மத்தேயு 25 : 1 (RCTA)
"அந்நாளில் விண்ணரசு, மணமகனை எதிர்கொள்ளச் சென்ற பத்துக் கன்னியருக்கு ஒப்பாயிருக்கும். அவர்கள் கையில் விளக்கு எடுத்துப் போனார்கள்.
மத்தேயு 25 : 2 (RCTA)
அவர்களுள் ஐவர் அறிவிலிகள், ஐவர் விவேகிகள்.
மத்தேயு 25 : 3 (RCTA)
அறிவிலிகள் ஐவரும் விளக்கு எடுத்துக்கொண்டார்கள்; ஆனால், எண்ணெய் எடுத்துக்கொள்ளவில்லை.
மத்தேயு 25 : 4 (RCTA)
விவேகிகளோ விளக்குடன் ஏனத்தில் எண்ணெயும் எடுத்துக்கொண்டார்கள்.
மத்தேயு 25 : 5 (RCTA)
மணமகன் வரக் காலம் தாழ்த்தவே, எல்லாரும் தூங்கிவிழுந்து, உறங்கிவிட்டார்கள்.
மத்தேயு 25 : 6 (RCTA)
நள்ளிரவில், ' இதோ! மணவாளன் வருகிறார்; அவரை எதிர்கொள்ளச் செல்லுங்கள் ' என்ற கூக்குரல் கேட்டது.
மத்தேயு 25 : 7 (RCTA)
அப்பொழுது அக்கன்னியர் எல்லாரும் எழுந்து தம் விளக்குகளைச் சரிப்படுத்தினார்கள்.
மத்தேயு 25 : 8 (RCTA)
அறிவிலிகளோ, ' எங்கள் விளக்குகள் அணைந்துபோகின்றன, உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள் ' என்று விவேகிகளிடம் கேட்டார்கள்.
மத்தேயு 25 : 9 (RCTA)
அதற்கு விவேகிகள், ' உங்களுக்கும் எங்களுக்கும் எண்ணெய் பற்றாமல் போகலாம், ஆகவே கடைக்காரரிடம் சென்று நீங்களே வாங்கிக்கொள்ளுங்கள் ' என்றனர்.
மத்தேயு 25 : 10 (RCTA)
அவர்கள் வாங்கச் செல்லும்போது மணமகன் வந்தார். தயாராயிருந்தோர் அவருடன் மணவீட்டில் நுழைந்தனர். கதவு அடைக்கப்பட்டது.
மத்தேயு 25 : 11 (RCTA)
இறுதியாக மற்றக் கன்னியரும் வந்து, ' ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குக் கதவைத் திறந்துவிடும் ' என்றனர்.
மத்தேயு 25 : 12 (RCTA)
அவரோ மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: உங்களை அறியேன் ' என்றார்.
மத்தேயு 25 : 13 (RCTA)
எனவே விழிப்பாயிருங்கள்; ஏனெனில், நாளும் நேரமும் உங்களுக்குத் தெரியாது.
மத்தேயு 25 : 14 (RCTA)
"மேலும் பயணம் செல்ல இருந்த ஒருவன் தன் ஊழியரை அழைத்துத் தன்னுடைமையெல்லாம் அவர்களிடம் ஒப்படைத்தான் என்று வைத்துக்கொள்வோம்.
மத்தேயு 25 : 15 (RCTA)
அவனவன் திறமைக்குத் தக்கவாறு ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், வேறொருவனுக்கு இரண்டும், இன்னொருவனுக்கு ஒன்றுமாகக் கொடுத்துப் பயணம்சென்றான்.
மத்தேயு 25 : 16 (RCTA)
ஐந்து தாலந்து பெற்றவன் உடனே சென்று அவற்றைப் பயன்படுத்தி இன்னும் ஐந்து சம்பாதித்தான்.
மத்தேயு 25 : 17 (RCTA)
அப்படியே, இரண்டு பெற்றவனும் மேலும் இரண்டு சம்பாதித்தான்.
மத்தேயு 25 : 18 (RCTA)
ஒன்று பெற்றவனோ சென்று மண்ணைத் தோண்டித் தலைவனுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.
மத்தேயு 25 : 19 (RCTA)
நெடுங் காலத்திற்குப் பின்னர், அவ்வூழியரின் தலைவன் திரும்பிவந்து அவர்களிடம் கணக்குக்கேட்டான்.
மத்தேயு 25 : 20 (RCTA)
ஐந்து தாலந்து பெற்றவன் அணுகி, மேலும் ஐந்து தாலந்து கொண்டுவந்து, 'ஐயா! நீர் என்னிடம் ஐந்து தாலந்து ஒப்படைத்தீர். இதோ! இன்னும் ஐந்து தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.
மத்தேயு 25 : 21 (RCTA)
அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே, சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.
மத்தேயு 25 : 22 (RCTA)
இரண்டு தாலந்து பெற்றவனும் வந்து, ' ஐயா, நீர் என்னிடம் இரண்டு தாலந்து ஒப்படைத்தீர். இதோ! மேலும் இரண்டு தாலந்து சம்பாதித்துள்ளேன்' என்றான்.
மத்தேயு 25 : 23 (RCTA)
அதற்குத் தலைவன், ' நன்று, நன்று, நம்பிக்கைக்குரிய நல்ல ஊழியனே. சிறியவற்றில் நம்பிக்கைக்குரியவனாய் இருந்தாய்; ஆதலால் உன்னைப் பெரியவற்றுக்கு அதிகாரியாக்குவேன். உன் தலைவனது மகிழ்ச்சியில் சேர்ந்துகொள்' என்றான்.
மத்தேயு 25 : 24 (RCTA)
ஒரு தாலந்து பெற்றவனோ வந்து, ' ஐயா, உம்மை எனக்குத் தெரியும். நீர் கடுமையானவர்; விதைக்காத இடத்தில் அறுப்பவர்; தூவாத இடத்தில் சேர்ப்பவர்.
மத்தேயு 25 : 25 (RCTA)
ஆகவே, உமக்கு அஞ்சி, உம் தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ! உம்முடையது' என்று கொடுத்தான்.
மத்தேயு 25 : 26 (RCTA)
அதற்குத் தலைவன், ' கெட்ட ஊழியனே, சோம்பேறியே, நான் விதைக்காத இடத்தில் அறுப்பவன், தூவாத இடத்தில் சேர்ப்பவன் என்று உனக்குத் தெரியுமே.
மத்தேயு 25 : 27 (RCTA)
என் பணத்தை நீ வட்டிக்காரரிடம் கொடுத்திருக்கவேண்டும். நான் வந்து என்னுடையதை வட்டியோடு பெற்றிருப்பேன்.
மத்தேயு 25 : 28 (RCTA)
எனவே, இவனிடமிருந்து தாலந்தைப் பிடுங்கி, பத்துத் தாலந்து உடையவனுக்குக் கொடுங்கள்.
மத்தேயு 25 : 29 (RCTA)
ஏனெனில், உள்ளவன் எவனுக்கும் கொடுக்கப்படும், அவனும் நிறைவு பெறுவான். இல்லாதவனிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்.
மத்தேயு 25 : 30 (RCTA)
பயனற்ற ஊழியனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும்' என்றான்.
மத்தேயு 25 : 31 (RCTA)
"வானதூதர் அனைவரும் புடைசூழ மனுமகன் தம் மாட்சிமையில் வரும்போது மாட்சி அரியணையில் வீற்றிருப்பார்.
மத்தேயு 25 : 32 (RCTA)
அவர் முன்னிலையில் எல்லா இனத்தாரும் ஒன்று சேர்க்கப்படுவர். இடையன் செம்மறிகளையும் வெள்ளாடுகளையும் பிரிப்பதுபோல், அவர்களை வெவ்வேறாகப் பிரிப்பார்.
மத்தேயு 25 : 33 (RCTA)
செம்மறிகளைத் தம் வலப்பக்கமும் வெள்ளாடுகளை இடப்பக்கமும் நிறுத்துவார்.
மத்தேயு 25 : 34 (RCTA)
பின்னர், அரசர் தம் வலப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'வாருங்கள், என் தந்தையின் ஆசி பெற்றவர்களே, உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்துள்ள அரசு உங்களுக்கு உரிமையாகுக.
மத்தேயு 25 : 35 (RCTA)
ஏனெனில், பசியாய் இருந்தேன், எனக்கு உண்ணக் கொடுத்தீர்கள். தாகமாய் இருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுத்தீர்கள். அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்றீர்கள்.
மத்தேயு 25 : 36 (RCTA)
ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தினீர்கள். நோயுற்றிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள். சிறையில் இருந்தேன், என்னைக் காணவந்தீர்கள் ' என்பார்.
மத்தேயு 25 : 37 (RCTA)
அப்போது நீதிமான்கள் அவரிடம், ' ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாய் இருக்கக் கண்டு உணவு கொடுத்தோம்? தாகமாயிருக்கக் கண்டு குடிக்கக் கொடுத்தோம்?
மத்தேயு 25 : 38 (RCTA)
எப்பொழுது நீர் அன்னியனாய் இருக்கக் கண்டு வரவேற்றோம்? ஆடையின்றியிருக்கக் கண்டு உடுத்தினோம்?
மத்தேயு 25 : 39 (RCTA)
எப்பொழுது நீர் நோயுற்றோ சிறையிலோ இருக்கக் கண்டு, உம்மைப் பார்க்க வந்தோம்?' என்பார்கள்.
மத்தேயு 25 : 40 (RCTA)
அதற்கு அரசர் அவர்களிடம் கூறுவார்: 'உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறிய என் சகோதரருள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்தபோதெல்லாம் எனக்கே செய்தீர்கள்.'
மத்தேயு 25 : 41 (RCTA)
பின்னர், இடப்பக்கம் உள்ளோரை நோக்கி, 'சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடுசெய்துள்ள முடிவில்லா நெருப்புக்குள் செல்லுங்கள்.
மத்தேயு 25 : 42 (RCTA)
ஏனெனில், நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உண்ணக் கொடுக்கவில்லை. தாகமாயிருந்தேன், எனக்குக் குடிக்கக் கொடுக்கவில்லை.
மத்தேயு 25 : 43 (RCTA)
அன்னியனாய் இருந்தேன், என்னை வரவேற்கவில்லை. ஆடையின்றி இருந்தேன், என்னை உடுத்தவில்லை. நோயுற்றும் சிறையிலும் இருந்தேன், என்னைப் பார்க்க வரவில்லை ' என்பார்.
மத்தேயு 25 : 44 (RCTA)
அப்பொழுது அவர்களும் அவரிடம், 'ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ தாகமாகவோ அன்னியனாகவோ, ஆடையின்றியோ நோயுற்றோ சிறையிலோ இருப்பதைக் கண்டு உமக்குப் பணிவிடை செய்யாதிருந்தோம் ?' என்பர்.
மத்தேயு 25 : 45 (RCTA)
அவர் மறுமொழியாக, ' உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: சின்னஞ் சிறியவர் இவர்களுள் ஒருவனுக்கு நீங்கள் இவற்றைச் செய்யாதபோதெல்லாம் எனக்கே செய்யவில்லை ' என்பார்.
மத்தேயு 25 : 46 (RCTA)
எனவே, இவர்கள் முடிவில்லாத் தண்டனைக்கும், நீதிமான்கள் முடிவில்லா வாழ்வுக்கும் போவார்கள்."

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

BG:

Opacity:

Color:


Size:


Font: