1. {யூதாவின் பாவமும் தண்டனையும்} PSயூதாவின் பாவம் இரும்பு எழுத்தாணியாலும் வைர நுனியாலும் எழுதப்பட்டுள்ளது. அது அவர்கள் இதயப் பலகையிலும் பலிபீடக் கொம்புகளிலும் பொறிக்கப்பட்டுள்ளது.
|
2. தழைத்த மரங்களின் கீழும், உயர்ந்த குன்றுகளின் மேலும், திறந்த வெளி மலைகள் மீதும் உள்ள அவர்கள் பலிபீடங்களையும் அசேராக் கம்பங்களையும் அவர்களின் பிள்ளைகளே நினைவுகூருகின்றார்கள்.
|
3. ஆகவே, நாடெங்கும் செய்யப்படும் பாவங்களுக்கு ஈடாக உன் செல்வங்களையும் கருவூலங்களையும் தொழுகைமேடுகளையும் கொள்ளைப்பொருள் ஆக்குவேன்.
|
4. நான் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ள நாட்டின்மேல் உனக்குள்ள பிடி தளரும். முன்பின் தெரியாத ஒரு நாட்டில், உன் எதிரிகளுக்கு நீ அடிபணியச் செய்வேன். ஏனெனில், நீ என்னில் மூட்டியுள்ள கோபக்கனல் என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்.
|
5. {அறிவுரைகள்}PS QS ஆண்டவர் கூறுவது இதுவே:QEQS மனிதரில் நம்பிக்கை வைப்போரும்QEQS வலுவற்ற மனிதரில் தம் வலிமையைக்QEQS காண்போரும் சபிக்கப்படுவர்.QEQS
|
6. 6. அவர்கள் பாலைநிலத்துப்QEQS புதர்ச்செடிக்கு ஒப்பாவர்.QEQS பருவ காலத்திலும்QEQS அவர்கள் பயனடையார்;QEQS பாலை நிலத்தின்QEQS வறண்ட பகுதிகளிலும்QEQS யாரும் வாழா உவர் நிலத்திலுமேQEQS அவர்கள் குடியிருப்பர்.QEQS
|
8. 8. அவர்கள் நீர் அருகில் நடப்பட்டQEQS மரத்துக்கு ஒப்பாவர்;QEQS அது நீரோடையை நோக்கிQEQS வேர் விடுகின்றது.QEQS வெப்பமிகு நேரத்தில்QEQS அதற்கு அச்சமில்லை;QEQS அதன் இலைகள்QEQS பசுமையாய் இருக்கும்;QEQS வறட்சிமிகு ஆண்டிலும்QEQS அதற்குக் கவலை இராது;QEQS அது எப்போதும் கனி கொடுக்கும்.QEQS
|
9. 9. இதயமே அனைத்திலும்QEQS வஞ்சகம் மிக்கது;QEQS அதனை நலமாக்க முடியாது.QEQS அதனை யார்தான் புரிந்துகொள்வர்?QEQS
|
10. 10. ஆண்டவராகிய நானேQEQS இதயச் சிந்தனைகளை ஆய்பவர்;QEQS உள்ளுணர்வுகளைச்QEQS சோதித்து அறிபவர்.QEQS ஒவ்வொருவரின் வழிகளுக்கும்QEQS செயல்களின் விளைவுக்கும் ஏற்றவாறுQEQS நடத்துபவர்.QEQS
|
11. 11. நேர்மையற்ற வழிகளில்QEQS செல்வம் சேர்ப்போர்QEQS தாம் இடாத முட்டைகளை அடைகாக்கும்QEQS கௌதாரி போன்றோர்;QEQS தம் வாழ்நாள்களின் நடுவிலேயேQEQS அவர்கள் அச்செல்வத்தைQEQS இழந்துவிடுவர்;QEQS இறுதியில் அவமதிப்புக்கு உள்ளாவர்.QEQS
|
12. 12. “நம் திருத்தூயகம்QEQS தொடக்கத்திலிருந்தேQEQS உயர்ந்த இடத்தில் அமைந்த,QEQS மாட்சிமிகு அரியணையாய் உள்ளது.”QEQS
|
13. 13. ஆண்டவரே!QEQS இஸ்ரயேலின் நம்பிக்கையே!QEQS உம்மைப் புறக்கணித்தோர் யாவரும்QEQS வெட்கமுறுவர்;QEQS உம்மைவிட்டு அகன்றோர்QEQS தரையில் எழுதப்பட்டோர் ஆவர்;QEQS ஏனெனில், அவர்கள்QEQS வாழ்வளிக்கும் நீரூற்றாகியQEQS ஆண்டவரைப் புறக்கணித்தார்கள்.QE
|
14. {எரேமியாவின் மன்றாட்டு}PS QS ஆண்டவரே, என்னை நலமாக்கும்;QEQS நானும் நலமடைவேன்.QEQS என்னை விடுவியும்;QEQS நானும் விடுதலை அடைவேன்;QEQS ஏனெனில், நீரே என் புகழ்ச்சிக்குரியவர்.QEQS
|
