2. "மானிடா! இறைவாக்காகச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; "ஐயோ! துன்பத்தின் நாள் வருகின்றது" என்று அலறுங்கள்;
|
3. ஏனெனில் அருகில் உள்ளது அந்த நாள்; ஆண்டவருக்குரிய அந்நாள் அண்மையில் உள்ளது; அது மேகத்தின் நாள்; வேற்றினத்தாருக்கு அழிவின் நாள்.
|
4. எகிப்திற்கு எதிராய் ஒருவாள் வரும்; கூசு பகுதியில் திகைப்பு மேலோங்கும்; எகிப்தில் கொல்லப்பட்டோர் வீழ்கையில் அதன் செல்வங்கள் வாரிக்கொண்டு செல்லப்படும்; அதன் அடித்தளங்கள் அழிந்துபோகும்.
|
5. எகிப்துடன் கூசு, பூத்து, லூது, அனைத்து அரேபியா, லிபியா மற்றும் நான் உடன்படிக்கை செய்து கொண்ட நாட்டின் மக்கள் யாவரும் வாளால் வீழ்வர்.
|
6. ஆண்டவர் கூறுவது இதுவே; எகிப்தின் கூட்டு நாடுகள் வீழும்; அதன் பெருமைக்குரிய வலிமை தோல்வியுறும்; மிக்தோல் முதல் சீனிம் வரையிலுள்ள பகுதிக்குள் எல்லாரும் வாளால் வீழ்வர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
|
7. அவர்கள் பாழாக்கப்பட்ட நாடுகளுக்குள் பாழாகிக் கிடப்பர்; அவர்களின் நகரங்கள், அழிந்த நகரங்கள் நடுவே அழிந்து கிடக்கும்.
|
8. நான் எகிப்துக்குத் தீ வைத்து அதற்குத் துணையாயிருந்தோரை நொறுக்கும்போது "நானே ஆண்டவர்" என்பதை அறிந்து கொள்வர்.
|
9. அந்நாளில் கூசு மக்களின் மனவுறுதியைக் குலைத்த நான் கப்பலில் தூதரை அனுப்புவேன்; எகிப்தின்; அழிவு நாளில் திகில் அவர்களை ஆட்கொள்ளும்; ஏனெனில் அந்நாள் உண்மையிலேயே வரப்போகின்றது.
|
10. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; பாபிலோனின் மன்னன் நெபுகத்னேசரின் கையால் எகிப்தின் செல்வத்தை அழிக்கப்போகின்றேன்.
|
11. மக்களினங்களில் மிகவும் வலிமை அவன் படைகளும் நாட்டை அழிக்கக் கொண்டு வரப்படும்; எகிப்திற்கு எதிராய் அவர்கள் வாளை உருவி, கொலையுண்டோரால் நாட்டை நிரப்புவர்.
|
12. ஆறுகளின் தண்ணீரை வற்றச் செய்து தீயோருக்கு நாட்டை விற்றுவிடுவேன். அன்னியர் துணையால் நாட்டையும் அதிலுள்ள யாவற்றையும் வெறுமையாக்குவேன். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.
|
13. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நான் சிலைகளை அழிப்பேன்; நோபில் இருக்கும் உருவங்களுக்கு முடிவுகட்டுவேன்; எகிப்தில் இனி மன்னன் இரான்; நாடு முழுவதும் அச்சத்தைப் பரப்புவேன்.
|
14. பத்ரோசு நாட்டை நான் பாழாக்குவேன்; சோவான் நகருக்கு நெருப்பு வைப்பேன்; நோ நகரின்மீது தண்டனை வரச் செய்வேன்.
|
15. எகிப்தின் அரணாய் இலங்கும் சீன்மீது என் சினத்தைக் கொட்டுவேன்; நோ நகரின் எண்ணற்ற மக்களை வெட்டி வீழ்த்துவேன்.
|
16. எகிப்துக்கு நெருப்பிடுவேன்; சீன் நகரம் துன்பத்தால் புலம்பும்; புயலினால் நோ அலைக்கழிக்கப்படும்; தீராத நெருக்கடியில் நோபு தவிக்கும்.
|
18. எகிப்தின் கொழுவை நான் முறிக்கையில், தெகபனகேசு நகரின் பகல் இரவாகும்; இறுமாப்புக்குரிய அதன் வலிமை அங்கே முடிவுக்குக் கொண்டு வரப்படும்; மேகங்களால் அது மூடப்படும்; சிறையிருப்புக்கு அதன் சிற்றூர்கள் செல்லும்.
|
21. "மானிடா! எகிப்தின் மன்னன் பார்வோனின் கையை நான் முறித்து விட்டேன். ஆயினும், அது குணமாகும்படி கட்டுப்போடப்படவில்லை; வாளேந்தும் அளவுக்கு வலிமை பெறும்படி துணிகளால் சுற்றப்படவுமில்லை.
|
22. எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் எகிப்தின் மன்னன் பார்வோனுக்கு எதிராய் இருக்கிறேன். அவனுடைய இரு கைகளையும்-நலமான கையையும் ஏற்கெனவே ஒடிந்த கையையும்-முறித்து, அவன் கையினின்று வாளை விழச் செய்வேன்.
|
24. பாபிலோன் மன்னனின் கைகளை வலுப்படுத்தி, என் வாளை அவன் கையில் கொடுப்பேன். ஆனால், பார்வோனின் கைகளையோ முறிப்பேன். அவன் பாபிலோன் மன்னனின் முன்னிலையில் படுகாயமுற்ற மனிதனாய்ப் புலம்புவான்.
|
25. நான் பாபிலோன் மன்னனின் கையில் வாளைக் கொடுத்து அதை அவன் எகிப்துக்கு எதிராய்ச் சுழற்றச் செய்வேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.
|
26. எகிப்தியரைப் பல்வேறு மக்களிடையேயும், நாடுகளிடையேயும் சிதறடிப்பேன். அப்போது 'நானே ஆண்டவர்' என்பதை அவர்கள் அறிந்து கொள்வர். "
|