1. {எரேமியாவின் அழைப்பு} PSபென்யமின் நாட்டு அனத்தோத்தில் இருந்த குருக்களுள் ஒருவரான இலிக்கியாவின் மகன் எரேமியாவின் சொற்கள்:
|
2. ஆமோன் மகனும் யூதா அரசருமான யோசியாவின் காலத்தில், அவரது ஆட்சியின் பதின்மூன்றாம் ஆண்டில் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
|
3. யோசியா மகனும் யூதா அரசனுமாகிய யோயாக்கீம் காலத்திலும், யோசியா மகனும் யூதா அரசனுமாகிய செதேக்கியா ஆட்சியேற்ற பதினோராம் ஆண்டின் இறுதி வரையிலும், அதாவது எருசலேம் மக்கள் நாடுகடத்தப்பட்ட அதே ஆண்டின் ஐந்தாம் மாதம்வரை ஆண்டவரின் வாக்கு அவருக்கு அருளப்பட்டது.PEPS QS
|
5. 5. “தாய் வயிற்றில் உன்னை நான்QEQS உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்;QEQS நீ பிறக்குமுன்பே உன்னைத்QEQS திருநிலைப்படுத்தினேன்;QEQS மக்களினங்களுக்கு இறைவாக்கினனாகQEQS உன்னை ஏற்படுத்தினேன்.”QEQS
|
7. 7. ஆண்டவர் என்னிடம் கூறியது:QEQS “‘சிறுபிள்ளை நான்’QEQS என்று சொல்லாதே;QEQS யாரிடமெல்லாம் உன்னைQEQS அனுப்புகின்றேனோQEQS அவர்களிடம் செல்;QEQS எவற்றை எல்லாம் சொல்லக்QEQS கட்டளை இடுகின்றேனோQEQS அவற்றைச் சொல்.QEQS
|
8. 8. அவர்கள்முன் அஞ்சாதே.QEQS ஏனெனில், உன்னை விடுவிக்கQEQS நான் உன்னோடு இருக்கின்றேன்,QEQS என்கிறார் ஆண்டவர்.”QEQS
|
9. 9. ஆண்டவர் தம் கையை நீட்டிQEQS என் வாயைத் தொட்டுQEQS என்னிடம் கூறியது:QEQS “இதோ பார்! என் சொற்களைQEQS உன் வாயில் வைத்துள்ளேன்.QEQS
|
10. 10. பிடுங்கவும் தகர்க்கவும்,QEQS அழிக்கவும் கவிழ்க்கவும்,QEQS கட்டவும் நடவும்,QEQS இன்று நான் உன்னைQEQS மக்களினங்கள் மேலும்}QEQS அரசுகள் மேலும்QEQS பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன்”.QE
|
11. ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: ‘எரேமியா, நீ காண்பது என்ன?’ என்னும் கேள்வி எழ, “வாதுமை* மரக்கிளையைக் காண்கிறேன்” என்றேன்.
|
12. அதற்கு ஆண்டவர் என்னிடம், “நீ கண்டது சரியே. என் வாக்கைச் செயலாக்க நானும் விழிப்பாயிருப்பேன்” என்றார்.PEPS
|
13. ஆண்டவரின் வாக்கு இரண்டாம் முறை எனக்கு அருளப்பட்டது: “நீ காண்பது என்ன?” என்னும் கேள்வி எழ, “கொதிக்கும் பானையைக் காண்கிறேன். அதன் வாய் வடக்கிலிருந்து சாய்ந்திருக்கின்றது” என்றேன்.
|
14. ஆண்டவர் என்னிடம் கூறியது: “நாட்டில் குடியிருப்போர் அனைவர் மீதும் வடக்கிலிருந்தே தீமை பாய்ந்து வரும்.”PEPS
|
15. இதோ வடக்கிலுள்ள அரச குடும்பத்தார் அனைவரையும் நான் அழைக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அவர்கள் வந்து ஒவ்வொருவரும் எருசலேமின் வாயில்களிலும், அதன் சுற்றுச் சுவர்களுக்கு எதிரிலும், யூதா நகர்களுக்கு எதிரிலும் தம் அரியணையை அமைப்பர்.
|
16. என் மக்களின் தீய செயல்களுக்காக அவர்களுக்கெதிராகத் தீர்ப்புக் கூறப் போகிறேன். அவர்கள் என்னைப் புறக்கணித்தார்கள். வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினார்கள். தங்கள் கைவேலைப்பாடுகளை வழிபட்டார்கள்.
|
17. நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன்.
|
18. இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன்.
|
19. அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்” என்கிறார் ஆண்டவர்.PE
|