சங்கீதம் 124 : 1 (RCTA)
ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், இஸ்ராயேலர் இங்ஙனம் திரும்பச் சொல்லட்டும்.
சங்கீதம் 124 : 2 (RCTA)
ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், நம்மை எதிர்த்து ஆட்கள் எழுந்த போது,
சங்கீதம் 124 : 3 (RCTA)
நம்மீது அவர்கள் சினம் மூண்டெழுந்த போது, உயிரோடு நம்மை விழுங்கியிருப்பர்.
சங்கீதம் 124 : 4 (RCTA)
அப்போது வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்: வெள்ளப் பெருக்கு நம் மேல் பாய்ந்திருக்கும்.
சங்கீதம் 124 : 5 (RCTA)
அது நம்மேல் பொங்கி எழுந்து பாய்ந்திருக்கும்.
சங்கீதம் 124 : 6 (RCTA)
ஆண்டவர் போற்றி: ஏனெனில் அவர் நம்மை எதிரிகளின் பற்களுக்கு இரையாகத் தரவில்லை.
சங்கீதம் 124 : 7 (RCTA)
வேடர்கள் வைத்த கண்ணியினின்று தப்பிய பறவை போல் நாம் உயிர் தப்பினோம்; கண்ணி அறுந்தது, நாம் பிழைத்தோம்.
சங்கீதம் 124 : 8 (RCTA)
ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: