தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.
2. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.
3. உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன; உங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன. உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன; உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.
4. நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை; உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை; வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.
5. நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்; சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்; அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்; உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.
6. அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா; அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்; அவர்களின் செயல்கள் தீயின; அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!
7. தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன; குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்; அவர்கள் எண்ணங்கள் தீயவை; பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.
8. அமைதி வழியை அவர்கள் அறியார்; நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை; தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்; அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.
9. ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது; நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது; விடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;
10. பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்; கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்; நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.
11. கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்; புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்; நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.
12. உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன; எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன; எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன; எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.
13. ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்; எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்; ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்; பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.
14. நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது; பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது; உண்மைக்கு அங்கே இடம் இல்லை.
15. உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது; தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்; ஆண்டவர் அதைக் கண்டார்; அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.
16. இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்; அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து; அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.
17. அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்; விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்; அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.
18. தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.
19. மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்; ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.
20. சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.
21. அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 59 of Total Chapters 66
ஏசாயா 59:15
1. மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.
2. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.
3. உங்கள் கைகள் இரத்தப்பழியால் கறைபட்டுள்ளன; உங்கள் விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன. உங்கள் உதடுகள் பொய்களை உதிர்க்கின்றன; உங்கள் நாக்கு தீயவற்றை முணுமுணுக்கின்றது.
4. நீதியான வழக்கைக் கொண்டு வருபவர் எவரும் இல்லை; உண்மையுடன் வழக்காடுபவர் யாருமில்லை; வெறுமையான வாதங்கள்மீது நம்பிக்கை வைத்துப் பொய்யைப் பேசி, வஞ்சனையைக் கருத்தரித்துத் தீமையைப் பெற்றெடுக்கின்றனர்.
5. நச்சுப் பாம்பின் முட்டைகளை அடைகாக்கிறார்கள்; சிலந்திப் பூச்சியின் வலையைப் பின்னுகிறார்கள்; அவற்றின் முட்டைகளை விழுங்குபவர் சாவார்; உடைபடும் முட்டையிலிருந்து கட்டுவிரியன் வெளிவரும்.
6. அவற்றின் வலைகள் உடையாகப் பயன்படா; அவற்றின் வேலைப்பாடுகளைக் கொண்டு எவரும் தம்மைப் போர்த்துக்கொள்ளமாட்டார்; அவர்களின் செயல்கள் தீயின; அவர்களின் கையில் இருப்பன வன்முறைச் செயல்களே!
7. தீமை செய்ய அவர்கள் கால்கள் விரைகின்றன; குற்றமற்ற இரத்தம் சிந்த அவர்கள் துடிக்கின்றனர்; அவர்கள் எண்ணங்கள் தீயவை; பாழாக்குதலும் அழிவுமே அவர்கள் வழித்தடங்களில் உள்ளன.
8. அமைதி வழியை அவர்கள் அறியார்; நீதியின் பாதையில் அவர்கள் நடக்கவில்லை; தாங்கள் செல்லும் பாதைகளைக் கோணலாக்கினர்; அவற்றில் நடப்பவர் எவரும் அமைதியை அறியார்.
9. ஆதலால், நீதி எங்களுக்கு வெகு தொலையில் உள்ளது; நேர்மை எங்களை நெருங்கி வரவில்லை. ஒளிக்கெனக் காத்திருந்தோம்; காரிருள்தான் கிட்டியது; விடியலை எதிர்பார்த்தோம்; இருளிலேயே நடக்கின்றோம்;
10. பார்வையற்றோரைப் போல் சுவரைப்பிடிக்க நாங்கள் தடவுகின்றோம்; கண்ணில்லாதவரைப்போல் எங்கள் வழியில் தடுமாறுகின்றோம்; நண்பகலிலும் மங்கிய பொழுதிலும் செத்தவர்போல் இருக்கின்றோம்.
11. கரடியைப் போல் நாங்கள் யாவரும் உறுமுகின்றோம்; புறாக்களைப்போல் பெருமூச்சுடன் விம்முகின்றோம்; நீதித்தீர்ப்புக்காகக் காத்திருந்தோம், ஒன்றையும் காணவில்லை; விடுதலையை எதிர்பார்த்திருந்தோம், அது எங்களுக்குத் தொலையில் உள்ளது.
12. உம் திருமுன் எங்கள் குற்றங்கள் பெருகியுள்ளன; எங்கள் பாவங்கள் எங்களுக்கு எதிராய்ச் சான்று சொல்கின்றன; எங்கள் குற்றங்கள் எங்களோடு தான் இருக்கின்றன; எங்கள் தீச்செயல்களை நாங்களே அறிவோம்.
13. ஆண்டவருக்கு எதிராகக் கிளர்ச்சி செய்து அவரை வஞ்சித்தோம்; எங்கள் கடவுளைப் பின்பற்றாமல் அகன்று போனோம்; ஒடுக்குவதையும் கிளர்ச்சி செய்வதையும்பற்றிப் பேசினோம்; பொய்யானவற்றை மனதில் உருவாக்கி அவற்றை மொழிந்தோம்.
14. நீதி துரத்தப்பட்டது; நேர்மை தொலையில் நின்றது; பொது இடங்களில் வாய்மை நிலைகுலைந்தது; உண்மைக்கு அங்கே இடம் இல்லை.
15. உண்மை என்பதே இல்லாமல் போய்விட்டது; தீமையினின்று விலகியவர் சூறையாடப்படுகின்றார்; ஆண்டவர் அதைக் கண்டார்; அவர் பார்வையில் நீதியின்மை தீயதாய்ப் பட்டது.
16. இதில் தலையிட ஓர் ஆள்கூட இல்லை என்று கண்டு ஆண்டவர் திகைப்புற்றார்; அவரது கையே அவருக்கு வெற்றி கொணர்ந்து; அவரது நேர்மையே அவரைத் தாங்கி நின்றது.
17. அவர் நேர்மையை மார்புக் கவசமாய் அணிந்துகொண்டார்; விடுதலையைத் தலைச்சீராவாய்த் தம் தலையில் வைத்துக்கொண்டார்; அநீதிக்குப் பழிவாங்குதலை ஆடையாய் உடுத்திக் கொண்டார்; அன்புவெறியை மேலாடையாகப் போர்த்திக் கொண்டார்.
18. தம் பகைவரின் செயல்களுக்குத் தக்க கைம்மாறு அளிப்பார்; அவர்களிடம் தம் சீற்றத்தைக் காட்டுவார்; தம் எதிரிகளுக்குத் தக்க தண்டனை வழங்குவார்; தீவு நாடுகளுக்கும் தகுந்த பதிலடி கொடுப்பார்.
19. மேலை நாட்டினர் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்; கீழைநாட்டினர் அவரது மாட்சிக்கு நடுங்குவர்; ஆண்டவரின் பெருங்காற்று அடித்து வர, ஓடிவரும் ஆறென அவர் வருவார்.
20. சீயோனுக்கு மீட்பராக அவர் வருவார்; யாக்கோபில் தீயதனின்று திரும்பியவரிடம் வருவார், என்கிறார் ஆண்டவர்.
21. அவர்களுடன் நான் செய்து கொள்ளும் உடன்படிக்கை இதுவே; உன்மேல் இருக்கும் என் ஆவியும் உன் வாயில் நான் வைத்துள்ள என் வார்த்தைகளும் உன் வாயினின்றும் உன் வழி மரபினர் வாயினின்றும் வழிவழிவரும் உன் தலைமுறையினர் வாயினின்றும் இன்றும் என்றென்றும் நீங்கிவிடாது, என்கிறார் ஆண்டவர்.
Total 66 Chapters, Current Chapter 59 of Total Chapters 66
×

Alert

×

tamil Letters Keypad References