16. 16. அவர்கள்மேல்QEQS தீமையை அனுப்ப வேண்டும் என்றுQEQS நான் உம்மை நெருக்கவில்லை;QEQS கொடுமையின் நாளைQEQS நான் விரும்பவில்லை;QEQS நான் கூறியவைதாம்QEQS உமக்குத் தெரியமே;QEQS அவை உம்முன்தாமே கூறப்பட்டன.QEQS
|
18. 18. என்னைத் துன்புறுத்துவோர்QEQS வெட்கம் அடையட்டும்;QEQS நானோ வெட்கம் அடையாதிருப்பேனாக!QEQS அவர்கள் திகிலுறட்டும்;QEQS நானோ திகிலுறாதிருப்பேனாக.QEQS தீமையின் நாளைQEQS அவர்கள்மேல் வரச்செய்யும்;QEQS இரட்டிப்பான அழிவுQEQS அவர்கள்மேல் வரட்டும்;QEQS அவர்கள் அடியோடு ஒழியட்டும்.QE
|
19. {ஓய்வுநாளை அனுசரித்தல்} PSஆண்டவர் கூறியது இதுவே: நீ போய் யூதாவின் அரசர்களின் உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் பயன்படும் பொதுமக்கள் வாயிலிலும் எருசலேமின் வாயில்கள் அனைத்திலும் நின்றுகொள்.PEPS
|
20. நீ அவர்களுக்கு அறிவிக்க வேண்டியது; இவ்வாயில்கள் வழியாகச் செல்லும் யூதாவின் அரசர்களே, யூதாவின் அனைத்து மக்களே, எருசலேமில் வாழ்வோரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்.
|
21. ஆண்டவர் கூறுவது இதுவே; உங்கள் உயிரை முன்னிட்டு ஓய்வுநாளில் சுமை தூக்க வேண்டாம்; அவற்றை எருசலேமின் வாயில்கள் வழியாகக் கொண்டு செல்லவும் வேண்டாம்.
|
22. ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்தும் சுமைகள் தூக்கிச் செல்லவேண்டாம். அன்று எந்த வேலையும் செய்யவேண்டாம். உங்கள் மூதாதையருக்கு நான் கொடுத்த கட்டளைப்படி ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடியுங்கள்.
|
23. அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை; நான் சொன்னதைக் கவனிக்கவில்லை; கேட்டுக் கற்றுக்கொள்ளாதபடி முரட்டுப் பிடிவாதம் செய்தனர்.PEPS
|
24. ஆண்டவர் கூறுவது; நீங்கள் எனக்குச் செவிகொடுத்து ஓய்வு நாளில் இந்நகரின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லாது, வேலை எதுவும் செய்யாது, ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிப்பீர்களாகில்,
|
25. தாவீதின் அரியணையில் அமரும் அரசர்களும் இளவரசர்களும் இந்நகரின் வாயில் வழியாகச் செல்வார்கள்; குதிரைகளிலும் தேர்களிலும் ஏறிச் செல்வார்கள். அவர்களோடு தலைவர்களும் யூதா நாட்டினரும் எருசலேம்வாழ் மக்களும் செல்வார்கள். இந்நகரில் என்றுமே மக்கள் குடியிருப்பார்கள்.
|
26. அப்போது யூதாவின் நகர்களிலிருந்தும் எருசலேமின் சுற்றுப்புறங்களிலிருந்தும் பென்யமின் நாட்டிலிருந்தும் செபேலா சமவெளியிலிருந்தும் மலை நாட்டிலிருந்தும் நெகேபிலிருந்தும் வருபவர்கள் எரி பலிகளையும் மற்றப் பலிகளையும் உணவுப் படையலையும் தூபத்தையும் நன்றிப் பலிகளையும் ஆண்டவர் இல்லத்துக்குக் கொண்டுவருவார்கள்.
|
27. ஆனால், நீங்கள் ஓய்வுநாளைத் தூய்மையாகக் கடைப்பிடிக்கவேண்டும்; அன்று எருசலேமின் வாயில்கள் வழியாகச் சுமை தூக்கிச் செல்லக் கூடாது; எனினும் என்னுடைய சொல்லுக்கு நீங்கள் செவி கொடுக்காமல் இருந்தால், நான் எருசலேமின் வாயில்களில் தீப்பற்றியெரியச் செய்வேன்; அது நகரின் அரண்மனைகளை அழித்துவிடும்; அத்தீயோ அணையாது.PE
|