நீதிமொழிகள் 15 : 1 (RCTA)
சாந்தமான பதில் கோபத்தை அடக்கும். கடுஞ் சொல் கோபத்தை மூட்டும்.
நீதிமொழிகள் 15 : 2 (RCTA)
ஞானிகளுடைய நாவு அறிவுக்கலையை அலங்கரிக்கும். அறிவிலியின் வாய் அறிவீனத்தைக் கக்கும்.
நீதிமொழிகள் 15 : 3 (RCTA)
ஆண்டவருடைய கண்கள் நல்லோரையும் தீயோரையும் எவ்விடத்திலும் நோக்குகின்றன.
நீதிமொழிகள் 15 : 4 (RCTA)
சமாதான வாக்கு வாழ்வு தரும் மரமாம். அடக்கப்படாத வாய் உயிரை நசுக்கும்.
நீதிமொழிகள் 15 : 5 (RCTA)
அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிறான். ஆனால், கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான். நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக அதிக மனத்திடன் உண்டாகும். அக்கிரமிகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.
நீதிமொழிகள் 15 : 6 (RCTA)
நீதிமான்களின் வீட்டில் ஏராளமான துணிவு உண்டு. அக்கிரமியின் செயல்களின் கலக்கமேயாம்.
நீதிமொழிகள் 15 : 7 (RCTA)
ஞானிகளின் வாய்கள் அறிவை விதைக்கின்றன. மதிக்கெட்டோரின் இதயம் மாறுபாடுடைத்து.
நீதிமொழிகள் 15 : 8 (RCTA)
அக்கிரமிகளின் பலிகளை ஆண்டவர் வெறுத்துத் தள்ளுகிறார். நீதிமான்களின் நேர்ச்சைகளையோ ஏற்றுக்கொள்கிறார்.
நீதிமொழிகள் 15 : 9 (RCTA)
அக்கிரமியின் வழியை ஆண்டவர் வெறுக்கிறார். நீதியைப் பின்பற்றி நடக்கிறவனுக்கு அவர் அன்பு செய்கிறார்.
நீதிமொழிகள் 15 : 10 (RCTA)
வாழ்வு தரும் வழியை விட்டு விலகினவனுக்குப் போதனை கடுமையானதாய் இருக்கும். கண்டனங்களைப் பகைக்கிறவன் சாவான்.
நீதிமொழிகள் 15 : 11 (RCTA)
நரகமும் நாசமும் (எப்பொழுதும்) ஆண்டவர் முன்னிலையில் (இருப்பது போல்), மனு மக்களின் இதயங்களும் அப்படியே அவற்றையும்விட (அவர் முன்னிலையில்) இருக்கின்றன.
நீதிமொழிகள் 15 : 12 (RCTA)
தீயவன் தன்னைக் கண்டிக்கிறவனுக்கு அன்பு செய்கிறதுமில்லை; ஞானிகளிடம் போகிறதுமில்லை.
நீதிமொழிகள் 15 : 13 (RCTA)
இதயத்திலுள்ள மகிழ்ச்சி முகத்தில் தெரியும். மனச் சஞ்சலம் ஆன்மாவை வதைக்கும். மனச் சஞ்சலத்தில் ஆன்மா குன்றிப்போகிறது.
நீதிமொழிகள் 15 : 14 (RCTA)
ஞானியின் இதயம் போதகத்தைக் தேடுகின்றது. மதிகெட்டோரின் வாய் அறிவீனத்தால் ஊட்டப்படுகின்றது.
நீதிமொழிகள் 15 : 15 (RCTA)
வறியவனின் நாட்கள் எல்லாம் தீயன. கவலையற்ற மனமோ இடைவிடாத விருந்து போலாம்.
நீதிமொழிகள் 15 : 16 (RCTA)
தெய்வ பயத்துடன் கூடிய சொற்பப் பொருள் நிறைவு தராத மிகுந்த செல்வங்களை விட அதிக நலம் பயக்கும்.
நீதிமொழிகள் 15 : 17 (RCTA)
கொழுத்த கன்றுக்குட்டி (விருந்துக்குப்) பகையுடன் அழைக்கப் படுவதைவிட, வெறுங்கீரை (விருந்துக்கு) நட்புடன் அழைக்கப்பட்டிருத்தல் நன்று.
நீதிமொழிகள் 15 : 18 (RCTA)
கோபமுள்ள மனிதன் சண்டையை மூட்டுகிறான். பொறுமையுள்ளவன் மூண்டதையும் தணிக்கிறான்.
நீதிமொழிகள் 15 : 19 (RCTA)
சோம்பேறிகளுடைய வழி முள்வேலி போலாம். நீதிமான்களுடைய பாதை இடறல் இல்லாததாம்.
நீதிமொழிகள் 15 : 20 (RCTA)
ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விக்கிறான். மதிகெட்ட மனிதன் தன் தாயை இகழ்கிறான்.
நீதிமொழிகள் 15 : 21 (RCTA)
மதிகெட்டவனுக்குத் (தன்) மதிகேடே மகிழ்ச்சி. விவேகமுள்ள மனிதன் தன் அடிகளைச் செவ்வையாக்குகிறான்.
நீதிமொழிகள் 15 : 22 (RCTA)
ஆலோசனை எங்கே இல்லையோ அங்கே சிந்தனைகள் சிதைந்துபோகின்றன. சிந்திப்போர் எங்கே அதிகமோ அங்கே (சிந்தனைகள்) வலுப்படுகின்றன.
நீதிமொழிகள் 15 : 23 (RCTA)
மனிதன் தன் வாயின் வாக்கில் மகிழ்கிறான். காலத்துக்கேற்ற உரையே சிறந்ததாம்.
நீதிமொழிகள் 15 : 24 (RCTA)
அடி நரகத்தினின்று விலகும்படி வாழ்வு தரும் பாதை கற்றவன்முன் உள்ளது.
நீதிமொழிகள் 15 : 25 (RCTA)
அகங்காரிகளின் வீட்டை ஆண்டவர் இடித்தழிப்பார்; விதவையின் காணி எல்லைகளையும் உறுதிப்படுத்துவார்.
நீதிமொழிகள் 15 : 26 (RCTA)
தீய சிந்தனைகளை ஆண்டவர் வெறுக்கிறார். தூய்மையும் மிக்க அழகும் உள்ள பேச்சு அவரால் உறுதிப்படுத்தப்படும்.
நீதிமொழிகள் 15 : 27 (RCTA)
கஞ்சத்தனத்தைப் பின்பற்றுகிறவன் தன் வீட்டைக் குழப்புகிறான். செல்வங்களைப் புறக்கணிக்கிறவனோ வாழ்வான். இரக்கத்தாலும் விசுவாசத்தாலும் பாவங்கள் நிவாரணமாகின்றன. தெய்வ பயத்தாலோ எவனும் தீமையினின்று விலகுவான்.
நீதிமொழிகள் 15 : 28 (RCTA)
நீதிமானின் மனம் (கீழ்ப்படிதலைத்) தியானிக்கின்றது. அக்கிரமிகளின் வாய் தீமைகளால் நிறைந்து வழிகின்றது.
நீதிமொழிகள் 15 : 29 (RCTA)
ஆண்டவர் அக்கிரமிகளுக்குத் தூர விலகி இருக்கின்றார். நீதிமான்களுடைய வேண்டுதல்களைக் கேட்டருள்கிறார்.
நீதிமொழிகள் 15 : 30 (RCTA)
கண்ணொளி ஆன்மாவை மகிழ்விக்கின்றது. நற்புகழ் எலும்புகளைக் கொழுப்பிக்கின்றது.
நீதிமொழிகள் 15 : 31 (RCTA)
வாழ்க்கையின் கண்டனங்களைக் கேட்கச் செவியுள்ளவன் ஞானிகள் நடுவே குடியிருப்பான்.
நீதிமொழிகள் 15 : 32 (RCTA)
போதனையை இகழ்பவன் தன் ஆன்மாவைப் புறக்கணிக்கிறான். கண்டனங்களுக்கு இணங்குகிறவனோ தன் இதயத்தை ஆண்டுகொள்வான்.
நீதிமொழிகள் 15 : 33 (RCTA)
தெய்வ பயமே ஞான போதினி. தாழ்மை மகிமைக்குமுன் செல்லுகிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33

BG:

Opacity:

Color:


Size:


Font: