
|
22. 22. உன்னைக்கொண்டு ஆணையும்QEQS பெண்ணையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு முதியோனையும்QEQS சிறுவனையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு இளைஞனையும்QEQS இளம்பெண்ணையும் நொறுக்குவேன்;QEQS
|
23. 23. உன்னைக்கொண்டு ஆயனையும்QEQS அவனது மந்தையையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு உழவனையும்QEQS அவன் காளைகளையும் நொறுக்குவேன்;QEQS உன்னைக்கொண்டு ஆளுநர்களையும்QEQS அதிகாரிகளையும் நொறுக்குவேன்;QEQS
|
24. 24. பாபிலோனும் கல்தேயாவின்QEQS குடிகள் எல்லாரும்QEQS சீயோனில் செய்த தீச்செயல்QEQS அனைத்தின் பொருட்டு,QEQS உங்கள் கண்முன்னால்QEQS அவர்களைப் பழிவாங்குவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
25. 25. அழிவைக் கொணரும் மலையே,QEQS மண்ணுலகு முழுவதையும் அழிப்பவனே,QEQS நான் உனக்கு எதிராய் இருப்பேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS நான் உனக்கு எதிராய்QEQS என் கையை நீட்டுவேன்;QEQS உன்னைப் பாறை முகடுகளினின்றுQEQS உருட்டிவிடுவேன்;QEQS உன்னை எரிந்துபோனQEQS மலை ஆக்குவேன்.QEQS
|
26. 26. மூலைக்கல் என்றோ, அடிக்கல் என்றோ,QEQS உன்னிடமிருந்து கல் எடுக்கப்படாது;QEQS நீ என்றும் பாழடைந்தே கிடப்பாய்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
27. 27. மண்ணுலகின்மேல் கொடி ஏற்றுங்கள்;QEQS மக்களினங்கள் நடுவில்QEQS எக்காளம் ஊதுங்கள்;QEQS அதனை எதிர்த்துப் போரிடQEQS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;QEQS அதனை எதிர்க்குமாறுQEQS அரராத்து, மின்னி, அஸ்கனாசுQEQS ஆகிய அரசுகளுக்குQEQS அழைப்பு விடுங்கள்;QEQS அதற்கு எதிராய்த்QEQS தானைத் தலைவனை ஏற்படுத்துங்கள்.QEQS வெட்டுக்கிளிக் கூட்டம்போல்QEQS குதிரைகளைக் கொணருங்கள்.QEQS
|
28. 28. அதனை எதிர்த்துப் போரிடQEQS மக்களினங்களைத் தயார் செய்யுங்கள்;QEQS மேதிய மன்னர்கள், ஆளுநர்கள்,QEQS அதிகாரிகளையும்QEQS அவர்களின் ஆட்சிக்கு உட்பட்டQEQS எல்லா நாடுகளையும் கூப்பிடுங்கள்.QEQS
|
29. 29. மண்ணுலகு நடுநடுங்கி,QEQS வேதனையால் பதைபதைக்கிறது;QEQS பாபிலோன் நாட்டைQEQS மக்கள் குடியிருப்பில்லாதQEQS பாழ்நிலம் ஆக்கும் பொருட்டுQEQS அதற்கு எதிராகQEQS ஆண்டவர் தீட்டியுள்ள திட்டங்கள்QEQS நிலைக்கும்.QEQS
|
30. 30. பாபிலோனின் படைவீரர்கள்QEQS போரிடுவதைக் கைவிட்டார்கள்;QEQS அவர்கள் தங்கள்QEQS கோட்டைகளுக்குள்ளேயேQEQS தங்கியிருக்கிறார்கள்;QEQS அவர்களின் வலிமைQEQS குன்றிப்போயிற்று.QEQS அவர்கள் பேடிகளாய் மாறிவிட்டார்கள்.QEQS அதன் உறைவிடங்கள் எரிந்துபோயின;QEQS அதன் தாழ்ப்பாள்கள் உடைந்து போயின.QEQS
|
31. 31. (31-32) ஓர் அஞ்சற்காரன்QEQS அடுத்த அஞ்சற்காரனைச்QEQS சந்திக்க ஓடுகின்றான்;QEQS ஒரு தூதன் அடுத்த தூதனைச்QEQS சந்திக்க ஓடுகின்றான்;QEQS “நகர் எல்லாப் பக்கங்களிலும்QEQS கைப்பற்றப்பட்டது;QEQS கடவுத் துறைகள் பிடிப்பட்டன;QEQS கோட்டை, கொத்தளங்கள்QEQS தீக்கிரையாயின;QEQS படைவீரர்கள் பீதியடைந்துள்ளனர்”, எனப்QEQS பாபிலோனிய மன்னனிடம் அறிவிக்கQEQS அவர்கள் ஓடுகிறார்கள்.QE
|
33. 33. இஸ்ரயேலின் கடவுளாகியQEQS படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS புணையடிக்கும் காலக் களத்துக்குQEQS மகள் பாபிலோன் ஒப்பாவாள்;QEQS இன்றும் சிறிது காலத்தில்QEQS அதன் அறுவடைக் காலம் வரும்.QEQS
|
34. 34. பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர்QEQS என்னை விழுங்கிவிட்டான்;QEQS அவன் என்னைக்QEQS கசக்கிப் பிழிந்து விட்டான்;QEQS வெறுமையான பாத்திரம்போல்QEQS என்னை ஆக்கிவிட்டான்;QEQS அரக்கன் போன்றுQEQS என்னை விழுங்கிவிட்டான்;QEQS என் அருஞ்சுவை உணவுகளால்QEQS தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான்.QEQS என்னைக் கொப்பளித்துத்QEQS துப்பிவிட்டான்.QEQS
|
35. 35. “எனக்கும் என் உறவினர்க்கும்QEQS இழைக்கப்பட்ட கொடுமைQEQS பாபிலோன் மேல் வரட்டும்” என்றுQEQS சீயோன் குடிகள் கூறட்டும்;QEQS “என் இரத்தப் பழிQEQS கல்தேயக் குடிகள்மீதுQEQS வந்துவிழட்டும்,” என்றுQEQS எருசலேம் சொல்லட்டும்.QEQS
|
36. 36. எனவே, ஆண்டவர்QEQS இவ்வாறு கூறுகிறார்:QEQS நானே உனக்காக வழக்காடுவேன்;QEQS உன் பொருட்டுப் பழிவாங்குவேன்;QEQS அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்;QEQS அதன் நீரூற்றுகள்QEQS காய்ந்துபோகச் செய்வேன்.QEQS
|
37. 37. பாபிலோன் பாழ்மேடு ஆகும்;QEQS குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும்.QEQS அது குடியிருப்பாரற்றுப்QEQS பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும்QEQS உள்ளாகும்.QEQS
|
38. 38. அவர்கள் சிங்கங்களைப்போல்QEQS சேர்ந்து கர்ச்சிப்பார்கள்;QEQS சிங்கக் குட்டிகளைப்போல் சீறுவார்கள்.QEQS
|
39. 39. அவர்கள் கொதித்தெழுந்தபொழுதுQEQS நான் அவர்களுக்குQEQS விருந்து அளிப்பேன்;QEQS அவர்கள் மயங்கி மகிழுமாறுQEQS போதையுறும்வரைQEQS குடிக்கச் செய்வேன்;QEQS அவர்கள் மீளாத் துயில் கொள்வார்கள்;QEQS துயில் எழவே மாட்டார்கள்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
40. 40. செம்மறிக்குட்டிகள்,QEQS ஆட்டுக்கிடாய்கள்,QEQS வெள்ளாட்டுக் கிடாய்களைப் போன்று,QEQS நான் அவர்களைக்QEQS கொலைக் களத்திற்குக்QEQS கொண்டுபோவேன்.QEQS
|
41. 41. சேசாக்கு இப்படிப்QEQS பிடிபட்டுப் போயிற்றே!QEQS மண்ணுலகு முழுவதன் சிறப்பிடம்QEQS இப்படிக் கைப்பற்றப் பட்டுவிட்டதே!QEQS மக்களினங்கள் நடுவே பாபிலோன்QEQS பாழடைந்துபோனது எவ்வாறு?QEQS
|
42. 42. கடலானது பாபிலோன்மீதுQEQS கொந்தளித்து வந்துள்ளது;QEQS ஆர்ப்பரிக்கும் அலைகளால்QEQS அது மூடப்பட்டுவிட்டது.QEQS
|
43. 43. அதன் நகர்கள் பாழடைந்துவிட்டன;QEQS அது வறண்ட பாலைநிலமாய்QEQS மாறிவிட்டது;QEQS அந்நாட்டில் குடியிருப்பார்QEQS யாரும் இல்லை;QEQS எவரும் அதனைக்QEQS கடந்து செல்லமாட்டார்.QEQS
|
44. 44. நான் பாபிலோனில்QEQS பேலைத் தண்டிப்பேன்;QEQS அது விழுங்கினதைQEQS அதன் வாயினின்று கக்கச்செய்வேன்;QEQS மக்களினங்கள் இனி ஒருபோதும்QEQS அங்குக் செல்லமாட்டா;QEQS பாபிலோன் மதிலும்QEQS தரைமட்டமாக்கப்படும்.QEQS
|
45. 45. என் மக்களே,QEQS அதனின்று வெளியேறுங்கள்;QEQS ஆண்டவரின் வெஞ்சினத்தினின்றுQEQS ஒவ்வொருவனும் தன் உயிரைக்QEQS காத்துக்கொள்ளட்டும்.QEQS
|
46. 46. உங்கள் உள்ளம் தளாரதிருக்கட்டும்;QEQS நாட்டில் உலவும் வதந்திகளைத் கேட்டுக்QEQS கலங்காதீர்கள்;QEQS ஓராண்டில் ஒரு வதந்தி உலவும்;QEQS மறு ஆண்டில்QEQS மற்றொரு வதந்தி உருவெடுக்கும்;QEQS நாட்டில் வன்முறை மலியும்;QEQS ஆளுநன் ஆளுநனுக்கு எதிராய்QEQS எழுவான்.QEQS
|
47. 47. எனவே நாள்கள் வருகின்றன.QEQS அப்பொழுது நான்QEQS பாபிலோன் சிலைகளைத் தண்டிப்பேன்.QEQS அந்த நாடு முழுவதும் சிறுமையுறும்;QEQS கொலையுண்டோர் அனைவரும்QEQS அதன் நடுவே வீழ்ந்துகிடப்பர்.QEQS
|
48. 48. விண்ணுலகும் மண்ணுலகும்QEQS அவற்றில் உள்ள அனைத்தும்QEQS பாபிலோனைக் குறித்துQEQS மகிழ்ச்சிக் குரல் எழுப்பும்;QEQS வடக்கினின்று “அழிப்போர்”QEQS அதை எதிர்த்து வருவர்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
49. 49. பாபிலோனை முன்னிட்டுQEQS மண்ணுலகு எங்கும்QEQS மக்கள் கொலையுண்டு வீழ்ந்தனர்;QEQS இஸ்ரயேலில்QEQS கொலையுண்டோரை முன்னிட்டுQEQS இப்போது பாபிலோன்QEQS வீழ்ச்சியுற வேண்டும்.QEQS
|
50. 50. வாளுக்குத் தப்பியவர்களே,QEQS போய்விடுங்கள், நிற்காதீர்கள்;QEQS தொலையிலிருந்துQEQS ஆண்டவரை நினைவுகூருங்கள்;QEQS உங்கள் இதயத்தில்QEQS எருசலேம் இடம்பெறட்டும்.QEQS
|
51. 51. பழிமொழி கேட்டதால்QEQS நாங்கள் வெட்கத்துக்கு உள்ளானோம்;QEQS ஆண்டவரது இல்லத்தின்QEQS திரு இடங்களுக்குள்QEQS அன்னியர் நுழைந்துவிட்டதால்,QEQS மானக்கேடு எங்கள் முகங்களைQEQS மூடிக்கொண்டது.QEQS
|
52. 52. ஆகவே நாள்கள் வருகின்றன,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS நான் அதன் சிலைகளைத்QEQS தண்டிப்பேன்;QEQS அந்நாடு எங்கணும்QEQS காயம்பட்டோர் குமுறியழுவர்.QEQS
|
53. 53. பாபிலோன் வானம்வரைQEQS தன்னை உயர்த்திக் கொண்டாலும்,QEQS தன் உயர்ந்த கோட்டைQEQS கொத்தளங்களைQEQS வலுப்படுத்திக் கொண்டாலும்,QEQS அழிப்போரை நான்QEQS அதன் மீது அனுப்புவேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
54. 54. பாபிலோனிலிருந்துQEQS கூக்குரல் கேட்கிறது;QEQS கல்தேயரின் நாட்டிலிருந்துQEQS பேரழிவின் இரைச்சல் கேட்கிறது.QEQS
|
55. 55. ஆண்டவர் பாபிலோனை அழிக்கிறார்;QEQS அதன் பெரும் ஆரவாரத்தைQEQS அடக்குகிறார்;QEQS அவர்களின் அலைகள்QEQS பெரும் வெள்ளம்போல் முழங்கும்.QEQS அவர்கள் உரத்த குரலில்QEQS ஆரவாரம் செய்வர்.QEQS
|
56. 56. “அழிப்போன்” பாபிலோன் மீதேQEQS வந்துவிட்டான்.QEQS அதன் படைவீரர்கள் பிடிபட்டார்கள்.QEQS அவர்கள் அம்புகள்QEQS முறித்தெறியப்பட்டன.QEQS ஆண்டவர் பழிவாங்கும் கடவுள்;QEQS அவர் திண்ணமாய்QEQS பதிலடி கொடுப்பார்.QEQS
|
57. 57. அதன் தலைவர்கள், ஞானிகள்,QEQS ஆளுநர்கள், படைத்தலைவர்கள்,QEQS படைவீரர்கள் ஆகிய எல்லாரையும்QEQS நான் குடிவெறி கொள்ளச்செய்வேன்.QEQS அவர்கள் மீளாத்QEQS துயில் கொள்வார்கள்;QEQS துயில் எழவே மாட்டார்கள்,QEQS என்கிறார் “படைகளின் ஆண்டவர்”QEQS என்னும் பெயர் கொண்ட மன்னர்.QEQS
|
58. 58. படைகளின் ஆண்டவர்QEQS கூறுவது இதுவே;QEQS பாபிலோனின் அகன்ற மதில்கள்QEQS முற்றிலும் தரைமட்டமாக்கப்படும்;QEQS அதன் உயர்ந்த வாயில்கள்QEQS தீக்கிரையாகும்;QEQS மக்களின் உழைப்பு வீணாகும்;QEQS மக்களினங்களின் முயற்சிகள்QEQS தீயோடு தீயாகும்.QE
|
59. யூதா அரசன் செதேக்கியா ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனும் அரசப் பயணவிடுதிப் பொறுப்பாளருமான செராயா செதேக்கியாவோடு பாபிலோனுக்குச் சென்றபொழுது, இறைவாக்கினர் எரேமியா அவருக்குக் கொடுத்த கட்டளை;
|
60. பாபிலோன் மேல் வரவிருந்த தண்டனைகள் அனைத்தையும், அதாவது பாபிலோன் மேல் குறித்து மேலே குறிப்பிட்ட எல்லாவற்றையும் எரேமியா ஓர் ஏட்டுச் சுருளில் எழுதி வைத்தார்.
|
62. ‘ஆண்டவரே, மனிதரோ விலங்கோ எதுவும் வாழாதபடி என்றும் பாழடைந்து கிடக்கும் அளவுக்கு நீர் அந்த இடத்தை அழிக்கப்போவதாகச் சொல்லியிருக்கிறீர்’ எனச் சொல்.
|
64. “நான் பாபிலோனுக்கு அளிக்கவிருக்கும் தண்டனைக்குப் பின்னர், அது மீண்டும் தலைதூக்க முடியாமல், இவ்வாறே மூழ்கிப்போகும்” என்று சொல். எரேமியாவின் சொற்கள் இத்துடன் முற்றும்.PE
|