தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 சாமுவேல்

2 சாமுவேல் அதிகாரம் 22

தாவீதின் வெற்றிப் பாடல்
(திபா 18)

1 ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது: 2 “ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3 என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. 4 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். 5 ஏனெனில், சாவின் அலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 6 பாதாளக் கயிறுகள் எனனைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. 7 என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என்குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. 8 அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின. 9 அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக் கனல் வெளிப்பட்டது. 10 வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது. 11 கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார். 12 காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார். 13 அவர் தம் திருமுன்னின் பேரொளியி னின்று நெருப்புக் கனல் தெறித்தது. 14 ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார். 15 தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களால் அவர்களைக் கலங்கடித்தார். 16 ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது. 17 உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார். 18 என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார். என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார். 19 எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்று கோலாய் இருந்தார். 20 நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார். 21 ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார். 22 ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்குசெய்து என் கடவுளை விட்டு அகலவில்லை. 23 அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை. 24 அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன். 25 ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன். 26 மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்! 27 தூயோர்க்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர். 28 எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர். 29 ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். 30 உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். 31 இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். 32 ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? 33 இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே. 34 அவர் என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார். * அப 3: 19. 35 போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்! 36 பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர். 37 நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை. 38 என் எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை. 39 நான் அவர்களைக் கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை; அவர்கள் என் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். 40 போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர். 41 என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன். 42 உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 43 எனவே, நான் அவர்களை மண்ணின் புழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெருச் சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன். 44 என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்களும் எனக்குப் பணிவிடை செய்தனர். 45 வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிந்தனர். 46 வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர். [* ‘போர்க்கோலம் பூண்டு’ என்பது எபிரேய பாடம்.. ] 47 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக! 48 எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே! 49 என் பகைவரிடமிருந்து என்னை அழைத்துவந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்! 50 ஆகவே, ஆண்டவரே! பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன். * உரோ 15: 9. 51 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்! தாம் திருப்பொழிவுசெய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!”
1. {தாவீதின் வெற்றிப் பாடல்(திபா 18)} ஆண்டவர் தாவீதை அவருடைய எதிரிகள் அனைவரின் கையினின்றும் சவுலின் கையினின்றும் விடுவித்தபோது அவர் ஆண்டவருக்குப் பண்ணிசைத்துப் பாடியது: 2. “ஆண்டவர் என் காற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; 3. என் கடவுள்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்; எனக்கு மீட்பளிக்கும் வல்லமை; என் அரண்; என் தஞ்சம்; என் மீட்பர். கொடுமையினின்று என்னை விடுவிப்பவரும் அவரே. 4. போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன். என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். 5. ஏனெனில், சாவின் அலைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன; அழிவின் சுழல்கள் என்னை மூழ்கடித்தன. 6. பாதாளக் கயிறுகள் எனனைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னைச் சிக்க வைத்தன. 7. என் நெருக்கடி வேளையில் நான் ஆண்டவரிடம் மன்றாடினேன்; என் கடவுளை நோக்கிக் கதறினேன்; தமது கோவிலினின்று அவர் என்குரலைக் கேட்டார்; என் கதறல் அவர் செவிகளுக்கு எட்டியது. 8. அப்பொழுது, மண்ணுலகம் அசைந்து அதிர்ந்தது; வானத்தின் கீழ்த்தளங்கள் நடுங்கிக் கிடுகிடுத்தன; அவர்தம் கடுஞ்சினத்தால் அவை நடுநடுங்கின. 9. அவரது நாசியினின்று புகை கிளம்பிற்று; அவரது வாயினின்று எரித்தழிக்கும் தீ மூண்டது; அவரிடமிருந்து நெருப்புக் கனல் வெளிப்பட்டது. 10. வானைத் தாழ்த்தி அவர் கீழிறங்கினார்; கார் முகில் அவரது காலடியில் இருந்தது. 11. கெருபுமீது அவர் ஏறிப் பறந்து வந்தார்; காற்றை இறக்கைகளாகக் கொண்டு விரைந்து வந்தார். 12. காரிருளை அவர் மூடுதிரை ஆக்கிக் கொண்டார்; நீர் கொண்ட முகிலைக் கூடாரமாக்கிக் கொண்டார். 13. அவர் தம் திருமுன்னின் பேரொளியி னின்று நெருப்புக் கனல் தெறித்தது. 14. ஆண்டவர் வானங்களில் இடியென முழங்கினார்; உன்னதர் தம் குரலை அதிரச் செய்தார். 15. தம் அம்புகளை எய்து அவர் அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களால் அவர்களைக் கலங்கடித்தார். 16. ஆண்டவரின் கடிந்துரையாலும் அவரது மூச்சுக் காற்றின் வலிமையாலும் கடலின் அடிப்பரப்பு தென்பட்டது; நிலவுலகின் அடித்தளம் காணப்பட்டது. 17. உயரத்தினின்று அவர் என்னை எட்டிப் பிடித்துக் கொண்டார்; வெள்ளப் பெருக்கினின்று என்னைக் காப்பாற்றினார். 18. என் வலிமைமிகு எதிரியிடமிருந்து அவர் என்னை விடுவித்தார். என்னைவிட வலிமைமிகு பகைவரிடமிருந்து என்னைப் பாதுகாத்தார். 19. எனக்கு இடுக்கண் வந்த நாளில் அவர்கள் என்னை எதிர்த்தார்கள்; ஆண்டவரோ எனக்கு ஊன்று கோலாய் இருந்தார். 20. நெருக்கடியற்ற இடத்திற்கு அவர் என்னைக் கொணர்ந்தார்; நான் அவர் மனத்திற்கு உகந்தவனாய் இருந்ததால் அவர் என்னை விடுவித்தார். 21. ஆண்டவர் எனது நேர்மைக்கு உரிய பயனை எனக்களித்தார்; என் மாசற்ற செயலுக்கு ஏற்பக் கைம்மாறு செய்தார். 22. ஏனெனில், நான் ஆண்டவர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்தேன்; பொல்லாங்குசெய்து என் கடவுளை விட்டு அகலவில்லை. 23. அவர்தம் நீதிநெறிகளை எல்லாம் என் கண்முன் வைத்திருந்தேன்; அவர்தம் விதிமுறைகளை நான் ஒதுக்கித் தள்ளவில்லை. 24. அவர் முன்னிலையில் நான் மாசற்றவனாய் இருந்தேன்; தீங்கு செய்யா வண்ணம் என்னைக் காத்துக் கொண்டேன். 25. ஆண்டவர் என் நேர்மைக்கு உரிய பயனை அளித்தார்; அவர்தம் பார்வையில் நான் குற்றமற்றவனாய் இருந்தேன். 26. மாறா அன்பர்க்கு மாறா அன்பராகவும் மாசற்றோர்க்கு மாசற்றவராகவும் நீர் விளங்குகின்றீர்! 27. தூயோர்க்குத் தூயவராகவும் வஞ்சகர்க்கு விவேகியாகவும் உம்மை நீர் காட்டுகின்றீர். 28. எளியோர்க்கு நீர் மீட்பளிக்கின்றீர்; செருக்குற்றோரை ஏளனத்துடன் நீர் பார்க்கின்றீர். 29. ஆண்டவரே! நீரே என் ஒளி விளக்கு! ஆண்டவர் என் இருளை ஒளிமயமாக்குகின்றார். 30. உம் துணையுடன் நான் எப்படையையும் நசுக்குவேன்; என் கடவுளின் துணையால் எம்மதிலையும் தாண்டுவேன். 31. இந்த இறைவனின் வழி நிறைவானது; ஆண்டவரின் வாக்கு நம்பத்தக்கது; அவரிடம் அடைக்கலம் புகும் அனைவர்க்கும் அவரே கேடயமாய் இருக்கின்றார். 32. ஏனெனில், ஆண்டவரைத் தவிர வேறு இறைவன் யார்? நம் கடவுளைத் தவிர நமக்கு வேறு கற்பாறை ஏது? 33. இந்த இறைவன் எனக்கு வலிமைமிகு கோட்டையாய் உள்ளார்; என் வழியை பாதுகாப்பானதாய்ச் செய்தவரும் அவரே. 34. அவர் என் கால்களை மான்களின் கால்களைப்போல் ஆக்குகின்றார்; உயர்ந்த இடத்தில் என்னை நிலை நிறுத்துகின்றார். [* அப 3:19. ] 35. போருக்கு என்னை அவர் பழக்குகின்றார்; எனவே, வெண்கல வில்லையும் என் புயங்கள் வளைக்கும்! 36. பாதுகாக்கும் உம் கேடயத்தை நீர் எனக்கு வழங்கினீர்; உமது துணையால் என்னைப் பெருமைப்படுத்தினீர். 37. நான் நடக்கும் வழியை அகலமாக்கினீர்; என் கால்கள் தடுமாறவில்லை. 38. என் எதிரிகளைத் துரத்திச் சென்று அழித்தேன்; அவர்களை அழித்தொழிக்கும் வரை நான் திரும்பவில்லை. 39. நான் அவர்களைக் கொன்று அழித்தேன்; அவர்கள் எழுந்திருக்கவில்லை; அவர்கள் என் காலடியில் வீழ்ந்து கிடந்தார்கள். 40. போரிடும் ஆற்றலை எனக்கு அரைக் கச்சையாக அளித்தீர்; என்னை எதிர்த்தவர்களை எனக்கு அடிப்பணியச் செய்தீர். 41. என் எதிரிகளைப் புறமுதுகிடச் செய்தீர்: என்னை வெறுத்தோரை நான் அழித்துவிட்டேன். 42. உதவி வேண்டி அவர்கள் கதறினார்கள்; ஆனால், அவர்களுக்கு உதவுவார் யாருமில்லை; அவர்கள் ஆண்டவரை நோக்கி மன்றாடினார்கள்; ஆனால், அவர்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை. 43. எனவே, நான் அவர்களை மண்ணின் புழுதியென நசுக்கினேன்; அவர்களைத் தெருச் சேறென மிதித்துத் தெறிக்கச் செய்தேன். 44. என் மக்களின் கலகத்தினின்று என்னை விடுவித்தீர்; பிற இனங்களுக்கு என்னைத் தலைவனாக்கினீர்; முன்பின் அறியாத மக்களும் எனக்குப் பணிவிடை செய்தனர். 45. வேற்று நாட்டவர் என்னிடம் கூனிக்குறுகி வந்தனர்; அவர்கள் என்னைப்பற்றிக் கேள்விப்பட்டவுடன் எனக்குக் கீழ்ப்படிந்தனர். 46. வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்; தம் அரண்களிலிருந்து நடுங்கிக் கொண்டு* வெளியே வந்தனர். [* ‘போர்க்கோலம் பூண்டு’ என்பது எபிரேய பாடம்.. ] 47. ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்; என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக! என் மீட்பின் கற்பாறையாம் கடவுள் மாட்சியுறுவாராக! 48. எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்; மக்களினங்களை எனக்குக் கீழ்ப்படுத்தியவரும் அவரே! 49. என் பகைவரிடமிருந்து என்னை அழைத்துவந்தவர் அவரே! என் எதிரிகளுக்கு மேலாக என்னை உயர்த்தினீர்! என்னைக் கொடுமைப்படுத்தியவரிடமிருந்து நீர் என்னைக் காத்தீர்! 50. ஆகவே, ஆண்டவரே! பிற இனத்தாரிடையே உம்மைப் போற்றுவேன்; உம் பெயருக்குப் புகழ் மாலை சாற்றுவேன். [* உரோ 15:9. ] 51. தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அவளிப்பவர் அவர்! தாம் திருப்பொழிவுசெய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே!”
  • 2 சாமுவேல் அதிகாரம் 1  
  • 2 சாமுவேல் அதிகாரம் 2  
  • 2 சாமுவேல் அதிகாரம் 3  
  • 2 சாமுவேல் அதிகாரம் 4  
  • 2 சாமுவேல் அதிகாரம் 5  
  • 2 சாமுவேல் அதிகாரம் 6  
  • 2 சாமுவேல் அதிகாரம் 7  
  • 2 சாமுவேல் அதிகாரம் 8  
  • 2 சாமுவேல் அதிகாரம் 9  
  • 2 சாமுவேல் அதிகாரம் 10  
  • 2 சாமுவேல் அதிகாரம் 11  
  • 2 சாமுவேல் அதிகாரம் 12  
  • 2 சாமுவேல் அதிகாரம் 13  
  • 2 சாமுவேல் அதிகாரம் 14  
  • 2 சாமுவேல் அதிகாரம் 15  
  • 2 சாமுவேல் அதிகாரம் 16  
  • 2 சாமுவேல் அதிகாரம் 17  
  • 2 சாமுவேல் அதிகாரம் 18  
  • 2 சாமுவேல் அதிகாரம் 19  
  • 2 சாமுவேல் அதிகாரம் 20  
  • 2 சாமுவேல் அதிகாரம் 21  
  • 2 சாமுவேல் அதிகாரம் 22  
  • 2 சாமுவேல் அதிகாரம் 23  
  • 2 சாமுவேல் அதிகாரம் 24  
×

Alert

×

Tamil Letters Keypad References