நீதிமொழிகள் 29 : 1 (RCTA)
தன்னைத் திருத்துகிறவனை இகழும் பிடிவாதக்காரன்மீது திடீர் அழிவு வந்து சேரும். நலமும் அவனைத் தொடரமாட்டாது.
நீதிமொழிகள் 29 : 2 (RCTA)
நீதிமான்களின் எண்ணிக்கை அதிகரிக்கையில் குடிகள் மகிழ்வார்கள். அக்கிரமிகள் ஆட்சியைக் கைப்பற்றுகையில் மக்கள் புலம்பி அழுவார்கள்.
நீதிமொழிகள் 29 : 3 (RCTA)
ஞானத்தை நேசிக்கும் மனிதன் தன் தந்தையை மகிழச் செய்கிறான். வேசிகளைப் பேணுகிறவனோ தன் பொருளை இழப்பான்.
நீதிமொழிகள் 29 : 4 (RCTA)
நீதியுள்ள அரசன் நாட்டைச் செழிப்பிக்கிறான். பேராசை சொண்ட அரசன் அதை நாசமாக்குகிறான்.
நீதிமொழிகள் 29 : 5 (RCTA)
தன் நண்பனுக்கு இச்சகமும் கபடமுமுள்ள வார்த்தைகளை எவன் பேசுகிறானோ, அவன் அவனுடைய கால்களுக்கு வலையையே விரிக்கிறான்.
நீதிமொழிகள் 29 : 6 (RCTA)
பாவம் செய்கின்ற அக்கிரமியான மனிதன் பாவ வலையிலேயே சிக்கிக் கொள்வான். நீதிமானோ இன்புற்று மகிழ்வான்.
நீதிமொழிகள் 29 : 7 (RCTA)
நீதிமான் ஏழைகளின் நிலைமையை அறிகிறான். அக்கிரமி அதை அறியான்.
நீதிமொழிகள் 29 : 8 (RCTA)
கேடு கெட்ட மனிதர்கள் நகரத்தைக் குலைக்கிறார்கள். ஞானிகளோ கோப வெறியை அகற்றுகிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 9 (RCTA)
ஞானி மதியீனனுடன் விவாதிக்கையில், கோபித்தாலும் நகைத்தாலும் அவர்கள் (இருவரும்) உடன்பட மாட்டார்கள்.
நீதிமொழிகள் 29 : 10 (RCTA)
இரத்த வெறியுள்ள மனிதர் நேர்மையாளனைப் பகைப்பர். நீதிமான்களோ அவனுடைய உயிரைக் (காப்பாற்றத்) தேடுகிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 11 (RCTA)
மதி கெட்டவன் தன் திறமையையெல்லாம் வெளிக்காட்டுகிறான். ஞானி மதிப்பைத் தேடாமல் அதை மறைக்கிறான்.
நீதிமொழிகள் 29 : 12 (RCTA)
பொய் வார்த்தைகளை மனம் விரும்பிக் கேட்கிற அரசன் (தன்) ஊழியர்கள் அனைவரையும் தீயோரென்று எண்ணுகிறான்.
நீதிமொழிகள் 29 : 13 (RCTA)
ஏழையும் கடன்காரனும் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டனர். இருவரையும் ஒளிரச் செய்பவர் ஆண்டவரே.
நீதிமொழிகள் 29 : 14 (RCTA)
ஏழைகளை உண்மையின்படி தீர்ப்பிடுகின்ற அரசனின் அரியணை என்றும் நிலைபெறும்.
நீதிமொழிகள் 29 : 15 (RCTA)
பிரம்பும் கண்டனமும் ஞானத்தைத் தருகின்றன. தன் மனம்போல் விடப்படுகிற பையனோ தன் தாயை அவமதிக்கிறான்.
நீதிமொழிகள் 29 : 16 (RCTA)
அக்கிரமிகள் பெருக, அக்கிரமங்களும் பெருகும். நீதிமான்களோ அவர்களுக்கு வரப்போகும் அழிவைக் காண்பார்கள்.
நீதிமொழிகள் 29 : 17 (RCTA)
உன் மகனை (அறநெறியில்) படிப்பித்தால், அவன் உனக்கு ஆறுதலாய் இருப்பான்; உன் ஆன்மாவுக்கும் இன்பத்தைத் தருவான்.
நீதிமொழிகள் 29 : 18 (RCTA)
இறைவாக்கு அற்றுப் போகையில் குடிகள் நிலைகுலைந்து போவார்கள். ஆனால், கடவுளின் கட்டளையைக் கைக்கொண்டொழுகுகிறவன் பேறு பெற்றவனாம்.
நீதிமொழிகள் 29 : 19 (RCTA)
அடிமையை வார்த்தைகளால் கண்டிக்கக் கூடாது. ஏனென்றால், அவன் நீ சொல்வதைக் கண்டுபிடித்தாலும் மறுமொழி சொல்லத் தயங்குவான்.
நீதிமொழிகள் 29 : 20 (RCTA)
பேசத் துடிக்கும் மனிதனைக் கண்டாயோ ? அவனுடைய திருந்துதலைவிட மதியீனத்தையே அதிகமாய் நம்ப வேண்டும்.
நீதிமொழிகள் 29 : 21 (RCTA)
இளமை தொட்டு அடிமையைச் செல்லமுடன் பேணுகிறவன் பிற்காலத்தில் அவன் அவமதிப்பவன் என்று கண்டறிவான்.
நீதிமொழிகள் 29 : 22 (RCTA)
கோபம் கொள்ளும் மனிதன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். எளிதாய்ச் சினம் கொள்பவன் பாவம் செய்ய அதிகச் சார்புள்ளவனாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 29 : 23 (RCTA)
அகங்காரியைத் தாழ்வு பின்தொடர்கின்றது. மனத்தாழ்ச்சியுடையோன் மகிமை அடைவான்.
நீதிமொழிகள் 29 : 24 (RCTA)
திருடனுடன் பங்கு பெறுகிறவன் தன் ஆன்மாவைப் பகைக்கிறான். அவன் ஆணையிடுகிறதைக் கேட்டும் தான் (அவனைக்) காட்டிக் கொடுப்பதில்லை.
நீதிமொழிகள் 29 : 25 (RCTA)
மனிதனுக்கு அஞ்சுகிறவன் விரைவில் மடிவான். ஆண்டவரில் நம்பிக்கை வைப்பவன் உயர்த்தப்படுவான்.
நீதிமொழிகள் 29 : 26 (RCTA)
அரசனின் சமூகத்தைத் தேடுகிறவர்கள் பலராம். ஆனால், ஒவ்வொருவருடைய நீதித் தீர்ப்பும் ஆண்டவரிடமிருந்து புறப்படுகின்றது.
நீதிமொழிகள் 29 : 27 (RCTA)
நீதிமான்கள் அக்கிரமியான மனிதனை வெறுக்கிறார்கள். அக்கிரமிகளோ நன்னெறியில் ஒழுகுகிறவர்களை வெறுக்கிறார்கள். வார்த்தையைக் காக்கிறவன் அழிவிற்கு ஆளாகவே மாட்டான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: