சங்கீதம் 54 : 1 (RCTA)
இறைவா உம் பெயரின் வல்லமையால் என்னைக் காத்தருளும்: உமது வல்லமையால் எனக்கு நீதி வழங்கும்.
சங்கீதம் 54 : 2 (RCTA)
இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
சங்கீதம் 54 : 3 (RCTA)
ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.
சங்கீதம் 54 : 4 (RCTA)
இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார்.
சங்கீதம் 54 : 5 (RCTA)
என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும்.
சங்கீதம் 54 : 6 (RCTA)
மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது.
சங்கீதம் 54 : 7 (RCTA)
எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.

1 2 3 4 5 6 7

BG:

Opacity:

Color:


Size:


Font: