சங்கீதம் 27 : 1 (RCTA)
ஆண்டவரே என் ஒளி, ஆண்டவரே என் மீட்பு: நான் யாருக்கு அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் வாழ்வுக்கு அடைக்கலம், யாருக்கு நான் நடுங்கவேண்டும்?
சங்கீதம் 27 : 2 (RCTA)
என் பகைவர்களும் எதிரிகளுமாகிய தீயோர் என்னை விழுங்க வருவது போல் என்னைத் தாக்கும் போது, அவர்களே தடுமாறி விழுந்து போயினர்,
சங்கீதம் 27 : 3 (RCTA)
எனக்கெதிராய் அவர்கள் பாளையம் இறங்கினாலும் என் நெஞ்சம் கலங்காது: எனக்கெதிராய்ப் போரெழுந்தாலும் நான் நம்பிக்கையோடிருப்பேன்.
சங்கீதம் 27 : 4 (RCTA)
ஆண்டவரிடம் நான் வேண்டுவது ஒன்றே, நான் விரும்புவதும் ஒன்றே: ஆண்டவருடைய இல்லத்தில் நான் வாழ்நாள் முழுவதும் குடியிருக்கவேண்டும்; ஆண்டவருடைய இனிமையை நான் சுவைக்கவேண்டும்; அவரது ஆலயத்தை நான் பார்க்கவேண்டும்.
சங்கீதம் 27 : 5 (RCTA)
கேடு வரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்: தம் கூடாரத்தின் உட்புறத்தில் என்னை ஒளித்து வைப்பார்; உயர்ந்ததொரு பாறையில் என்னைத்தூக்கி வைப்பார்.
சங்கீதம் 27 : 6 (RCTA)
இப்போது என்னைச் சூழ்ந்து நிற்கும் எதிரிகள் மேல் வெற்றி கொண்டவனாய்த் தலைநிமிர்ந்து நடப்பேன்; அவருடைய கூடாரத்தில் அக்களிப்பு ஆரவாரத்துடன் பலிகளைச் சமர்பிப்பேன்: ஆண்டவருக்கு இன்னிசை பாடுவேன், புகழ் இசைப்பேன்.
சங்கீதம் 27 : 7 (RCTA)
ஆண்டவரே, நானும்மை நோக்கி எழுப்பும் குரலைக் கேட்டருளும்: என் மீது அருள் கூரும், என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்.
சங்கீதம் 27 : 8 (RCTA)
என் உள்ளம் உம்மேடு உரையாடுகிறது; உம்மை நான் பார்க்க விரும்புகிறேன்: ஆண்டவரே, நீர் எனக்கு இன்முகம் காட்டவேண்டுமென விழைகிறேன்.
சங்கீதம் 27 : 9 (RCTA)
உம் முகத்தை எனக்கு மறைத்துக் கொள்ளாதேயும்: நீரே எனக்குத் துணை, என்னைத் தள்ளிவிடாதேயும்: என் மீட்பராகிய இறைவா, என்னைக் கைவிடாதேயும்.
சங்கீதம் 27 : 10 (RCTA)
என் தாயும் தந்தையும் கைவிட்டாலும், ஆண்டவர் என்னை ஏற்றுக் கொள்வார்.
சங்கீதம் 27 : 11 (RCTA)
ஆண்டவரே, உம் வழியை எனக்குக் கற்பித்தருளும்: என் எதிரிகளின் பொருட்டு நேரிய வழியில் என்னை நடத்திச் செல்லும்.
சங்கீதம் 27 : 12 (RCTA)
என் எதிரிகளின் விருப்பத்திற்கு என்னை விட்டுவிடாதேயும்: ஏனெனில், பொய்ச்சாட்சி சொல்வோரும், கொடுமை செய்ய விரும்புவோரும் எனக்கெதிராய்க் கிளம்பினார்கள்.
சங்கீதம் 27 : 13 (RCTA)
நனோ வாழ்வோருடைய நாட்டில், ஆண்டவருடைய நலன்களைக் காண்போனென நம்புகிறேன்.
சங்கீதம் 27 : 14 (RCTA)
ஆண்டவரை எதிர்பார்த்து வல்லவனாயிரு: உன் உள்ளம் திடம் கொள்வதாக, ஆண்டவரை எதிர்பார்த்திரு.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

BG:

Opacity:

Color:


Size:


Font: