தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
ஏசாயா
1. வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்; மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்; மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்; வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.
2. வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்; அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்; அவர்களை அவர் அடியோடு அழிப்பார்; அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.
3. அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்; அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்; அவர்களின் இரத்தம் மலைகளில் .
4. விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்; திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.
5. ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது; இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.
6. அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின்;; இரத்தக் கறை படிந்துள்ளது; அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது; ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்; ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.
7. அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்; எருதுகளுடன் காளைகளும் மடியும்; அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்; தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.
8. ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது; சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.
9. ஏதோமின் நீரோடைகள் கீலாகும்; அதன் தரைப்புழுதி கந்தகமாகும்; அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.
10. இரவும் பகலும் அது அணையாமல் எரியும்; அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்; எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் .
11. கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்; ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்; ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்; அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.
12. உயர்குடி மக்கள் அங்கே இல்லை; அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை; அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.
13. அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்; அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்; ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.
14. காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்; காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்; கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.
15. ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்; பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.
16. ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; "எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை" ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
17. அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்; அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது; அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 66 Chapters, Current Chapter 34 of Total Chapters 66
ஏசாயா 34:4
1. வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்; மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்; மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்; வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.
2. வேற்றினத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் சீற்றம் அடைந்துள்ளார்; அவர்களின் படைத்திரள் முழுவதற்கும் எதிராக வெஞ்சினம் கொண்டுள்ளார்; அவர்களை அவர் அடியோடு அழிப்பார்; அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்குவார்.
3. அவர்களில் வாளுக்கு இரையானோர் தூக்கியெறிப்படுவர்; அவர்களின் பிணங்கள் துர்நாற்றமடிக்கும்; அவர்களின் இரத்தம் மலைகளில் .
4. விண்ணுலகின் படைத்திரள் அனைத்தும் உருகிப்போகும்; வானின் வெளி ஏட்டுச் சுருளெனச் சுருட்டப்படும்; திராட்சை இலை உதிர்வதுபோலும் அத்தி இலை வீழ்வதுபோலும், வான் படைகள் அனைத்தும் உதிர்ந்து விடும்.
5. ஆண்டவரது வாள் வானில் வெளியேறக் குடித்துள்ளது; இதோ, ஏதோமின் மேலும் அழிவுக்கென ஒதுக்கப்பட்ட மக்களினத்தின் மேலும் தண்டனைத் தீர்ப்புக்காக அது இறங்கப்போகிறது.
6. அவரது வாளில் செம்மறிக்குட்டி, வெள்ளாடு ஆகியவற்றின்;; இரத்தக் கறை படிந்துள்ளது; அதில் கிடாய்களின் சிறுநீரகக் கொழுப்பு படிந்துள்ளது; ஏனெனில், பொட்சராவில் ஆண்டவருக்குப் பலி கொடுக்கப்படும்; ஏதோம் நாட்டில் படுகொலை நடக்கும்.
7. அவர்களின் காட்டெருதுகள் செத்துவிழும்; எருதுகளுடன் காளைகளும் மடியும்; அவர்களின் நாடு இரத்தத்தை வெறியேறக் குடிக்கும்; தரைப்புழுதி கொழுப்பால் மூடப்படும்.
8. ஆண்டவர் பழிதீர்க்கும் நாள் அது; சீயோன் வழக்கில் நல்தீர்ப்பீன் ஆண்டு அது.
9. ஏதோமின் நீரோடைகள் கீலாகும்; அதன் தரைப்புழுதி கந்தகமாகும்; அதன் நிலம் கொழுந்து விட்டெரியும் கீலாகும்.
10. இரவும் பகலும் அது அணையாமல் எரியும்; அதன் புகை என்றென்றும் எழும்பிக் கொண்டிருக்கும்; தலைமுறை தோறும் நாடு பாழடைந்து கிடக்கும்; எவருமே அதன் வழியாய் ஒருபோதும் பயணம் .
11. கூகையும் சாக்குருவியும் அதைச் சொந்தமாக்கிக்கொள்ளும்; ஆந்தையும் கருங்காகமும் அங்கே தங்கியிருக்கும்; ஆண்டவர் நூல்பிடித்து அதை உருக்குலையச் செய்வார்; அவர் தூக்குநூல் பிடித்து அதைப் பாழடையச் செய்வார்.
12. உயர்குடி மக்கள் அங்கே இல்லை; அரசன் என அழைக்க அங்கே யாரும் இல்லை; அதன் தலைவர் அனைவரும் ஒன்றுமில்லாது ஒழிவர்.
13. அதன் கோட்டைகள்மேல் முட்புதர்களும் அதன் அரண்கள்மேல் காஞ்சொறிப் பூண்டுகளும் நெருஞ்சிகளும் ஓங்கி வளரும்; அது குள்ள நரிகளின் குடியிருப்பாக மாறும்; ஆந்தைகளின் வாழ்விடம் ஆகும்.
14. காட்டு விலங்குகள் கழுதைப் புலிகளுடன் சேர்ந்து திரியும்; காட்டாடுகள் ஒன்றையொன்று கத்தி அழைக்கும்; கூளி அங்கே தங்கித் தான் இளைப்பாறுவதற்கென இடத்தைக் கண்டுபிடிக்கும்.
15. ஆந்தை அங்கே கூடுகட்டி முட்டை இட்டுக் குஞ்சுகள் பொரித்து, தன் நிழலில் அவற்றைச் சேர்த்து வளர்க்கும்; பருந்துகளும் சோடி சோடியாய்ச் சேர்ந்துவரும்.
16. ஆண்டவரின் ஏட்டுச் சுருளை ஆய்ந்து படியுங்கள்; "எதுவுமே தனித்துவிடப்படுவதில்லை, துணையின்றி எதுவும் இருப்பதில்லை" ஏனெனில், ஆண்டவரின் வாய் மொழிந்த கட்டளை இது. அவரது ஆவிதான் இவற்றை ஒருங்கிணைத்தது.
17. அவரே அவர்களுக்கென்று சீட்டுப் போட்டார்; அவர்தம் கை, நூல் பிடித்து நாட்டை அவர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தது; அவர்கள் அதை என்றுமுள உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; தலைமுறைதோறும் அதில் தங்கி வாழ்வர்.
Total 66 Chapters, Current Chapter 34 of Total Chapters 66
×

Alert

×

tamil Letters Keypad References