மத்தேயு 9 : 1 (RCTA)
அவர் படகேறி அக்கரை சென்று தம் சொந்த ஊரையடைந்தார்.
மத்தேயு 9 : 2 (RCTA)
இதோ! திமிர்வாதக்காரன் ஒருவனைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டுவந்தனர். இயேசுவோ அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி, "மகனே, தைரியமாயிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார்.
மத்தேயு 9 : 3 (RCTA)
அப்போது மறைநூல் அறிஞர் சிலர், "இவர் கடவுளைத் தூஷிக்கிறார்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டனர்.
மத்தேயு 9 : 4 (RCTA)
இயேசு, அவர்கள் சிந்தனைகளை அறிந்து கூறியதாவது:
மத்தேயு 9 : 5 (RCTA)
"உங்கள் உள்ளங்களில் தீயன சிந்திப்பானேன் ? எது எளிது ? உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா ?
மத்தேயு 9 : 6 (RCTA)
எழுந்து நட என்பதா? மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மனுமகனுக்கு அதிகாரம் உண்டு என்று நீங்கள் உணருமாறு" - திமிர்வாதக்காரனை நோக்கி - "எழுந்து உன் கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ" என்றார்.
மத்தேயு 9 : 7 (RCTA)
அவன் எழுந்து தன் வீடு சென்றான்.
மத்தேயு 9 : 8 (RCTA)
இதைக் கண்ட மக்கட்கூட்டம் அஞ்சி, இத்தகைய வல்லமையை மனிதருக்கு அளித்த கடவுளை மகிமைப்படுத்திற்று.
மத்தேயு 9 : 9 (RCTA)
இயேசு அங்கிருந்து போகையில், மத்தேயு என்ற ஒருவர் சுங்கத்துறையில் அமர்ந்திருக்கக் கண்டு அவரை நோக்கி, "என்னைப் பின்செல்" என்றார். அவர் எழுந்து அவரைப் பின்சென்றார்.
மத்தேயு 9 : 10 (RCTA)
பின், அவர் வீட்டில் இயேசு பந்தியமர்ந்திருக்கையில் இதோ! ஆயக்காரர், பாவிகள் பலர் அவருடனும் சீடருடனும் ஒருங்கே அமர்ந்திருந்தனர்.
மத்தேயு 9 : 11 (RCTA)
இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து, "உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் உண்பதேன் ?" என்றனர்.
மத்தேயு 9 : 12 (RCTA)
இதைக் கேட்ட இயேசு, "மருத்துவன் நோயற்றவருக்கன்று, நோயுற்றவருக்கே தேவை.
மத்தேயு 9 : 13 (RCTA)
' பலியை அன்று, இரக்கத்தையே விரும்புகிறேன் ' என்பதன் கருத்தைப் போய்க்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், நீதிமான்களை அன்று, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார்.
மத்தேயு 9 : 14 (RCTA)
அப்பொழுது அருளப்பருடைய சீடர்கள் அவரிடம் வந்து, "நாங்களும் பரிசேயரும் அடிக்கடி நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?" என்றார்கள்.
மத்தேயு 9 : 15 (RCTA)
இயேசு அவர்களை நோக்கி, "மணமகன் தங்களோடு இருக்குமளவும், அவன் தோழர்கள் துக்கம் கொண்டாடலாமா ? மணமகன் அவர்களை விட்டுப் பிரியும் நாள் வரும்; அப்பொழுது அவர்கள் நோன்பு இருப்பார்கள்.
மத்தேயு 9 : 16 (RCTA)
பழைய ஆடையில் கோடித் துணியை எவனும் ஒட்டுப்போடுவதில்லை. ஏனெனில், அந்த ஒட்டு ஆடையைக் கிழிக்கும்; கிழியலும் பெரிதாகும்.
மத்தேயு 9 : 17 (RCTA)
புதுத் திராட்சை இரசத்தைப் பழஞ்சித்தைகளில் ஊற்றி வைப்பதில்லை. வைத்தால் சித்தைகள் வெடிக்கும்; இரசம் சிந்திப்போகும்; சித்தைகளும் பாழாகும். ஆனால் புது இரசத்தைப் புதுச் சித்தைகளில் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் கெடாமலிருக்கும்" என்றார்.
மத்தேயு 9 : 18 (RCTA)
அவர்களுடன் இவ்வாறு அவர் பேசிக் கொண்டிருக்கும்பொழுது, தலைவன் ஒருவன் அவரை அணுகிப் பணிந்து, "என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்; ஆயினும் நீர் வந்து அவள்மீது உமது கையை வையும்; அவள் உயிர் பெறுவாள்" என்றான்.
மத்தேயு 9 : 19 (RCTA)
இயேசு எழுந்து தம் சீடர்களோடு அவன் பின்னே சென்றார்.
மத்தேயு 9 : 20 (RCTA)
இதோ! பன்னிரு ஆண்டுகளாய்ப் பெரும்பாட்டினால் வருந்திய பெண் ஒருத்தி பின்புறமாக வந்து, அவர் போர்வையின் விளிம்பைத் தொட்டாள்.
மத்தேயு 9 : 21 (RCTA)
"நான் அவருடைய போர்வையைத் தொட்டாலே குணம் பெறுவேன்" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டாள்.
மத்தேயு 9 : 22 (RCTA)
இயேசு திரும்பி, அவளைப் பார்த்து, "மகளே, தைரியமாயிரு; உன் விசுவாசம் உன்னைக் குணமாக்கிற்று" என்றார். அந்நேரமுதல் அவள் குணமாயிருந்தாள்.
மத்தேயு 9 : 23 (RCTA)
இயேசு, தலைவன் வீட்டுக்கு வந்தபோது, தாரை ஊதுவோரையும், சந்தடி செய்யும் கூட்டத்தையும் கண்டு,
மத்தேயு 9 : 24 (RCTA)
"விலகிப்போங்கள்; சிறுமி சாகவில்லை; தூங்குகிறாள்" என்றார்.
மத்தேயு 9 : 25 (RCTA)
அவர்களோ அவரை ஏளனம் செய்தனர். கும்பலை வெளியேற்றிவிட்டு, அவர் உள்ளே சென்று, அவள் கையைப் பிடிக்கவே, சிறுமி எழுந்தாள்.
மத்தேயு 9 : 26 (RCTA)
இச்செய்தி அந்நாடெங்கும் பரவிற்று.
மத்தேயு 9 : 27 (RCTA)
இயேசு அங்கிருந்து போகையில், இரு குருடர் அவரைப் பின்தொடர்ந்து, "தாவீதின் மகனே, எங்கள்மேல் இரக்கம்வையும்" என்று கூவினர்.
மத்தேயு 9 : 28 (RCTA)
அவர் வீடு வந்து சேர்ந்ததும், குருடர் அவரிடம் வர, இயேசு அவர்களைப் பார்த்து, "உங்களுக்கு நான் இதைச் செய்ய முடியும் என விசுவசிக்கிறீர்களா ?" என்றார்.
மத்தேயு 9 : 29 (RCTA)
"ஆம், ஆண்டவரே" என்றனர். பின் அவர் அவர்களுடைய கண்களைத் தொட்டு "உங்கள் விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகட்டும்" என்றார்.
மத்தேயு 9 : 30 (RCTA)
அவர்களுடைய கண்கள் திறந்தன. "இது யாருக்கும் தெரியாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்" என்று அவர்களுக்குக் கண்டிப்பாய்ச் சொன்னார்.
மத்தேயு 9 : 31 (RCTA)
அவர்களோ வெளியே போய் அவரைப்பற்றி நாடெங்கும் பேசலாயினர்.
மத்தேயு 9 : 32 (RCTA)
அவர்கள் சென்றபின், இதோ! பேய்பிடித்த ஊமையன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தனர்.
மத்தேயு 9 : 33 (RCTA)
அவர் பேயை ஓட்ட, ஊமையன் பேசினான். மக்கட்கூட்டம் வியப்புற்று, "இப்படி ஒருகாலும் இஸ்ராயேலில் கண்டதில்லை" என்றது.
மத்தேயு 9 : 34 (RCTA)
பரிசேயரோ, "இவன் பேய்களின் தலைவனைக்கொண்டே பேய்களை ஓட்டுகிறான்" என்றனர்.
மத்தேயு 9 : 35 (RCTA)
இயேசு, நகரங்கள், ஊர்கள் எல்லாம் சுற்றி வந்து, அவர்களுடைய செபக்கூடங்களில் போதித்து, விண்ணரசைப்பற்றிய நற்செய்தியை அறிவித்து, நோய் பிணியெல்லாம் குணமாக்கி வந்தார்.
மத்தேயு 9 : 36 (RCTA)
அவர் மக்கட்கூட்டத்தைக் கண்டு, அவர்கள் ஆயனில்லா ஆடுகள்போலத் தவித்துக் கிடந்தமையால், அவர்கள்மேல் மனமிரங்கினார்.
மத்தேயு 9 : 37 (RCTA)
அப்பொழுது அவர் தம் சீடர்களை நோக்கி, "அறுவடையோ மிகுதி; வேலையாட்களோ குறைவு.
மத்தேயு 9 : 38 (RCTA)
ஆதலால், தம் அறுவடைக்கு வேலையாட்களை அனுப்பும்படி அறுவடையின் ஆண்டவரை மன்றாடுங்கள்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38

BG:

Opacity:

Color:


Size:


Font: