சங்கீதம் 125 : 1 (RCTA)
ஆண்டவர் மீது நம்பிக்கையுள்ளவர்கள் சீயோன் மலை போல் இருக்கிறார்கள்: அது அசைவுறுவதில்லை; என்றுமே நிலைத்திருக்கும்.
சங்கீதம் 125 : 2 (RCTA)
யெருசலேமைச் சுற்றி மலைகள் உள்ளது போல், இப்போதும் எப்போதுமே ஆண்டவர் தம் மக்களைச் சூழ்ந்துள்ளார்.
சங்கீதம் 125 : 3 (RCTA)
பாவிகளுடைய அதிகாரம் நீதிமான்கள் மீது செல்லாது: நீதிமான்கள் தீமை செய்யத் தம் கைகளை நீட்ட மாட்டார்கள்.
சங்கீதம் 125 : 4 (RCTA)
ஆண்டவரே, நல்லோர்க்கும் நேரிய மனத்தோர்க்கும் நன்மை செய்தருளும்.
சங்கீதம் 125 : 5 (RCTA)
நேர்மையற்ற வழிகளில் செல்வோரை ஆண்டவர் தீயவர்களோடு சேர்த்துவிடுவாராக: இஸ்ராயேலுக்கோ சமாதானம் உண்டாவதாக!

1 2 3 4 5

BG:

Opacity:

Color:


Size:


Font: