ரோமர் 9 : 1 (RCTA)
பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ள என் மனச் சான்று எனக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன், கிறிஸ்துவுக்குள் உண்மையேசொல்லுகிறேன், பொய்சொல்லவில்லை.
ரோமர் 9 : 2 (RCTA)
உள்ளத்தில் எனக்குப் பெருந்துயரமும், இடைவிடாத வேதனையும் உண்டு;
ரோமர் 9 : 3 (RCTA)
இரத்த உறவினரான என் சகோதரர்களுக்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகவும் தயங்கேன். அவர்கள் இஸ்ராயேல் மக்கள் அல்லரா?
ரோமர் 9 : 4 (RCTA)
அவர்களே கடவுளின் மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், அவர்களிடையில் தான் இறைவன் தம் மாட்சிமையை விளங்கச் செய்தார், உடன்படிக்கைகளும் திருச்சட்டமும், இறை வழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடம்தான் ஒப்படைக்கப்பட்டன.
ரோமர் 9 : 5 (RCTA)
குலத் தந்தையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள்; மனிதன் என்ற முறையில் கிறிஸ்துவும் அவர்களினின்றே தோன்றினார். இவரோ எல்லாவற்றிற்கும் மேலான கடவுள், என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
ரோமர் 9 : 6 (RCTA)
கடவுளின் வார்த்தை பொய்த்தது என்பது கருத்தன்று. ஏனெனில், இஸ்ராயேல் மரபில் தோன்றிய அனைவருமே இஸ்ராயேலர் அல்லர்.
ரோமர் 9 : 7 (RCTA)
ஆபிரகாமின் வழிவந்தவர்கள் அனைவருமே அவருடைய பிள்ளைகள் அல்லர்; மறை நூலில், 'உன் பெயரைத் தாங்க உன் வழிவந்தோர் ஈசாக்கின் வழியாய்த்தான் பிறப்பர்' என்று உள்ளதன்றோ?
ரோமர் 9 : 8 (RCTA)
அதாவது இயல்பு முறைப்படி பிறந்த பிள்ளைகள் கடவுளின் பிள்ளைகள் அல்லர்; வாக்குறுதியின்படி பிறந்த பிள்ளைகளே ஆபிரகாமின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.
ரோமர் 9 : 9 (RCTA)
'குறிப்பிட்ட காலத்தில் திரும்பவும் வருவேன்; அப்பொழுது சாராள் ஒரு மகனுக்குத் தாயாய் இருப்பாள்' என்பதே அந்த வாக்குறுதி.
ரோமர் 9 : 10 (RCTA)
அது மட்டுமன்று, நம் தந்தையாகிய ஈசாக்கு என்னும் ஒருவரிடமிருந்தே ரெபெக்காள் இரட்டைக் குழந்தைகளைக் கருத்தாங்கிய போதிலும்,
ரோமர் 9 : 11 (RCTA)
குழந்தைகள் பிறக்குமுன்பே, நன்மையோ தீமையோ செய்யுமுன்பே,
ரோமர் 9 : 12 (RCTA)
' மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ் செய்வான் ' என்று அவளுக்குச் சொல்லப்பட்டது.
ரோமர் 9 : 13 (RCTA)
அவ்வாறே, ' யாக்கோபின் மேல் அன்பு கூர்ந்தேன். ஏசாவை வெறுத்தேன் ' என்று எழுதியுள்ளது. தாமே விரும்பித் தேர்ந்தெடுப்பதே கடவுளுடைய திட்டத்துக்கு அடிப்படை; மனிதர் செய்யும் செயல்களின்படி அன்று, அழைக்கும் இறைவனின் செயலின்படியே அத்திட்டம் நிறைவேறுமாறு அங்ஙனம் நிகழ்ந்தது.
ரோமர் 9 : 14 (RCTA)
இப்படியிருக்க நாம் என்ன சொல்வது? கடவுளிடம் அநீதியுண்டோ? ஒரு காலும் இல்லை.
ரோமர் 9 : 15 (RCTA)
ஏனெனில் அவரே மோயீசனிடம், ' எவனுக்கு இரக்கம் காட்டவிரும்புகிறேனோ, அவனுக்கு இரக்கம் காட்டுவேன்; எவனுக்குக் கருணைபுரிய விரும்புகிறேனோ, அவனுக்கு கருணை புரிவேன் ' என்கிறார்.
ரோமர் 9 : 16 (RCTA)
ஆகவே விரும்புகிறவனாலும் அன்று, உழைக்கிறவனாலும் அன்று, இரக்கம் வைக்கும் கடவுளாலேயே எதுவும் ஆகும்.
ரோமர் 9 : 17 (RCTA)
ஏனெனில், பார்வோனுக்கு மறைநூல் கூறுவது: ' உன் வழியாய் என் வல்லமையைக் காட்டவும், என் பெயர் மண்ணுலகெங்கும் விளங்கவுமே நான் உன்னைத் தோற்றுவித்தேன் '.
ரோமர் 9 : 18 (RCTA)
ஆகவே தாம் விரும்புவதுபோல் ஒருவன் மேல் இரக்கம் வைக்கிறார், இன்னோருவனை அடங்காமனத்தினன் ஆக்குகிறார்.
ரோமர் 9 : 19 (RCTA)
' அப்படியானால், அவர் ஒருவன் மீது எவ்வாறு குற்றம் சாட்ட முடியும்? அவருடைய விருப்பத்தை யார் எதிர்க்கக் கூடும்?' என்று நீ கேள்வி கேட்கலாம்.
ரோமர் 9 : 20 (RCTA)
அற்ப மனிதா! கடவுளுக்கு எதிர் வினா விடுக்க நீ யார்? பாத்திரம் தன்னை உருவாக்கியவனிடம், ஏன் என்னை இவ்வாறு செய்தாய் என்று சொல்லுமோ?
ரோமர் 9 : 21 (RCTA)
ஒரே களிமண் மொத்தையிலிருந்து மதிப்புயர்ந்த கலனையோ மதிப்பற்ற கலனையோ வனையக் குயவனுக்கு அம்மண்மீது உரிமையில்லையோ?
ரோமர் 9 : 22 (RCTA)
கடவுளின் செயலும் இத்தகையதே. தமது சினத்தைக் காட்டவும், தமது வல்லமையைத் தெரியப்படுத்தவும் அவர் விரும்பியபோதிலும், அழிவுக்கும் அவருடைய சினத்துக்கும் இலக்கான கலன்கள் மட்டில் கடவுள் மிக்க பொறுமையாய் இருந்தாராயின், யார் என்ன சொல்ல முடியும்?
ரோமர் 9 : 23 (RCTA)
அதன் மூலம் தம் மாட்சிமையையும் இரக்கத்தையும் பெறுமாறு அவர் தயாரித்திருந்த கலன்கள் மட்டில் தமது மாட்சிமையின் வளத்தைத் தெரியப்படுத்த விரும்பினார்.
ரோமர் 9 : 24 (RCTA)
அந்தக் கலன்கள் யூதர்களிடையிலிருந்து மட்டுமன்று, புறவினத்தாரிடையிலிருந்தும் அவரால் அழைக்கப்பட்ட நம்மையே குறிக்கின்றன.
ரோமர் 9 : 25 (RCTA)
அவ்வாறே ஓசே எழுதிய நூலில் இறைவன்: ' என் மக்கள் அல்லாதவரை என் மக்கள் என அழைப்பேன். அன்பு செய்யப்படாதவளை அன்பு செய்யப்பட்டவள் என அழைப்பேன்.
ரோமர் 9 : 26 (RCTA)
" நீங்கள் என் மக்கள் அல்ல" என்று அவர்களுக்குச் சொல்லியிருந்த இடத்திலேயே, அவர்கள் உயிருள்ள கடவுளின் மக்கள் எனப்படுவர் '. என்கிறார்.
ரோமர் 9 : 27 (RCTA)
இஸ்ராயேலைக் குறித்து இசையாஸ் அறிக்கையிட்டது: ' இஸ்ராயேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தாலும், எஞ்சியிருப்பவர்களே மீட்கப்படுவர்.
ரோமர் 9 : 28 (RCTA)
இஸ்ராயேல் நாட்டில் ஆண்டவர் காலந்தாழ்த்தாமல் தமது வார்த்தையை முற்றிலும் நிறைவேற்றுவார்'.
ரோமர் 9 : 29 (RCTA)
மேலும் இசையாஸ் முன்னுரைத்ததுபோல்: ' வான் படைகளின் ஆண்டவர் நமக்கு வேராகிலும் விட்டு வைத்திராவிடில், சோதோமைப் போல் ஆகியிருப்போம், கொமோராவுக்கு ஒப்பாகியிருப்போம். '
ரோமர் 9 : 30 (RCTA)
அப்படியானால், இதன் முடிவென்ன? புறவினத்தார் இறைவனுக்கு ஏற்புடையவர்கள் ஆக முயற்சி செய்யாத போதிலும் அவருக்கு ஏற்புடையவர்கள் ஆக்கப்பட்டார்கள். அப்படி ஏற்புடையவர்கள் ஆனதோ விசுவாசத்தினாலே.
ரோமர் 9 : 31 (RCTA)
ஆனால், இறைவனுக்கு ஏற்புடையவர்களாக்கும் சட்டத்தை இஸ்ராயேல் மக்கள் பின்பற்ற முயன்றபோதிலும் அதன் உட்பொருளைக் கண்டடையவில்லை. ஏன்?
ரோமர் 9 : 32 (RCTA)
ஏனெனில், விசுவாசத்தின் மீது அன்று, செயல்களின் மீது நம்பிக்கை வைத்தனர்.
ரோமர் 9 : 33 (RCTA)
' இதோ தடுக்கி விழச் செய்யும் கல்லையும் இடறலான பாறையையும் சீயோனில் வைக்கிறேன். அதிலே விசுவாசம் வைப்பவன் ஏமாற்றம் அடையான் ' என்று எழுதியுள்ளவாறு, தடுக்கி விழச் செய்யும் கல்லின் மேல் தடுக்கி விழுந்தனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: