நீதிமொழிகள் 28 : 1 (RCTA)
எவனும் துரத்தாமலே அக்கிரமி ஓடுகின்றான். நீதிமானோ திடமுள்ள சிங்கம்போல் அச்சமின்றி இருப்பான்.
நீதிமொழிகள் 28 : 2 (RCTA)
குடிகளின் பாவங்களை முன்னிட்டே அதிகாரிகள் பெருகி வருகின்றனர். ஆனால் ஒருவனுடைய அறிவின் நிமித்தமாகவும், அவன் பேசுகிற நியாயமுள்ள வார்த்தைகளின் நிமித்தமாகவும் (நாட்டில்) ஒழுங்கு நிலையாய் இருக்கும்.
நீதிமொழிகள் 28 : 3 (RCTA)
ஏழைகளைத் துன்புறுத்தும் ஏழை பஞ்சத்தை வருவிக்கும் கடுமழைக்கு ஒப்பாயிருக்கிறான்.
நீதிமொழிகள் 28 : 4 (RCTA)
(தெய்வ) கட்டளையைக் கைநெகிழ்கிறவர்கள் அக்கிரமியைப் புகழ்கிறார்கள். (அதைக்) காக்கின்றவர்களோ அவன்மேல் மிகவும் எரிச்சல் கொள்கிறார்கள்.
நீதிமொழிகள் 28 : 5 (RCTA)
தீய மனிதர் ஒழுங்கானதைச் சிந்திக்கிறதில்லை. ஆனால், ஆண்டவரைத் தேடுகிறவர்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 28 : 6 (RCTA)
தீய வழிகளில் (நடக்கும்) செல்வனைவிட நேர்மையாய் நடக்கும் ஏழையே உத்தமன்.
நீதிமொழிகள் 28 : 7 (RCTA)
கட்டளையைக் கைக்கொண்டொழுகுபவன் ஞானமுள்ள மகனாய் இருக்கிறான். ஆனால், பேருண்டியாளரைப் பேணுகிறவன் தன் தந்தையை மானபங்கப் படுத்துகிறான்.
நீதிமொழிகள் 28 : 8 (RCTA)
வட்டிகளாலும் ஊதியத்தாலும் செல்வத்தைக் குவிக்கிறவன் ஏழைகள்மேல் இரக்கமுள்ளவனுக்கே அவற்றைச் சேகரிக்கிறான்.
நீதிமொழிகள் 28 : 9 (RCTA)
கட்டளையைக் கேளாதபடி தன் காதுகளைத் திருப்புகிறவனுடைய மன்றாட்டு வெறுப்புள்ளதாய் இருக்கும்.
நீதிமொழிகள் 28 : 10 (RCTA)
நீதிமான்களை ஏமாற்றித் தீய நெறியில் திருப்புகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுந்து மடிவான். நேர்மையுடையோரோ நலம் அடைவார்கள்.
நீதிமொழிகள் 28 : 11 (RCTA)
செல்வன் தனக்குத்தானே ஞானியாய்த் தோன்றுகிறான். ஆனால், விவேகமுள்ள ஏழை அவன் (ஞானத்தைச்) சோதித்தறிவான்.
நீதிமொழிகள் 28 : 12 (RCTA)
நீதிமான்களின் நன்மதிப்பிலே பலருக்கும் பெருமை. அக்கிரமிகளின் ஆட்சியிலே பலருக்கும் அழிவு.
நீதிமொழிகள் 28 : 13 (RCTA)
தன் பாவங்களை மறைக்கிறவன் வாழவே மாட்டான். ஆனால், அவைகளை அறிக்கை செய்து, விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.
நீதிமொழிகள் 28 : 14 (RCTA)
எப்போதும் அச்சம் கொண்டிருக்கிறவன் பேறு பெற்றோன். கல்நெஞ்சன் தீமையில் விழுந்து மடிவான்.
நீதிமொழிகள் 28 : 15 (RCTA)
இரக்கமற்ற அரசன் ஏழைக் குடிகளுக்கு முழங்குகின்ற சிங்கமும், பசித்திருக்கிற கரடியும் (போலாவான்).
நீதிமொழிகள் 28 : 16 (RCTA)
விவேகமற்ற பிரபு பொய்க் குற்றம் சாட்டுதலால் பலரை அழிவுக்கு ஆளாக்குகிறான். பேராசையைப் பகைக்கிறவனுடைய நாட்களோ நீடியவையாய் இருக்கும்.
நீதிமொழிகள் 28 : 17 (RCTA)
மாசற்ற இரத்தத்தைச் சிந்தின மனிதன் குழியில் விழமட்டும் ஓடினாலும் அவனைத் தடுக்காதீர்கள்.
நீதிமொழிகள் 28 : 18 (RCTA)
நேர்மையாய் நடக்கிறவன் பத்திரமாய் இருப்பான். தீய நெறிகளில் நடக்கிறவன் திடீரென விழுவான்.
நீதிமொழிகள் 28 : 19 (RCTA)
தன் நிலத்தை உழுகிறவன் அப்பத்தால் நிறைவு காண்பான். ஓய்வை விரும்புகிறவன் வறுமையால் வருத்தப்படுவான்.
நீதிமொழிகள் 28 : 20 (RCTA)
உண்மையுள்ளவன் மிகவும் புகழப்படுவான். செல்வம் சேர்க்கும் பேராசையால் பீடிக்கப்பட்டவன் மாசற்றவனாய் இரான்.
நீதிமொழிகள் 28 : 21 (RCTA)
நீதித் தீர்வையில் ஒருதலைச் சார்பு காட்டுகிறவன் நன்றாய்ச் செய்வதில்லை. அவன் ஒருவாய் உணவுக்காக உண்மையைக் கைவிடுகிறான்.
நீதிமொழிகள் 28 : 22 (RCTA)
மற்றவர்கள்மேல் பொறாமைப்பட்டுத் தானே செல்வனாக முயலும் மனிதன் தனக்கே வறுமை வருமென்பதை அறியான்.
நீதிமொழிகள் 28 : 23 (RCTA)
நாவின் இச்சகத்தால் ஒருவனை ஏய்க்கிறவனைவிட, இவனைக் கண்டிக்கிற மனிதன் இவனுக்கு அதிக விருப்பமுள்ளவனாய் இருப்பான்.
நீதிமொழிகள் 28 : 24 (RCTA)
தன் தாய் தந்தையரிடமிருந்து யாதொன்றை அபகரித்தும் அது பாவம் இல்லை என்கிறவன், கொலைபாதகத்தின் பங்காளியாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 28 : 25 (RCTA)
தன்னைத்தானே வீம்பு பாராட்டி அதில் பெருமைப்படுகிறவன் சச்சரவுகளைக் கிளப்புகிறான். ஆனால், ஆண்டவர்பால் நம்பிக்கையாய் இருக்கிறான் நிறைவு அடைவான்.
நீதிமொழிகள் 28 : 26 (RCTA)
தன் மன வலிமையில் ஊன்றி நம்பிக்கையாய் இருக்கிறவன் மதியீனனாய் இருக்கிறான். ஆனால், விவேகமாய் நடக்கிறவன் காப்பாற்றப்படுவான்,
நீதிமொழிகள் 28 : 27 (RCTA)
ஏழைக்குத் (தர்மம்) கொடுக்கிறவன் ஏழையாய் இரான். பிச்சை கேட்கிறவனை நிந்திப்பவன் வறுமையை அனுபவிப்பான்.
நீதிமொழிகள் 28 : 28 (RCTA)
அக்கிரமிகள் எழுந்திருக்கையில் மனிதர்கள் மறைந்து கொள்வார்கள். (ஆனால்) அவர்கள் அழிவுறும்போது நீதிமான்கள் பெருகுவார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28

BG:

Opacity:

Color:


Size:


Font: