1. அழித்தொழிப்பவனே, உனக்கு ஐயோ கேடு! நீ இன்னும் அழித்தொழிக்கப்படவில்லையே! நம்பிக்கைத் துரோகியே, உனக்கு எவரும் துரோகம் செய்யவில்லையா! நீ அழித்தொழிப்பதை முடித்ததும், நீயும் அழிந்தொழிவாய்; நீ நம்பிக்கைத் துரோகம் செய்தவுடன், உனக்கும் துரோகம் செய்வார்கள்.
|
2. ஆண்டவரே, எங்கள்மீது இரக்கமாய் இரும்; நாங்கள் உமக்காகக் காத்திருக்கிறோம்; அதிகாலைதோறும் எங்களைக் காக்கும் கரமாகவும், துன்ப வேளைகளில் எங்களை விடுவிப்பவராகவும் இருப்பீராக!
|
4. பச்சைப் புழுக்கள் சேர்ப்பதுபோல் கொள்ளைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் பாய்வதுபோல் அவற்றின்மேல் மனிதர் பாய்கின்றனர்.
|
5. ஆண்டவர் மாட்சிக்கு உரியவர்; ஏனெனில் அவர் உன்னதத்தில் உறைகின்றார்; சீயோனை அவர் நீதியாலும் நேர்மையாலும் நிரப்புகின்றார்;
|
6. உங்கள் காலத்தில் அவரே பாதுகாப்பாய் இருப்பார்; அவர் உங்களுக்கு முழு விடுதலை வழங்கி ஞானத்தையும் அறிவாற்றலையும் நல்குவார். ஆண்டவரைப்பற்றிய அச்சமே அவர்களது அரும்செல்வம்.
|
7. இதோ! வலிமைமிக்க அவர்களுடைய வீரர்கள் வீதியில் நின்று கதறியழுகின்றனர்; சமாதானத்தின் தூதர் மனங்கசந்து அழுகின்றனர்.
|
8. நெடுஞ்சாலைகளில் ஆள் நடமாட்டம் இல்லை; வழிப்பயணிகள் கடந்து செல்வதும் இல்லை; உடன்படிக்கை முறிக்கப்படுகின்றது; ஒப்பந்தம் மீறப்படுகின்றது; மனிதருக்கு மரியாதையே கிடையாது.
|
9. நாடு புலம்பியழுது சோர்ந்து போகின்றது; லெபனோன் வெட்கி நாணித் தளர்ச்சியடைகின்றது; சாரோன் பாலைநிலம்போல் ஆகின்றது; பாசானும் கர்மேலும் இலையுதிர்க்கின்றன.
|
10. ஆண்டவர் கூறுகின்றார்; இப்பொழுது நான் எழுந்தருள்வேன்; இப்பொழுது என்னை உயர்த்திக் கொள்வேன்; இப்பொழுது என்னை மாட்சிமைப் படுத்துவேன்.
|
11. நீங்கள் பதரைக் கருத்தாங்கி, பெற்றெடுத்தீர்கள்; உங்கள் உயிர்மூச்சு நெருப்பாகி உங்களையே எரித்துவிடும்.
|
12. சுண்ணாம்பு நீற்றப்படுவதைப் போல் மக்களினங்கள் பொசுக்கப்படுவார்கள்; முட்கள்போல் வெட்டுண்டு நெருப்புக்கு இரையாவார்கள்.
|
14. சீயோன்வாழ் பாவிகள் அஞ்சுகின்றனர்; இறைப்பற்றில்லாரைத் திகில் ஆட்கொள்கின்றது. சுட்டிடெரிக்கும் நெருப்பில் நம்மில் எவர் தங்குவார்? என்றென்றும் பற்றியெரியும் தழலில் நம்மில் எவர் இருப்பார்?
|
15. நீதிநெறியில் நடப்பவர், நேர்மையானவற்றைப் பேசுபவர். கொடுமைசெய்து பெற்ற வருவாயை வெறுப்பவர், கையூட்டு வாங்கக் கை நீட்டாதவர், இரத்தப் பழிச் செய்திகளைச் செவி கொடுத்துக் கேளாதவர், தீயவற்றைக் கண்கொண்டு காணாதவர்;
|
16. அவர்களே உன்னதங்களில் வாழ்வர்; கற்பாறைக் கோட்டைகள் அவர்களது காவல்அரண் ஆகும்; அவர்களுக்கு உணவு வழங்கப்படும்; தண்ணீர் தரப்படுவதும் உறுதி.
|
18. திகிலைப்பற்றி உங்கள் மனம் இவ்வாறு சிந்திக்கும்; "குடிக்கணக்குச் செய்தவன் எங்கே? திறைப்பொருளை நிறுத்துப் பார்த்தவன் எங்கே? கோபுரங்களை எண்ணிக்கை இட்டவன் எங்கே?
|
19. உங்களுக்கு விளங்காத குளறுபடியான பேச்சையும் புரியாத வேற்றுமொழியையும் கொண்ட காட்டுமிராண்டி மக்களை நீங்கள் மீண்டும் காணமாட்டீர்கள்.
|
20. நம் விழாக்களின் நகரான சீயோனைப் பார்; அமைதியின் இல்லமாகவும், பெயர்க்கப்படாத முளைகளும் அறுபடாத கயிறுகளும் கொண்ட அசைக்க முடியாத கூடாரமாகவும் எருசலேம் இருப்பதை உங்கள் கண்கள் காணும்.
|
21. ஏனெனில், அங்கே ஆண்டவர் நமக்கெனத் தம் மாட்சியை விளங்கச் செய்வார்; அது அகன்ற ஆறுகளையும் விரிந்த நீரோடைகளையும் உடைய இடம் போன்றது; துடுப்புப் படகு அங்குப் போவதில்லை; மாபெரும் கப்பல் கடந்து வருவதும் இல்லை.
|
22. ஆண்டவரே நமக்கு நீதித் தலைவர்; ஆண்டவரே நமக்கு நியமம் வழங்குபவர்; ஆண்டவரே நமக்கு வேந்தர்; அவரே நமக்கு மீட்பு அளிப்பவர்.
|
23. உங்கள் வடக்கயிறுகள் தளர்ந்து தொங்கும்; அவற்றால் பாய் மரத்தை நிலையாய்ப் பிடிக்க இயலாது; பாய் விரிக்கவும் முடியாது; அப்பொழுது திரளான கொள்ளைப் பொருள் பங்கிடப்படும்; முடவரும் கொள்ளைப் பொருளைச் சூறையாடுவர்.
|
24. சீயோனில் வாழ்பவர் எவரும் "நான் நோயாளி" என்று சொல்லமாட்டார். அதில் குடியிருக்கும் மக்களின் தீச்செயல் மன்னிக்கப்படும்.
|