4. ஆரோனின் புதல்வர்; நாதாபு, அபிகூ, எலயாசர், இத்தாமர். எலயாசருக்குப் பினகாசு பிறந்தார்; பினகாசுக்கு அபிசூவா பிறந்தார்.
|
10. யோகனானுக்கு அசரியா பிறந்தார்; சாலமோன் எருசலேமில் கட்டிய திருக்கோவிலில் குருவாகப் பணி புரிந்தவர் இவரே.
|
15. ஆண்டவர் நெபுகத்னேசரின் கைவன்மை கொண்டு எருசலேமையும் யூதாவையும் சிறைப்படுத்தியபோது யோசதாக்கும் நாடுகடத்தப்பட்டார்.
|
31. ஆண்டவரின் இல்லத்தில் பேழை தங்கியிருந்தபோது அங்கே திருப்பாடல் பணிக்கெனத் தாவீது நியமித்திருந்தவர்கள் இவர்களே.
|
32. எருசலேமில் சாலமோன் ஆண்டவரின் இல்லத்தைக் கட்டியெழுப்பும் வரை, அவர்கள் சந்திப்புக்கூடாரத் திருஉறைவிடத்தின்முன் திருப்பாடல்கள் பாடிப் பணியாற்றினார்கள். அவர்கள் தங்கள் பணிமுறையின்படி ஊழியம் செய்து வந்தார்கள்.
|
33. அங்குத் திருப்பணியாற்றியவர்களும் அவர்களின் புதல்வரும் இவர்களே; கோகாத்திய மக்களுள் ஏமான் என்னும் பாடகர்; அவர் யோவேலின் மகன்; அவர் சாமவேலின் மகன்;
|
39. ஏமானின் வலப்புறம் பணியாற்றியவர் அவர் சகோதரர் ஆசாபு. ஆசாபு பெரக்கியாவின் மகன்; அவர் சிமயாவின் மகன்.
|
44. ஏமானின் இடப்புறம் பணியாற்றிய அவர்களின் சகோதரரான மெராரியின் புதல்வர்; அவர் ஏத்தான், அவர் கீசியின் மகன்; அவர் அப்தியின் மகன்; அவர் மல்லூக்கின் மகன்,
|
48. அவர்கள் சகோதரராகிய பிற லேவியர் கடவுளது இல்லத்தின் திருஉறைவிடத்து அனைத்துப் பணிகளுக்குமென்று நியமிக்கப்பட்டனர்.
|
49. ஆரோனும் அவர் புதல்வரும் எரி பலி பீடத்தில் பலியிட்டு, தூபப் பீடத்தில் தூபம் காட்டினர். அவர்கள் திருத்தூயகத் தொடர்பான அனைத்துத் திருப்பணிகளையும், செய்து ஆண்டவரின் ஊழியன் மோசேயின் கட்டளைப்படி இஸ்ரயேலுக்கெனப் பாவம் போக்கும் பலி செலுத்தி வந்தார்கள்.
|
54. லேவியரின் எல்லைகளுக்குள் விழுமாறு குறிக்கப்பட்ட குடியிருப்புகள் இவையே; ஆரோன் புதல்வருள் கோகாத்தியக் குடும்பத்தாருக்கு முதல் சீட்டு விழுந்தது.
|
57. ஆரோனின் புதல்வருக்கு வழங்கப்பட்ட புகலிடங்கள்; எபிரோன், லிப்னா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்; யத்தீர், எஸ்தமோவா, அவற்றின் மேய்ச்சல் நிலங்கள்;
|
60. பென்யமின் குலத்தினின்று கிடைத்தவை; கேபா, அதன் மேய்ச்சல் நிலங்கள்; ஆலமேத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அனத்தோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள். இந்த நகர்கள் பதின்மூன்றும் அவர்கள் குடும்பங்கள் வாரியாகக் கோகாத்தியருக்கு வழங்கப்பட்டன.
|
61. எஞ்சியருந்த கோகாத்தின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக மனாசேயின் பாதிக்குலத்தின் பத்து நகர்கள் சீட்டுக் குலுக்கி வழங்கப்பட்டன.
|
62. கேர்சோம் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக இசக்கார், ஆசேர், நப்தலி பாசானிலிருக்கும் மனாசே ஆகிய குலங்களிலிருந்து கிடைத்த நகர்கள் பதின்மூன்று.
|
63. மெராரியின் புதல்வருக்கு அவர்கள் குடும்ப வாரியாக ரூபன், காத்து, செபுலோன் ஆகிய குலங்களிலிருந்து விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு நகர்கள் வழங்கப்பட்டன.
|
65. இவ்வாறு அவர்கள் மேலே குறிப்பிடப்பட்ட நகர்களை குலுக்கல் முறையில் இஸ்ரயேலுக்கு யூதா, சிமியோன், பென்யமின் ஆகிய குலங்களிலிருந்து லேவியருக்கு வழங்கினார்கள்.
|
66. கோகாத்தின் புதல்வர்களுள் இன்னும் சில குடும்பங்களுக்கு எப்ராயிம் குலத்தின் எல்லைகளிலிருந்து நகர்கள் கிடைத்தன.
|
67. அவர்களுக்கு அளிக்கப்பட்ட புகலிட நகர்கள்; எப்ராயிம் மலைப்பகுதியில் இருக்கும் செக்கேம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கெசேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
|
70. மனாசேயின் பாதிக்குலத்தில் ஆனேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; பிலயாம், அதன் மேய்ச்சல் நிலங்கள்; இவையே கோகாத்தின் புதல்வரின் எஞ்சிய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டவை.
|
71. கேர்சோம் புதல்வருக்கு மனாசே பாதிக்குலக் குடும்பங்களினின்று கிடைத்தவை; பாசானிலுள்ள கோலான், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அஸ்தரோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
|
72. இசக்கார் குலத்திலிருந்து கிடைத்தவை; கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தபராத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்.
|
74. ஆசேர் குலத்திலிருந்து கிடைத்தவை; மாசால், அதன் மேய்ச்சல் நிலங்கள்; அப்தோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
|
76. நப்தலி குலத்திலிருந்து கிடைத்தவை; கலிலேயாவிலிருக்கும் கெதேசு, அதன் மேய்ச்சல் நிலங்கள்; அம்மோன், அதன் மேய்ச்சல் நிலங்கள்; கிரித்தாயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
|
77. மெராரியின் எஞ்சிய புதல்வருக்குச் செபுலோன் குலத்திலிருந்து கிடைத்தவை; ரிம்மோனோ, அதன் மேய்ச்சல் நிலங்கள்; தாபோர், அதன் மேய்ச்சல் நிலங்கள்.
|
78. எரிகோவுக்கு அப்பால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன் குலத்திலிருந்து கிடைத்தவை; பாலை நிலத்திலுள்ள பெட்சேர், அதன் மேய்ச்சல் நிலங்கள்; யாகுசா, அதன் மேய்ச்சல் நிலங்கள்;
|
80. காத்து குலத்திலிருந்து கிடைத்தவை; கிலயாதிலுள்ள இராமோத்து, அதன் மேய்ச்சல் நிலங்கள்; மகனயிம், அதன் மேய்ச்சல் நிலங்கள்;
|