1. நேர்மையாளர் அழிந்து போகின்றனர்; இதை மனத்தில் கொள்வார் எவரும் இல்லை; இறைப்பற்றுடையோர் எடுத்துக்கொள்ளப்படுகின்றனர்; அதைக் கருத்தில் கொள்வார் எவரும் இல்லை; ஏனெனில் நேர்மையாளர் தீமையின் முன்னின்று கொள்ளப்படுகின்றனர்.
|
2. அவர்கள் அமைதிக்குள் சென்றடைகின்றனர்; நேர்மையான வழிமுறையைப் பின்பற்றுவோர் தம் இறுதிப் படுக்கைகளில் இளைப்பாறுகின்றனர்.
|
4. யாரைப் பார்த்து நீங்கள் நகைக்கின்றீர்கள்? யாருக்கு எதிராக வாயைப்பிளந்து நாக்கை நீட்டுகின்றீர்கள்? நீங்கள் கொடுமையின் பிள்ளைகளன்றோ! பொய்மையின் சந்ததியன்றோ!
|
5. கருவாலி மரத் தோப்பிலும், பசுமையான மரம் ஒவ்வொன்றின் கீழும் காமத்தீயால் எரிகிறீர்கள்; பள்ளத்தாக்குகளில், பாறைப் பிளவுகளின் அடிப்புறத்தில், உங்கள் பச்சிளங் குழந்தைகளைக் கொல்கிறீர்கள்.
|
6. பள்ளத்தாக்கின் வழவழப்பான கற்களினின்று உருவான சிலைகளே உன் பங்கு; ஆம், அவையே உன் பங்கு; அவற்றிற்கு நீ நீர்மப்பலியை ஊற்றியுள்ளாய்; உணவுப் படையலைப் படைத்துள்ளாய்; இவற்றால் நான் அமைதி அடைவேனோ?
|
8. கதவுக்கும் கதவின் நிலைக்கும் பின்னால் உன் நினைவுக்குறியை வைத்தாய்; என்னை விட்டுவிட்டு உன் மஞ்சத்தைத் திறந்தாய்; ஏறிச்சென்று அதை விரிவாக்கினாய்; நீ எவருடைய படுக்கையை விரும்;;பினாயோ, அவர்களோடு ஓர் உடன்பாடு செய்து கொண்டாய்; அவர்களின் திறந்த மேனியைக் கண்டாய்.
|
9. நீ எண்ணெயுடன் மோலேக்கிடம் சென்றாய்; நறுமணப் பொருட்களைப் பெருக்கிக் கொண்டாய்; தொலை நாடுகளுக்கு உன் தூதர்களை அனுப்பினாய்; பாதாளம் மட்டும் அனுப்பினாய்.
|
10. உன் வழிப்பயணம் தொலைவானதால் களைத்துப் போனாய்; ஆயினும், "இது வீண்" என்று நீ சொல்லவில்லை; உன் கையில் புதியதோர் ஆற்றல் பெற்றாய்; ஆதலால் நீ சோர்ந்து போகவில்லை.
|
11. யாருக்கு நீ அஞ்சி நடுங்கினாய்? நீ என்னிடம் பொய் சொன்னாயே! நீ என்னை நினைவுகூரவில்லை; என்னைப் பற்றி உன் மனத்தில் எண்ணவுமில்லை! வெகுகாலமாய் நான் அமைதியாய் இருந்ததால் அன்றோ நீ எனக்கு அஞ்சாதிருக்கின்றாய்?
|
13. நீ துணை வேண்டிக் குரல் எழுப்பும்போது, நீ திரட்டிய சிலைகள் உன்னை விடுவிக்கட்டும்! காற்று அவை அனைத்தையும் அடித்துக் கொண்டுபோம்; வெறும் மூச்சே அவற்றை ஊதித் தள்ளிவிடும்; என்னிடம் அடைக்கலம் புகுவோர் நாட்டை உரிமையாக்கிக் கொள்வர்; என் திருமலையை உடைமையாய்ப் பெறுவர்.
|
14. அமையுங்கள்; பாதையை அமையுங்கள்; அதைத் தயார் செய்யுங்கள்; "என் மக்களின் வழியிலிருக்கும் தடையை அகற்றுங்கள்" என்று கூறப்படும்.
|
15. உயர்ந்தவரும் உன்னதரும் காலம் கடந்து வாழ்பவரும், "தூயவர்" என்ற பெயரைக் கொண்டவரும் கூறுவது இதுவே; உயர்ந்த தூய இடத்தில் நான் உறைகின்றேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் நான் வாழ்கின்றேன்; நொறுங்கிய உள்ளத்தினரை ஊக்குவிக்கவும் நலிந்த நெஞ்சத்தினரைத் திடப்படுத்தவும் நான் குடியிருக்கின்றேன்.
|
16. ஏனெனில், என்றென்றும் நான் குற்றஞ்சாட்டமாட்டேன்; எப்பொழுதும் சினம் கொண்டிருக்கமாட்டேன்; ஏனெனில், நான் தோற்றுவித்த உயிர் மூச்சாகிய மனித ஆவி என் திருமுன் தளர்ச்சியடைந்து விடும்.
|
17. பேராசை என்னும் தீமையை முன்னிட்டு நான் இஸ்ரயேல் மீது சினமடைந்து, அவனை அடித்து நொறுக்கினேன்; சீற்றம் கொண்டு என்னை அவனுக்கு மறைத்துக் கொண்டேன்; அவனோ என்னைவிட்டு விலகி மனம்போன போக்கிலே சென்றான்.
|
18. அவன் சென்ற பாதைகளைக் கண்டேன்; ஆயினும் அவனைக் குணமாக்குவேன்; அவனை நடத்திச் சென்று அவனுக்கு மீண்டும் ஆறுதல் அளிப்பேன்.
|
19. அவனுக்காக அழுவோரின் உதடுகளில் நன்றி ஒலி எழச்செய்வேன்; அமைதி! தொலையில் இருப்போருக்கும் அருகில் இருப்போருக்கும் அமைதி! என்கிறார் ஆண்டவர். அவர்களை நான் நலமடையச் செய்வேன், என்கிறார் ஆண்டவர்.
|
20. கொடியவரோ கொந்தளிக்கும் கடல்போல் இருக்கின்றனர்; அந்தக் கடலால் அமைதியாயிருக்க இயலாது; அதன் நீர்த்திரள்கள் சேற்றையும் சகதியையும் கிளறிவிடுகின்றன;
|