சங்கீதம் 40 : 1 (RCTA)
நம்பினேன், ஆண்டவரை நம்பினேன், அவர் என் பக்கமாய்க் குனிந்து, என் கூக்குரலைக் கேட்டருளினார்.
சங்கீதம் 40 : 2 (RCTA)
அழிவு தரும் குழியினின்றும் சதுப்பு நிலச் சேற்றினின்றும் அவர் என்னைத் தூக்கிவிட்டார்; உறுதியான பாறையின் மீது என் காலடிகளை நிறுத்தினார், நடக்க எனக்கு உறுதி தந்தார்.
சங்கீதம் 40 : 3 (RCTA)
புதியதோர் பாடலை, நம் இறைவனைப்¢ புகழும் பாடல் ஒன்றை என் நாவினின்று எழச் செய்தார்: பலரும் இதைப்பார்த்து அச்சம் கொள்வார்; ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்.
சங்கீதம் 40 : 4 (RCTA)
தன் நம்பிக்கையெல்லாம் ஆண்டவர் மீது வைத்தவனே பேறு பெற்றவன்: சிலைகளை வழிபடுவோரைப் பின்பற்றாதவன், பொய்யானவற்றில் மனத்தைச் செலுத்தாதவன்- இவனே பேறு பெற்றவன்.
சங்கீதம் 40 : 5 (RCTA)
ஆண்டவரே, என் இறைவனே, வியத்தகு செயல்கள் பல நீர் செய்தீர்; எங்கள் பால் உமக்குள்ள எண்ணங்களில் உமக்கு நிகர் எவருமில்லை. அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில், அவை எண்ணிலடங்கா.
சங்கீதம் 40 : 6 (RCTA)
பலியும் காணிக்கையும் நீர் விரும்பவில்லை ஆனால் என் செவிகளை நீர் திறந்துவிட்டீர்: தகனப் பலியும் பாவம் போக்கும் பலிப்பொருளும் நீர் கேட்கவில்லை.
சங்கீதம் 40 : 7 (RCTA)
அப்போது நான் சொன்னது: "இதோ வருகிறேன், ஏட்டுச் சுருளில் என்னைக் குறித்து.
சங்கீதம் 40 : 8 (RCTA)
என் இறைவா, உம் திருவுளத்தின்படி நடப்பதே எனக்கின்பம் உம் திருச்சட்டத்தை என் உள்ளத்தில் கொண்டிருக்கிறேன் என்று எழுதப்பட்டுள்ளது".
சங்கீதம் 40 : 9 (RCTA)
மக்கட் பேரவையில் உம் நீதியை வெளிப்படுத்தினேன்: இதோ! நான் என் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே, இதை நீர் அறிவீர்.
சங்கீதம் 40 : 10 (RCTA)
உமது நீதியின் தன்மையை என் இதயத்துள் ஒளித்து வைக்கவில்லை; உமது சொல்லுறுதியைப் பற்றியும்,. உமது அருள் துணையைப் பற்றியும் வெளிப்படையாய்ப் பேசினேன். உமது அருளைப் பற்றியும் உமது வாக்குறுதியைப் பற்றியும் பேரவையில் பேசாமல் ஒளித்து வைக்கவில்லை.
சங்கீதம் 40 : 11 (RCTA)
நீரோ ஆண்டவரே, உமது இரக்கப் பெருக்கை எனக்குக் காட்ட மறக்காதேயும் உமது அருளும் உறுதி வாக்கும் என்னை என்றும் பாதுகாப்பனவாக.
சங்கீதம் 40 : 12 (RCTA)
எண்ணிக்கையிலடங்காத் தீமைகள் என்னைச் சூழ்ந்து கொண்டன நான் பார்த்தறிய முடியாத அளவுக்கு என் குற்றங்கள் என்னை வளைத்துக் கொண்டன, என் தலை மயிர்களைக் காட்டிலும் அவை மிகுதியானவை. என் நெஞ்சமோ அதனால் சோர்வடைந்து போயிற்று.
சங்கீதம் 40 : 13 (RCTA)
ஆண்டவரே, என்னை விடுவிக்க அருள் கூர்வீராக, ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.
சங்கீதம் 40 : 14 (RCTA)
என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் நாணி நிலை குலைவார்களாக, எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர் வெட்கத்தால் தலை குனிந்துப் பின்னடைவார்களாக.
சங்கீதம் 40 : 15 (RCTA)
ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
சங்கீதம் 40 : 16 (RCTA)
உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட் துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி! என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.
சங்கீதம் 40 : 17 (RCTA)
நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்: இறைவன் என்மேல் அக்கறை கொண்டுள்ளார். எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே: ஆண்டவரே, தாமதியாதேயும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

BG:

Opacity:

Color:


Size:


Font: