சங்கீதம் 93 : 1 (RCTA)
ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்; மகத்துவத்தை அவர் ஆடையாய் உடுத்தியுள்ளார். ஆண்டவர் வல்லமையைக் கச்சைப் போல் அணிந்து கொண்டிருக்கிறார்; பூவுலகை அவர் நிலைப்படுத்தினார், அது அசைவுறாது.
சங்கீதம் 93 : 2 (RCTA)
ஆதியினின்றே உமது அரியணை நிலையாய் உள்ளது. ஆதியினின்றே நீரும் உள்ளீர்.
சங்கீதம் 93 : 3 (RCTA)
ஆண்டவரே, வெள்ளம் எழும்புகிறது, வெள்ளம் இரைச்சலுடன் எழும்புகிறது; பேரிரைச்சலுடன் எழும்புகிறது.
சங்கீதம் 93 : 4 (RCTA)
பெரு வெள்ளத்தின் இரைச்சலை விட ஆண்டவர் வலிமை கொண்டவர் கடலின் அலைகளை விட வலிமை உள்ளவர்: உன்னதத்தில் வலிமை பூண்டவர்.
சங்கீதம் 93 : 5 (RCTA)
உம்முடைய நியமங்கள் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவை: ஆண்டவரே, புனிதமே உமது இல்லத்திற்கு ஏற்றது, எந்நாளும் ஏற்றதே.

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: