1. {லாபான் வீட்டை யாக்கோபு வந்தடைதல்} PSயாக்கோபு கீழ்த்திசை மக்களின் நாட்டை நோக்கிக் காலெடுத்து வைத்துப் பயணமானார்.
|
2. இதோ! வயல்வெளியில் ஒரு கிணற்றையும், அதன் அருகே கிடை போட்டிருந்த ஆட்டுமந்தைகள் மூன்றையும் கண்டார். அந்தக் கிணற்றிலிருந்துதான் மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டப்படும். அதன் வாய் ஒரு பெரிய கல்லால் மூடப்பட்டிருந்தது.
|
3. மந்தைகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபின் இடையர்கள் கல்லைப் புரட்டி, அவை குடித்து முடிந்ததும், மறுபடியும் கல்லைக் கிணற்று வாயின்மேல் தூக்கிவைப்பது வழக்கம்.PEPS
|
4. யாக்கோபு இடையர்களை நோக்கி, “சகோதரரே, நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என, அவர்கள்; “நாங்கள் காரானிலிருந்து வருகிறோம்” என்றார்கள்.
|
5. மீண்டும் அவர்; “நாகோரின் பேரன் லாபானை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவர்கள், “அவரை எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
|
6. “அவர் நலம்தானா?” என்று யாக்கோபு கேட்க, அவர்கள் “ஆம், அவர் நலமே. இதோ! அவர் மகள் ராகேல் தன் ஆடுகளை ஓட்டிக் கொண்டு வருகிறாள்” என்றார்கள்.
|
7. அப்பொழுது யாக்கோபு, “பொழுது சாய இன்னும் வெகுநேரம் இருக்கிறது! மந்தைகளை ஒன்றுசேர்ப்பதற்கு நேரம் ஆகவில்லை. ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லுங்கள்” என்றார்.
|
8. அதற்கு அவர்கள், “நாங்கள் அப்படிச் செய்யக்கூடாது. ஏனெனில், எல்லா மந்தைகளையும் ஒன்றுசேர்த்த பின்னரே கிணற்று வாயினின்று கல் புரட்டப்படும். அப்பொழுதுதான் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம்” என்று சொன்னார்கள்.
|
9. இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பவளான ராகேல் தன் தந்தையின் ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.
|
10. ராகேல் தன் தாய்மாமன் லாபானின் மகள் என்றும் ஆடுகள் அவனுடையவை என்றும் யாக்கோபு கண்டார்; எனவே, கிணற்றை மூடியிருந்த கல்லைப் புரட்டித் தன் தாய்மாமன் லாபானின் மந்தைக்குத் தண்ணீர் காட்டினார்;
|
12. பின்பு, தாம் அவள் தந்தைக்கு உறவினர் என்றும் ரெபேக்காவின் மகன் என்றும் அவளுக்குத் தெரிவிக்க, உடனே அவள் ஓடிப்போய்த் தன் தந்தையிடம் சொன்னாள்.
|
13. தன் சகோதரியின் மகன் யாக்கோபு வந்த செய்தி கேட்டவுடன் லாபான் அவருக்கு எதிர்கொண்டோடி, அவரை அரவணைத்து முத்தமிட்டுத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அங்கு யாக்கோபு தமக்கு நேர்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தார்.
|
14. லாபான் அவரிடம், “நீ என் எலும்பும் சதையுமல்லவா?” என்றான். அவனுடன் அவர் ஒரு மாத காலம் தங்கியிருந்தார்.
|
15. {யாக்கோபு லேயாவையும் ராகேலையும் மணந்து கொள்ளல்} PSஅதன்பின், லாபான் யாக்கோபை நோக்கி, “நீ என் உறவினன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய்? சொல்” என்றான்.
|
18. யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார்.
|
19. அதற்கு லாபான், “அவளை அந்நியன் ஒருவனுக்குக் கொடுப்பதைவிட, உனக்குக் கொடுப்பதே மேல். என்னோடு தங்கியிரு” என்றான்.
|
20. அப்படியே யாக்கோபு ஏழாண்டுகள் ராகேலை முன்னிட்டு வேலை செய்தார். ஆனால், அவர் அவள்மீது வைத்திருந்த அன்பின் மிகுதியால் அது அவருக்குச் சில நாட்களாகவே தோன்றியது.PEPS
|
21. பின்னர், யாக்கோபு லாபானை நோக்கி; “நான் என் மனைவியோடு சேரும்பொருட்டு, அவளை எனக்குத் தாரும். என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன” என்றார்.
|
23. ஆனால், மாலையானதும் அவன் தன் மகள் லேயாவை அழைத்துக் கொண்டுபோய் யாக்கோபிடம் விட, அவர் அவளுடன் உறவு கொண்டார்.
|
25. அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: “நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?” என்றார்.
|
27. ஆகையால், நீ இவளோடு ஏழு நாள்களைக் கழி. இன்னும் ஏழாண்டுகள் என்னிடம் வேலை செய்தால் அவளையும் உனக்குக் கொடுப்பேன்” என்றான்.
|
28. அவ்வாறே, யாக்கோபு லேயாவுடன் ஏழு நாள்களைக் கழித்தார். அதன் பின், லாபான் தன் மகள் ராகேலை அவருக்கு மனைவியாகக் கொடுத்தான்.
|
30. யாக்கோபு ராகேலுடன் கூடிவாழ்ந்தார். அவளை லேயாவைவிட அதிகம் நேசித்தார். லாபானிடம் மேலும் ஏழு ஆண்டுகள் வேலை செய்தார்.
|
31. {யாக்கோபின் புதல்வர்கள்} PSஇப்படியிருக்க லேயா வெறுப்புக்குள்ளானதை ஆண்டவர் கண்டு அவருக்குத் தாய்மைப்பேறு அருளினார். ராகேலோ மலடியாகவே இருந்தார்.
|
32. லேயா கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார். இப்பொழுது என் கணவர் என்மீது அன்புகூர்வார் என்பது உறுதி’ என்று கூறி, அவனுக்கு ‘ரூபன்’* என்று பெயரிட்டார்.
|
33. மீண்டும் அவர் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்’ என்று சொல்லி, அவனுக்குச் ‘சிமியோன்’* என்று பெயரிட்டார்.
|
34. அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்’ என்று கூறி அவனுக்கு ‘லேவி’* என்று பெயரிட்டார்.
|
35. அவர் மீண்டும் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்போது ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்’, என்று சொல்லி அவனுக்கு ‘யூதா’* என்று பெயரிட்டார். அதன்பின் அவருக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.PE
|