1. {நார்ப்பட்டுக் கச்சையின் அடையாளம்} PSஆண்டவர் என்னிடம் கூறியது இதுவே: “நீ உனக்காக நார்ப்பட்டாலான ஒரு கச்சையை வாங்கி அதை உன் இடையில் கட்டிக் கொள். அதைத் தண்ணீரில் நனைக்காதே.”
|
4. “நீ வாங்கி உன் இடையில் கட்டிக்கொண்டுள்ள கச்சையை எடுத்துக் கொள்; எழுந்து பேராத்து* ஆற்றுக்குச் செல். அங்கு அதனைப் பாறை இடுக்கில் மறைத்துவை.”PEPS
|
6. பல நாள்களுக்குப் பின்னர் ஆண்டவர் என்னிடம் கூறியது: “எழுந்து பேராத்துக்குச் சென்று நான் உன்னிடம் மறைத்து வைக்கக் கட்டளையிட்ட கச்சையை அங்கிருந்து எடுத்துவா.”
|
7. அவ்வாறே நான் பேராத்திற்குச் சென்று, அங்கு மறைத்துவைத்திருந்த இடத்திலிருந்து கச்சையைத் தோண்டி எடுத்தேன். அந்தக் கச்சையோ எதற்கும் பயன்படாத அளவில் இற்றுப் போயிருந்தது.PEPS
|
10. என் சொற்களுக்குச் செவிகொடுக்க மறுத்து, தங்கள் இதயப்பிடிவாதத்தின்படி நடந்து, வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றிற்கு ஊழியம் செய்து வழிபட்டுவரும் இத்தீய மக்கள் எதற்கும் பயன்படாத இந்தக் கச்சையைப் போல் ஆவார்கள்.
|
11. கச்சை ஒருவரது இடையோடு ஒட்டியிருப்பதுபோல, இஸ்ரயேல், யூதா வீட்டார் யாவரும் என்னோடு ஒன்றித்திருக்கச் செய்தேன். அவர்கள் எனக்கு மக்களாகவும் பெயராகவும் புகழாகவும் மாட்சியாகவும் இருக்கச் செய்தேன். அவர்களோ எனக்குச் செவி சாய்க்கவில்லை,” என்கிறார் ஆண்டவர்.
|
12. {திராட்சை இரசச் சாடியின் அடையாளம்} PSநீ அவர்களுக்கு இந்த வாக்கைச் சொல்: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும்,” அவர்களோ ‘சித்தைகள் யாவும் இரசத்தால் நிரப்பப்படும் என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியாதா?’ என்று உன்னிடம் கூறுவார்கள்.
|
13. அப்போது நீ அவர்களுக்குக் கூற வேண்டியது; “ஆண்டவர் கூறுவது இதுவே; இதோ தாவீதின் அரியணையில் அமர்ந்திருக்கும் அரசர், குருக்கள், இறைவாக்கினர், எருசலேம் வாழ் மக்கள் ஆகிய இந்நாட்டுக் குடிமக்கள் யாவரையும் போதையில் ஆழ்த்துவேன்.
|
14. அவர்களை ஒருவரோடு ஒருவர் மோதச் செய்வேன். தந்தையரும் புதல்வரும் தங்களுக்குள் மோதிக்கொள்வர். அவர்களின் அழிவை முன்னிட்டு நான் அவர்களுக்கு இரக்கம் காட்டவோ அவர்களைக் காப்பாற்றவோ அவர்களுக்குப் பரிவு காட்டவோ மாட்டேன், என்கிறார் ஆண்டவர்.
|
15. {அச்சுறுத்தலும் எச்சரிக்கையும்}PS QS செவிகொடுத்துக் கேளுங்கள்!QEQS செருக்குறாதீர்கள்;QEQS ஏனெனில், ஆண்டவர் பேசிவிட்டார்.QEQS
|
16. 16. உங்கள் கடவுளாகிய ஆண்டவரைQEQS பெருமைப்படுத்துங்கள்;QEQS உங்கள் கடவுளாகிய ஆண்டவர்QEQS இருள்படரச் செய்யுமுன்பும்,QEQS உங்கள் பாதங்கள் இருளடைந்தQEQS மலைகளில் இடறுமுன்பும்QEQS அவரை மாட்சிமைப் படுத்துங்கள்.QEQS நீங்கள் ஒளியை எதிர்பார்த்துQEQS நிற்கும் போதேQEQS இருளின் நிழல்கள் சூழச்செய்வார்;QEQS இருண்ட மேகங்கள் எழச்செய்வார்.QEQS
|
17. 17. ஆனால் நீங்கள் இதற்குச்QEQS செவி கொடுக்காவிட்டால்,QEQS உங்கள் செருக்கை முன்னிட்டுQEQS என் உள்ளம் மறைவில் அழும்;QEQS அழுகை மிகுதியால் கண்களிலிருந்துQEQS கண்ணீர் வழிந்தோடும்;QEQS எனெனில், ஆண்டவரின் மந்தைQEQS கைப்பற்றப்பட்டுள்ளது.QEQS
|
18. 18. அரசனுக்கும் அரசனின்QEQS அன்னைக்கும் சொல்லுங்கள்;QEQS கீழே அமருங்கள். ஏனெனில்QEQS உங்கள் மேன்மையின் மணிமுடிQEQS உங்கள் தலைகளிலிருந்துQEQS வீழ்ந்துவிட்டது.QEQS
|
19. 19. நெகேபைச் சார்ந்த நகர்கள் எல்லாம்QEQS அடைபட்டுவிட்டன;QEQS அவற்றைத் திறப்பார் யாருமில்லை;QEQS யூதா முழுவதும்QEQS நாடுகடத்தப்பட்டுள்ளது.QEQS அது முற்றிலுமாய்QEQS நாடு கடத்தப்பட்டுள்ளது.QE
|
20. {ஐயகோ எருசலேமே!}PS QS உன் கண்களை உயர்த்திQEQS வடக்கிலிருந்து வருபவர்களைப் பார்;QEQS உனக்குத் தரப்பட்ட மந்தை — உன்QEQS பெருமைக்குரிய மந்தை — எங்கே?QEQS
|
21. 21. உன் நண்பர்களாக நீQEQS வளர்த்து விட்டவர்களே உன்QEQS தலைவர்களாக ஏற்படுத்தப்படும்போதுQEQS நீ என்ன சொல்வாய்?QEQS பேறுகாலப் பெண்ணின் வேதனைQEQS உன்னைப் பற்றிக் கொள்ளாமல் போகுமா?QEQS
|
22. 22. இவையெல்லாம் எனக்குQEQS ஏன் நிகழ வேண்டும் எனQEQS நீ உன் உள்ளத்தில் சிந்திக்கலாம்;QEQS உன் குற்றம் பெரிது! அதனால்தான்QEQS உன் ஆடை அகற்றப்பட்டுள்ளது!QEQS உன் கால்கள் புண்படுத்தப்பட்டன.QEQS
|
23. 23. எத்தியோப்பியர் தம் நிறத்தைQEQS மாற்றிக் கொள்ள முடியுமா?QEQS சிறுத்தைகள் தம் புள்ளிகளைQEQS அகற்றிக்கொள்ள முடியுமா?QEQS அப்படி முடியுமானால்,QEQS தீமையே செய்து பழகிவிட்டQEQS நீங்களும் நன்மை செய்ய முடியும்.QEQS
|
25. 25. இதுவே உன் கதி!QEQS நான் அளந்து கொடுக்கும் உன் பங்கு!QEQS ஏனெனில், நீ என்னை மறந்துQEQS பொய்யை நம்பினாய்,QEQS என்கிறார் ஆண்டவர்.QEQS
|
26. 26. உன் ஆடைகளைQEQS உன் முகத்துக்கு மேல் தூக்கிக்QEQS கழற்றிவிடுவேன்;QEQS உன் அவமானம் காணப்படும்.QEQS
|
27. 27. உன் அருவருக்கத்தக்க செயல்களாகியQEQS விபசாரங்களையும்QEQS காமக் கனைப்புகளையும்QEQS பரந்த வெளியில் குன்றுகளின்மேல்QEQS நீ செய்த கீழ்த்தரமானQEQS வேசித்தனத்தையும் நான் கண்டேன்;QEQS ஐயகோ! எருசலேமே!QEQS நீ தூய்மை பெறுவது எந்நாளோ?QEPE
|