1. அதற்குப் பின்னர் அப்சலோம் தனக்கென ஒரு தேரையும் குதிரையும் தனக்கு முன்பாக ஓட ஐம்பது ஆள்களையும் அமர்த்திக்கொண்டான்.
|
2. அப்சலோம் அதிகாலையில் எழுந்து நகர வயலின் பாதை அருகே நிற்பான்; யாரேனும் தனக்கிருந்த வழக்கை முன்னிட்டு அரசரிடம் தீர்ப்பு கேட்க வந்தால் அவனை அப்சலோம் தன்னிடம் அழைத்து, "நீ எந்நகரிலிருந்து வருகிறாய்? என்று கேட்பான். அவன், "உம் அடியான் இந்த நகரிலிருந்து இஸ்ரயேலின் இந்தக் குலத்திலிருந்து வருகிறேன் "என்று பதில் சொல்வான்.
|
3. அப்போது அப்சலோம், "உன் வழக்கு சரியானது, நியாயமானது. ஆனால் அரசரின் சார்பாக உன்னை விசாரிக்க எவரும் இல்லை.
|
4. நான் மட்டும் இந்நாட்டில் நீதிபதியாக இருந்தால் வழக்குள்ளவர்கள் அனைவரும் என்னிடம் வருவார்கள். நானும் அவர்களுக்கு நீதிவழங்குவேன் "என்பான்.
|
6. அரசரிடம் வழக்கை முன்னிட்டு வந்த இஸ்ரயேலர் அனைவரிடமும் அப்சலோம் இவ்வாறு செய்து இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டான்.
|
7. நான்கு ஆண்டுகள் கழிந்தபின் ஒருநாள் அப்சலோம் அரசரிடம், "நான் ஆண்டவருக்குச் செய்துள்ள நேர்ச்சையை நிறைவேற்ற வேண்டும். எபிரோன் செல்ல தயைகூர்ந்து அனுமதிதாரும்.
|
8. உமது அடியான் சிரியாவிலுள்ள கெசூரில் வாழ்ந்த போது, "ஆண்டவர் என்னை எருசலேமுக்குத் திரும்பிக் கொண்டு சென்றால், நான் ஆண்டவரைத் தொழுவேன், என்று ஒரு நேர்ச்சை செய்தேன்" என்றான்.
|
10. பின் அப்சலோம் இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களுக்கும் இரகசியத் தூதர் மூலம் நீங்கள் எக்காள முழக்கம் கேட்டவுடன் அப்சலோம் எபிரோனில் அரசர் ஆகிவிட்டார் "என்று முழங்குங்கள் என்று சொல்லியனுப்பினான்.
|
11. எருசலேமிலிருந்து அழைக்கப்பட்ட இருநூறு பேர் சென்றனர். வஞ்சகமின்றி இதுபற்றி ஏதும் அறியாதவராய் அப்சலோமிடம் சென்றனர்.
|
12. அப்சலோம் பலி செலுத்திய போது, தாவீதின் ஆலோசகனான கீலோவியன் அகிதோபலை அவனது நகர் கீலோவிலிருந்து வருமாறு சொல்லியனுப்பினான். சதி வலுவடைந்தது; அப்சலோமின் ஆதரவாளருடைய எண்ணிக்கையும் மிகுதியானது.
|
13. அப்போது தூதன் ஒருவன் தாவீதிடம் வந்து, "அப்சலோம் இஸ்ரயேலரின் உள்ளங்களைக் கவர்ந்து கொண்டான் "என்று கூறினான்.
|
14. தாவீது தம்மோடு எருசலேமிலிருந்த அலுவலர் அனைவரிடமும், "வாருங்கள் நாம் தப்பியோடுவோம், ஏனெனில் அப்சலோமிற்கு முன்பாக நாம் தப்ப முடியாது. விரைவில் வெளியேறுங்கள். இல்லையேல் அவன் விரைவில் நம்மை மேற்கொண்டு, நமக்குத் தீங்கு விளைவிப்பான்; நகரையும் வாள்முனையால் தாக்குவான்" என்றார்.
|
15. அதற்கு அரச அலுவலர், "எம் தலைவராம் அரசரின் ஏவல்களுக்காகவே உம் அடியார்கள் காத்திருக்கிறோம்" என்று அரசரிடம் கூறினர்.
|
16. அரசரும் அவருடன் அவர் வீட்டார் அனைவரும் வெளியேறினர். ஆனால் வீட்டைக் காக்கும்படி தம் வைப்பாட்டியர் பத்துப் பேரை அரசர் விட்டுச் சென்றார்.
|
18. அவர் தம் அனைத்து அலுவலர்களும் அவர் முன் அணிவகுத்துச் சென்றனர். காத்திலிருந்து அவர் பின் வந்த அறுநூறு பேர் கெரேத்தியர், பெலேத்தியர், கித்தியர் ஆகியோர் அனைவரும் அரசருக்கு முன்பாக அணிவகுத்துச் சென்றனர்.
|
19. அப்போது அரசர் கித்தியன் இத்தாயிடம், நீ ஏன் எங்களோடு வருகிறாய்? திரும்பிச் சென்று அரசனோடு தங்கு. ஏனெனில் நீர் ஓர் அன்னியன். நாடு கடத்தப்பட்டவன்.
|
20. நீ நேற்று வந்தவன். இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன். திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக" என்று கூறினார்.
|
21. இத்தாய் அதற்கு மறுமொழியாக, வாழும் ஆண்டவர் மேல் ஆணை! என் தலைவராம் அரசர் மேல் ஆணை! வாழ்வாகட்டும். சாவாகட்டும். என் தலைவராம் அரசர் எங்கிருப்பாரோ, அங்கே உம் அடியானும் இருப்பான்" என்று அரசரிடம் கூறினான்.
|
22. தாவீது இத்தாயிடம், "சரி முன்னே செல்" என்று சொல்ல, கித்தியான இத்தாயும் அவனோடு அவன் ஆள்களும் சிறுவர் சிறுமியர் அனைவரும் முன்சென்றனர்.
|
23. மக்கள் யாவரும் கடந்து சென்றதைக் கண்டு, நாடு முழுவதும் புலம்பிற்று, அரசர் கிதரோன் அருவியைக் கடந்தார். மக்கள் அனைவரும் பாலை நிலத்தை நோக்கிச் சென்றனர்.
|
24. இதோ! சாதோக்கும் அவரோடு லேவியர் அனைவரும் கடவுளின் உடன்படிதக்கைப் பேழையைச் சுமந்து கொண்டு வந்தனர். மக்கள் அனைவரும் நகரைக் கடக்கும் வரை கீழே வைத்திருந்தனர். அபியாத்தார் அங்கே வந்தார்.
|
25. அரசர் சாதோக்கை நோக்கி, கடவுளின் பேழையை நகருக்குத் திருப்பி எடுத்துச் செல். ஆண்டவரின் பார்வையில் எனக்கு கருணைக் கிடைத்தால், அவர் என்னை திருப்பிக் கொணர்ந்து அதனையும் அதன் உறைவிடத்தையும் நான் காணச் செய்வார்.
|
26. மீது எனக்கு விருப்பமில்லை" என்று அவர் கூறினால், இதோ நான் இருக்கிறேன்! அவர் விருப்படியே எனக்கு செய்யட்டும் என்று கூறினார்.
|
27. மேலும் அரசர் குருவாகிய சாதோக்கை நோக்கி, நீரும், திருக்காட்சியாளர்தாமே. நீரும் உம்மோடு இருக்கும் இரு புதல்வரும், உம் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானின் நலத்துடன் நகருக்குத் திரும்புங்கள்.
|
28. நான் பாலைநிலத்தில் எல்லைப் பகுதிகளில் உன்னிடமிருந்து எனக்கு செய்தி வரும் வரை நான் காத்திருப்பேன் "என்றார்.
|
30. தாவீது அழுதுக் கொண்டே ஒலிவமலை ஏறிச்சென்றார். தலையை மூடிக் கொண்டு வெறுங்காலோடு அவர் நடந்தார். அவரோடிருந்த மக்கள் அனைவரும் தன் தலையை மூடிக் கொண்டு அழுதுகொண்டே ஏறிச் சென்றனர்.
|
31. அப்சலோமுடன் இருக்கும் சதிகாரருள் அகிதோபாலும் ஒருவன் என்று கூறப்பட்ட போது, தாவீது, ஆண்டவரே! உம்மை வேண்டுகிறேன். அகிதோபல் மூடத்தனமான ஆலோசனையை அளிப்பானாக! என்றார்.
|
32. மக்கள் கடவுளைத் தொழுத மலையுச்சிக்குத்; தாவீது வந்து சேர்ந்தார். அப்போது அர்க்கியனான ஊசாய் கிழிந்த ஆடையோடும் புழுதிபடிந்த தலையோடும் அவரைச் சந்தித்தான்.
|
34. ஆனால் நீ நகருக்குத் திரும்பினால், அப்சலோமிடம் அரசே உம் அடியான் யான் முன்பு உம் தந்தைக்கு பணியாளாக இருந்தது போலவே இனி உமக்கும் பணியானாக இருப்பேன் எனச் சொல்லி எனக்காக அகிதோபலின் ஆலோசனையை முறியடிக்க முடியும்.
|
35. அங்குக் குரு சாதோக்கும் அபியத்தாரும் உன்னோடு இருக்கின்றனர் அல்லவா? அரச மாளிகையிலிருந்து நீ கேட்கின்ற அனைத்தையும் குரு சாதோக்கிடமும் அபியத்தாரிடமும் எடுத்துச் சொல்.
|
36. அவர்களின் இரு புதல்வர்களும், அதாவது சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும் இருக்கின்றனர். நீ கேட்ட அனைத்தையும் அவர்கள் வழியாக எனக்கு சொல்லி அனுப்பு என்று கூறினார்.
|