சங்கீதம் 67 : 1 (RCTA)
கடவுள் நம்மீது இரங்கி, நமக்கு ஆசி அளிப்பாராக: நம்மீது தம் திருமுக ஒளியை வீசுவாராக.
சங்கீதம் 67 : 2 (RCTA)
அப்போது உலகம் உமது வழியை அறிந்து கொள்ளும்: மக்களினங்கள் எல்லாம் உமது மீட்பை உணரும்.
சங்கீதம் 67 : 3 (RCTA)
இறைவா, மக்களினங்களின் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.
சங்கீதம் 67 : 4 (RCTA)
நீதியோடு மக்களை ஆள்கின்றீர், உலகத்து மக்களினங்கள் மீது ஆட்சி செலுத்துகின்றீர் என்று நாடுகள் அனைத்தும் மகிழ்ந்து கூறட்டும்.
சங்கீதம் 67 : 5 (RCTA)
இறைவா, மக்களினங்கள் உம்மைப் போற்றிப் புகழ்வார்களாக: மக்கள் எல்லாரும் உம்மைக் கொண்டாடுவார்களாக.
சங்கீதம் 67 : 6 (RCTA)
பூமி தன் பலனைத் தந்தது: கடவுள் நமக்கு ஆசி அளித்தார்.
சங்கீதம் 67 : 7 (RCTA)
கடவுள் நமக்கு ஆசி அளிப்பாராக: மாநிலத்தின் கடையெல்லை வரை மக்கள் அவருக்கு அஞ்சுவார்களாக.

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: