சங்கீதம் 130 : 1 (RCTA)
ஆண்டவரே, அளவிலா வேதனையில் உம்மை நோக்கிக் கூவி அழைக்கிறேன்.
சங்கீதம் 130 : 2 (RCTA)
ஆண்டவரே, என் கூக்குரலுக்குச் செவி சாய்த்தருளும்: என் வேண்டுதலின் குரலை உம் செவிகள் கவனமுடன் கேட்கட்டும்.
சங்கீதம் 130 : 3 (RCTA)
ஆண்டவரே, யான் செய்த பாவங்களை நினைவு கூர்வீராகில், உமக்கு முன் யார் நிற்க முடியும்?
சங்கீதம் 130 : 4 (RCTA)
வணக்கமுடன் நாங்கள் உமக்கு ஊழியம் செய்யுமாறு, நீர் பாவங்களை மன்னிக்கிறீர்.
சங்கீதம் 130 : 5 (RCTA)
ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கிறேன்: அவரது வாக்குறுதியில் என் ஆன்மா நம்பிக்கை கொண்டுள்ளது.
சங்கீதம் 130 : 6 (RCTA)
என் ஆன்மா ஆண்டவரை எதிர்நோக்குகின்றது: இரவின் காவலர் உதயத்தை எதிர்நோக்குவதை விட, அதிக ஆர்வமுடன் எதிர் நோக்குகின்றது. காவலர் உதயத்தை எதிர் பார்ப்பதற்கு மேலாக,
சங்கீதம் 130 : 7 (RCTA)
இஸ்ராயேலர் ஆண்டவரை எதிர்ப்பார்ப்பார்களாக: ஏனெனில் ஆண்டவரிடம் இரக்கம் உள்ளது; அவருடைய மீட்புத் துணை பொங்கி வழிகின்றது.
சங்கீதம் 130 : 8 (RCTA)
இஸ்ராயேலரை அவர் மீட்பார்: அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தினின்றும் அவர்களை மீட்டுக் கொள்வார்.

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: