நீதிமொழிகள் 11 : 1 (RCTA)
கள்ளத்தராசு ஆண்டவருக்கு அருவருப்பானது. சரி நிறையே அவருடைய திருவுளமாம்.
நீதிமொழிகள் 11 : 2 (RCTA)
அகந்தை எங்கே இருக்கின்றதோ அங்கே அவமானமும், தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).
நீதிமொழிகள் 11 : 3 (RCTA)
நீதிமான்களின் நேர்மை அவர்களை நடத்தும். தீயோரின் சதியோ அவர்களையே நாசமாக்கும்.
நீதிமொழிகள் 11 : 4 (RCTA)
(கடவுள்) பழிவாங்கும் நாளில் செல்வம் பயன்படாது. நீதியோ சாவினின்று விடுவிக்கும்.
நீதிமொழிகள் 11 : 5 (RCTA)
நேர்மையாளனின் நீதி அவன் நெறியைக் காக்கும். அக்கிரமி தன் அக்கிரமத்தில் வீழ்ந்து மடிவான்.
நீதிமொழிகள் 11 : 6 (RCTA)
செவ்வையானோரின் நீதி அவர்களை விடுவிக்கும். தீயோர் தங்கள் சதிகளிலே சிக்கிக் கொள்வார்கள்.
நீதிமொழிகள் 11 : 7 (RCTA)
தீய மனிதன் சாக, பின் யாதொரு நம்பிக்கையும் இராது. பெருமையை நாடுவோரின் எண்ணமும் அழிந்துபோகும்.
நீதிமொழிகள் 11 : 8 (RCTA)
நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான். அக்கிரமியோ அவனுக்குப் பதிலாகக் கையளிக்கப்படுவான்.
நீதிமொழிகள் 11 : 9 (RCTA)
கபடன் தன் நண்பனை வாயால் ஏய்க்கிறான். நீதிமான்களோ நன்மையான போதகத்தால் காப்பாற்றப்படுவார்கள்.
நீதிமொழிகள் 11 : 10 (RCTA)
நீதிமான்களின் பேற்றைக் கண்டு நரகம் களிகூரும். அக்கிரமிகளின் அழிவைப் பார்த்து (மக்கள்) மங்களம் கூறுவார்கள்.
நீதிமொழிகள் 11 : 11 (RCTA)
நீதிமான்களின் ஆசியாலே நகரம் செழித்தோங்கும். தீயோரின் வாக்கால் அழியும்.
நீதிமொழிகள் 11 : 12 (RCTA)
தன் நண்பனை இகழ்பவன் எவனோ அவன் மதியீனன். ஆனால், விவேகமுள்ள மனிதன் (இகழ்ந்து) பேசான்.
நீதிமொழிகள் 11 : 13 (RCTA)
வஞ்சனையாய் நடக்கிறவன் இரகசியங்களை வெளியாக்குகிறான். பிரமாணிக்கமுள்ளவனோ தன் நண்பனின் இரகசியத்தை மறைக்கிறான்.
நீதிமொழிகள் 11 : 14 (RCTA)
ஆள்பவன் இல்லாத நாட்டில் குடி மக்கள் அழிந்து கெடுவர். ஆனால், மிக்க ஆலோசனைக்காரர் எவ்விடமோ அவ்விடம் குடி மக்கள் வாழ்வார்கள்.
நீதிமொழிகள் 11 : 15 (RCTA)
அன்னியனுடன் பிணையாகிறவன் துன்பத்தால் வருந்துவான். வஞ்சனைகளுக்குத் தப்பித்துக் கொள்பவனோ நலமுடன் இருப்பான்.
நீதிமொழிகள் 11 : 16 (RCTA)
நாணமுள்ள பெண் மகிமை பெறுவாள். வலியாரோ செல்வங்களை அடைவார்கள்.
நீதிமொழிகள் 11 : 17 (RCTA)
இரக்கமுள்ள மனிதன் தன் ஆன்மாவுக்கு நன்மை செய்கிறான். கொடியவனோ தன் சுற்றத்தாரைப் புறக்கணிக்கிறான்.
நீதிமொழிகள் 11 : 18 (RCTA)
அக்கிரமி செய்த வேலை நிலைகொள்ளாது. நீதியை விதைப்பவனோ உண்மையான ஊதியம் பெறுவான்.
நீதிமொழிகள் 11 : 19 (RCTA)
சாந்தம் வாழ்வையும், தீமை செய்தல் மரணத்தையும் விளைவிக்கின்றன.
நீதிமொழிகள் 11 : 20 (RCTA)
தீய இதயத்தோரை ஆண்டவர் வெறுக்கிறார். நேர்மையாய் நடக்கிறவர்களை அவர் விரும்புகிறார்.
நீதிமொழிகள் 11 : 21 (RCTA)
கைக்குள் கை வைத்தாலும் தீயோன் குற்றமற்றவனாய் இரான். நீதிமான்களின் சந்ததியோ காப்பாற்றப்படும்.
நீதிமொழிகள் 11 : 22 (RCTA)
மதியில்லாப் பெண்ணின் அழகு பன்றியின் மூக்கிலுள்ள பொன் வளையம் போலிருக்கும்.
நீதிமொழிகள் 11 : 23 (RCTA)
நீதிமான்களின் ஆசை எல்லா நன்மையையும் பற்றியது. அக்கிரமிகளின் நம்பிக்கையோ கோபவெறியாம்.
நீதிமொழிகள் 11 : 24 (RCTA)
சிலர் தங்கள் சொத்துகளைப் பகிர்ந்தும் பெரும் செல்வராகிறார்கள். சிலர் தங்களுக்குச் சொந்தமல்லாதவைகளைக் கவர்ந்தும் எப்போதுமே வறுமையில் உழல்கிறார்கள்.
நீதிமொழிகள் 11 : 25 (RCTA)
நன்மையை நாடுகிற ஆன்மா நிறைவுபெறும். (மற்றவர்களைப்) பூரிக்கச் செய்கிறவன் தானும் பூரிப்படைவான்.
நீதிமொழிகள் 11 : 26 (RCTA)
தானியத்தை மறைத்து வைக்கிறவன் குடிகளால் சபிக்கப்படுவான். ஆனால் விற்கிறவர்களுடைய தலைமேலோ கடவுளின் ஆசி இருக்கும்.
நீதிமொழிகள் 11 : 27 (RCTA)
நன்மையைச் செய்யத் தேடுகிறவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். ஆனால் தீமையைத் தேடித் திரிகிறவன் அவைகளாலேயே நசுக்கப் படுவான்.
நீதிமொழிகள் 11 : 28 (RCTA)
தன் சொத்தில் நம்பிக்கை வைக்கிறவன் வீழ்ந்தழிவான். நீதிமான்களோ பசுந்தளிரைப்போலத் தழைப்பார்கள்.
நீதிமொழிகள் 11 : 29 (RCTA)
தன் இல்லத்தைக் குழப்புகிறவன் காற்றை உரிமையாகக் கொண்டிருப்பான். மதியீனனோ ஞானிக்குப் பணிவிடை புரிவான்.
நீதிமொழிகள் 11 : 30 (RCTA)
நீதிமானுடைய கனி வாழ்வு தரும் மரமாம். ஆன்மாக்களைத் தனதாக்கிக் கொள்கிறவன் ஞானியாய் இருக்கிறான்.
நீதிமொழிகள் 11 : 31 (RCTA)
நீதிமானே இவ்வுலகில் தண்டனை பெறுவானாயின், அக்கிரமியும் பாவியும் எவ்வளவு அதிகமாய்ப் (பெறுவார்கள்)!

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31

BG:

Opacity:

Color:


Size:


Font: