சகரியா 9 : 1 (RCTA)
ஓர் இறைவாக்கு: ஆண்டவரின் வாக்கு ஆதிராக் நாட்டில் இருக்கிறது, தமஸ்கு நகரத்தில் தங்கியிருக்கிறது; ஏனெனில், இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களைப் போலவே, ஆராம் நாட்டு நகரங்களும் ஆண்டவருக்கே சொந்தம்.
சகரியா 9 : 2 (RCTA)
அதற்கு எல்லையாய் அமைந்திருக்கும் ஏமாத்தும், ஞானத்தில் சிறந்திருக்கும் தீரும் சீதோனும் சொந்தமே.
சகரியா 9 : 3 (RCTA)
தீர் தன்னைச் சுற்றி அரண் அமைத்துக் கொண்டது; தூசியைப்போல வெள்ளியும், தெருக்களின் சேற்றைப் போல பொன்னையும் சேர்த்து வைத்தது.
சகரியா 9 : 4 (RCTA)
ஆனால் இதோ, ஆண்டவர் அந்நகரைப் பிடித்துக்கொள்வார், அதன் செல்வப் பெருக்கைக் கடலில் தள்ளுவார். அந்நகரமும் நெருப்புக்கு இரையாகும்.
சகரியா 9 : 5 (RCTA)
அஸ்காலோன் அதைக் கண்டு அஞ்சி நடுங்கும், காசாவும் கண்டு மனவேதனையால் துடிக்கும், அக்காரோன் தன் நம்பிக்கை குலைந்ததால் துயரடையும், காசாவில் அரசன் இல்லாமல் அழிந்துபோவான்; அஸ்காலோன் குடிகளற்றுக்கிடக்கும்.
சகரியா 9 : 6 (RCTA)
அசோத்தில் கலப்பினத்து மக்கள் குடியிருப்பார்கள், பிலிஸ்தியரின் செருக்கை நாம் அழித்தொழிப்போம்.
சகரியா 9 : 7 (RCTA)
இரத்தம் வடியும் இறைச்சியை அதன் வாயினின்றும், அருவருப்பான உணவை அதன் பற்களிடையிலிருந்தும் அகற்றுவோம். அவ்வினத்தாரும் நம் கடவுளுக்குரிய எஞ்சினோராய் இருப்பர், யூதாவில் ஒரு கோத்திரம் போல் இருப்பர்; அக்காரோன் ஊரார் எபுசேயரைப் போல் இருப்பர்.
சகரியா 9 : 8 (RCTA)
அங்குமிங்கும் திரிகிறவர்களுக்கு எதிராக நாமே நம் இல்லத்தினருகில் காவல் வீரனைப் போலப் பாளையமிறங்கித் தங்குவோம். கொடுமை செய்பவன் எவனும் அதன்மேல் வாரான்; ஏனெனில் அதன் நிலைமையை நாமே கண்ணால் கண்டோம்.
சகரியா 9 : 9 (RCTA)
சீயோன் மகளே, மிகுந்த மகிழ்ச்சியால் அக்களி, யெருசலேம் மகளே, ஆர்ப்பரி; இதோ, உன் அரசர் உன்னிடம் வருகிறார், நீதியும் வெற்றியும் பெற்றுக்கொண்ட அந்த வீரர் எளியவர்; கழுதையின் மேலும், பொதிமிருகக் குட்டியின் மேலும் அமர்ந்து வருகிறார்.
சகரியா 9 : 10 (RCTA)
எப்பிராயீமிடமிருந்து, தேர்ப்படையையும், யெருசலேமிலிருந்து குதிரைப்படையையும் அழிப்போம்; போர்க்கருவியான வில் முறிக்கப்படும்; புறவினத்தார்க்குச் சமாதானத்தை அறிவிப்பார்; அவருடைய ஆட்சி ஒரு கடல் முதல் மறுகடல் வரையும், பேராறு முதல் மாநிலத்தின் எல்லைகள் வரையும் செல்லும்.
சகரியா 9 : 11 (RCTA)
உன்னோடு நாம் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு நீரற்ற பாதாளத்திலிருந்து சிறைப் பட்டவர்களை விடுவிக்கிறோம்.
சகரியா 9 : 12 (RCTA)
நம்பிக்கையுள்ள கைதிகளே, உங்கள் அரணுக்குத் திரும்பி வாருங்கள்; இரு மடங்கு நன்மைகள் தருவோமென இன்று நாம் உங்களுக்கு அறிவிக்கிறோம்.
சகரியா 9 : 13 (RCTA)
யூதா என்னும் வில்லை நாணேற்றினோம், எப்பிராயீமை அதிலே அம்பாய் வைத்தோம்; கிரிஸ் நாடே, உன்னுடைய மக்கள் மீது சீயோனே, உன் மக்களை ஏவிவிட்டு, உன்னை வல்லவனின் வாளாக்குவோம்.
சகரியா 9 : 14 (RCTA)
அப்போது ஆண்டவர் அவர்கள் மீது தோன்றுவார், அவரது அம்பு மின்னலைப் போலப் பாய்ந்து செல்லும்; இறைவனாகிய ஆண்டவர் எக்காளவொலி எழுப்புவார், தென்றிசைச் சூறாவளி நடுவில் நடந்து போவார்.
சகரியா 9 : 15 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் அவர்களைப் பாதுகாப்பார்; கவண் வீரர்களை அவர்கள் விழுங்குவர், மிதித்துத் துவைப்பர்; இரசத்தைப் போல் இரத்தம் குடித்துப் போதை கொள்வர்; கிண்ணம் போல நிரம்பியும், பீடத்தின் கொம்புகள் போல நனைந்தும் இருப்பர்.
சகரியா 9 : 16 (RCTA)
அந்நாளில் அவர்களுடைய கடவுளாகிய ஆண்டவர் அவர்களை மீட்பார்; ஏனெனில் அவர்களும் அவர் தம் மக்களின் மந்தையே; மணிமுடியில் பதித்த விலையுயர்ந்த கற்களைப் போல் அவரது நாட்டில் அவர்கள் ஒளிர்வார்கள்.
சகரியா 9 : 17 (RCTA)
ஆம், அவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி! எவ்வளவு அழகு! தானியம் இளங்காளையரைத் தழைக்கச் செய்யும், புதுத் திராட்சை இரசம் கன்னிப் பெண்களைச் செழிக்கச் செய்யும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

BG:

Opacity:

Color:


Size:


Font: