நீதிமொழிகள் 5 : 1 (RCTA)
என் மகனே, நான் உனக்குக் கற்றுக் கொடுக்கிற ஞானத்தைக் கவனி. என் ஞானம் நிறை வார்த்தைகளுக்கும் செவி கொடு.
நீதிமொழிகள் 5 : 2 (RCTA)
அவ்வாறு செய்தால்தான் நீ உன் நினைவுகளைக் காக்கவும், உன் உதடுகள் என் போதனையை மதிக்கவுங் கூடும். பெண்ணின் பசப்புக்கு இணங்காதே.
நீதிமொழிகள் 5 : 3 (RCTA)
வேசியின் உதடுகள் தேனைவிடத் துளிக்கின்றதாயும், அவள் தொண்டை தைலத்தைவிட மிக மென்மையானதுமாயும் இருக்கின்றன.
நீதிமொழிகள் 5 : 4 (RCTA)
ஆனால், அவளுடைய முடிவுகள் மருக்கொழுந்துபோல் கசப்பானவையும், இருபுறமும் துவைந்த வாள்போல் கூரானவையுமாம்.
நீதிமொழிகள் 5 : 5 (RCTA)
அவள் கால்கள் மரணத்துக்கு இறங்குகின்றன. அவளுடைய காலடிகளும் பாதாளமட்டும் ஊடுருவிச் செல்கின்றன.
நீதிமொழிகள் 5 : 6 (RCTA)
வாழ்வு நெறியில் அவை நடப்பதில்லை. அவள் அடிகள் நிலையற்றனவும் ஆராய்ச்சிக்கு எட்டாதனவுமாய் இருக்கின்றன.
நீதிமொழிகள் 5 : 7 (RCTA)
இப்படியிருக்க, என் மகனே, இப்போது எனக்குச் செவி கொடு. உன் வாயின் வார்த்தைகளைப் புறக்கணிக்காதே.
நீதிமொழிகள் 5 : 8 (RCTA)
உன் வழியை அவளை விட்டுத் தூரமாக்கு, அவளுடைய வீட்டு வாயிலுக்கும் அண்மையில் போகாதே.
நீதிமொழிகள் 5 : 9 (RCTA)
உன் மானத்தை அன்னியருக்கும், உன் வாழ்நாட்களைக் கொடியவருக்கும் கொடாதே.
நீதிமொழிகள் 5 : 10 (RCTA)
கொடுத்தால், அன்னியர் உன்னாலே ஆற்றலுள்ளவராகக்கூடும். மேலும், உன் உழைப்பின் பலன் அவர்கள் வீட்டில் போய்ச் சேரும்.
நீதிமொழிகள் 5 : 11 (RCTA)
அப்பொழுது உன் மாமிசத்தையும் உன் உடம்பையும் அழித்துக் கெடுத்த பின்பு, கடைசியில், நீ பெருமூச்செறிந்து புலம்பி:
நீதிமொழிகள் 5 : 12 (RCTA)
ஐயோ! நான் அறிவுரையைப் பழித்ததும், என் இதயம் கண்டனங்களுக்கு அமையாததும் ஏன் ?
நீதிமொழிகள் 5 : 13 (RCTA)
நான் எனக்கு அறிவுறுத்தியவர்களுடைய வாக்கைக் கேட்கவுமில்லை; என் ஆசிரியர்களுக்குச் செவி சாய்க்கவுமில்லை.
நீதிமொழிகள் 5 : 14 (RCTA)
(ஆதலால்), ஏறக்குறைய எல்லாத் தீமைகளும் சபையிலும் சங்கத்தின் மத்தியிலும் என்மேல் விழுந்தன என்பாய்.
நீதிமொழிகள் 5 : 15 (RCTA)
நீ உன் சொந்தக் கேணியின் நீரையும், உன் சொந்த ஊற்றின் தண்ணீரையும் குடி.
நீதிமொழிகள் 5 : 16 (RCTA)
உன் தெருக்களில் உன் தண்ணீரைப் பாய்ச்சிப் பகிர்ந்து கொள்.
நீதிமொழிகள் 5 : 17 (RCTA)
நீ (மட்டும்) தனியனாய் அவற்றைக் கொண்டிரு; அன்னியர் அக்காரியத்திலே உன் பங்காளிகளாய் இருத்தல் தகாது.
நீதிமொழிகள் 5 : 18 (RCTA)
உன் ஊற்று ஆசி பெறுவதாக. உன் இளமையின் மனைவியோடு மகிழ்ந்திரு.
நீதிமொழிகள் 5 : 19 (RCTA)
அவள் உனக்கு மிகவும் அன்பிக்குரிய பெண்மானும், மிகப்பிரியமுள்ள மான் குட்டியும்போல் இருக்கக்கடவாள். அவள் கொங்கைகள் உன்னை எப்போதும் இன்பத்தால் நிறைப்பன. இடைவிடாமல் அவளுடைய அன்பில் இன்பம் துய்ப்பாயாக.
நீதிமொழிகள் 5 : 20 (RCTA)
என் மகனே, அன்னிய பெண்ணால் நீ மயங்கப் படுவது ஏன் ?
நீதிமொழிகள் 5 : 21 (RCTA)
ஆண்டவர் மனிதனுடைய வழிகளை உற்றுப் பார்த்து, அவனுடைய காலடிகள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்.
நீதிமொழிகள் 5 : 22 (RCTA)
அக்கிரமிகள் தங்கள் சொந்த அநீதங்களாகிய கண்ணிக்குள்ளே சிக்கிப்போய், பாவக் கயிறுகளாலேயே கட்டவும் படுகிறார்கள்.
நீதிமொழிகள் 5 : 23 (RCTA)
அக்கிரமி கண்டனத்தை ஏற்றுக் கொள்ளாததனால் (தன் அக்கிரமத்தில்) மடிவான். அவன் தன் மிகுதியான அறிவீனத்தால் ஏமாற்றப்படுவான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23

BG:

Opacity:

Color:


Size:


Font: