1. {மனிதனின் கீழ்ப்படியாமை} PSஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது.
|
3. ஆனால், ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார்,” என்றாள்.
|
5. ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
|
6. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான்.
|
7. அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.PEPS
|
8. மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர்.
|
10. “உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்” என்றான் மனிதன்.
|
11. “நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?” என்று கேட்டார்.
|
12. அப்பொழுது அவன், “என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்” என்றான்.
|
13. ஆண்டவராகிய கடவுள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், “பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்” என்றாள்.PEPSQS
|
14. 14. {கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்} ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், BR “நீ இவ்வாறு செய்ததால்,QEQS கால்நடைகள், காட்டுவிலங்குகள்QEQS அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்.QEQS உன் வயிற்றினால் ஊர்ந்துQEQS உன் வாழ்நாள் எல்லாம்QEQS புழுதியைத் தின்பாய்.QEQS
|
15. உனக்கும் பெண்ணுக்கும், BR உன் வித்துக்கும் அவள் வித்துக்கும்QEQS பகையை உண்டாக்குவேன்.QEQS அவள் வித்து உன் தலையைக்QEQS காயப்படுத்தும்.QEQS நீ அதன் குதிங்காலைக்QEQS காயப்படுத்துவாய்” என்றார்.QEQS
|
16. அவர் பெண்ணிடம், BR “உன் மகப்பேற்றின் வேதனையைQEQS மிகுதியாக்குவேன்;QEQS வேதனையில் நீ குழந்தைகள்QEQS பெறுவாய்.QEQS ஆயினும் உன் கணவன்மேல்QEQS நீ வேட்கைகொள்வாய்;QEQS அவனோ உன்னை ஆள்வான்”QEQS என்றார்.QEQS
|
17. அவர் மனிதனிடம், BR “உன் மனைவியின் சொல்லைக்QEQS கேட்டு, உண்ணக்கூடாது என்றுQEQS நான் கட்டளையிட்டு விலக்கியQEQS மரத்திலிருந்து நீ உண்டதால்QEQS உன் பொருட்டு நிலம்QEQS சபிக்கப்பட்டுள்ளது;QEQS உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன்QEQS பயனை உழைத்து நீ உண்பாய்.QEQS
|
18. முட்செடியையும் முட்புதரையும்QEQS உனக்கு அது முளைப்பிக்கும்.QEQS வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய்.QEQS
|
19. நீ மண்ணிலிருந்துQEQS உருவாக்கப்பட்டதால்QEQS அதற்குத் திரும்பும்வரைQEQS நெற்றி வியர்வை நிலத்தில் விழQEQS உழைத்து உன் உணவை உண்பாய்.QEQS நீ மண்ணாய் இருக்கிறாய்;QEQS மண்ணுக்கே திரும்புவாய்” என்றார்.QEPEPS
|
22. பின்பு, ஆண்டவராகிய கடவுள், “மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது” என்றார்.
|
23. எனவே, ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.
|
24. இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார். ஏதேன் தோட்டத்திற்குக் கிழக்கே வாழ்வின் மரத்திற்குச் செல்லும் வழியைக் காப்பதற்குக் கெருபுகளையும் சுற்றிச் சுழலும் சுடரொளி வாளையும் வைத்தார்.PE
|