மத்தேயு 22 : 1 (RCTA)
இயேசு மீண்டும் அவர்களிடம் உவமைகளில் உரைத்ததாவது:
மத்தேயு 22 : 2 (RCTA)
"விண்ணரசு, தன் மகனுக்குத் திருமணம் செய்துவைத்த அரசனுக்கு ஒப்பாகும்.
மத்தேயு 22 : 3 (RCTA)
அவன் ஊழியரை அனுப்பித் திருமணத்திற்கு அழைக்கப்பெற்றவர்களை வரச்சொன்னான். அவர்களோ வர விரும்பவில்லை.
மத்தேயு 22 : 4 (RCTA)
மீண்டும் வேறு ஊழியரை அனுப்பி, ' இதோ! விருந்து ஏற்பாடு செய்துள்ளேன்; காளைகளும் கொழுத்த மிருகங்களும் அடித்து எல்லாம் ஏற்பாடாயிற்று. திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பெற்றவருக்குச் சொல்லுங்கள் ' என்றான்.
மத்தேயு 22 : 5 (RCTA)
அழைக்கப்பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை; ஒருவன் தன் தோட்டத்திற்கும், வேறொருவன் வியாபாரத்துக்கும் போய்விட்டான்.
மத்தேயு 22 : 6 (RCTA)
மற்றவர்களோ அவன் ஊழியரைப் பிடித்து அவமானப்படுத்திக் கொன்றனர்.
மத்தேயு 22 : 7 (RCTA)
அதைக் கேட்ட அரசன் சினந்து, தன் படையை அனுப்பிக் கொலைகாரர்களைத் தொலைத்து அவர்கள் நகரையும் தீக்கிரையாக்கினான்.
மத்தேயு 22 : 8 (RCTA)
பின்னர், தன் ஊழியரிடம், ' திருமண விருந்து ஏற்பாடாகிவிட்டது. அழைக்கப்பெற்றவர்களோ தகுதியற்றவர்களாயினர்.
மத்தேயு 22 : 9 (RCTA)
எனவே, வீதிகளுக்குச் சென்று நீங்கள் காணும் எல்லாரையும் மணவிருந்துக்கு அழையுங்கள் ' என்றான்.
மத்தேயு 22 : 10 (RCTA)
அவன் ஊழியரும் வீதிகளுக்குச் சென்று தாங்கள் கண்ட நல்லவர் கெட்டவர் அனைவரையும் கூட்டிச் சேர்த்தனர். மன்றம் நிரம்ப அவர்கள் பந்தி அமர்ந்தனர்.
மத்தேயு 22 : 11 (RCTA)
அமர்ந்தோரைப் பார்க்க அரசன் உள்ளே வந்தான். அங்கே திருமண உடையணியாத ஒருவனைக் கண்டான்.
மத்தேயு 22 : 12 (RCTA)
அவனை நோக்கி, 'நண்பா, திருமண உடையின்றி எப்படி உள்ளே நுழைந்தாய்?' என்று கேட்க, அவன் பேசாதிருந்தான்.
மத்தேயு 22 : 13 (RCTA)
பின்னர் அரசன் பணியாளரை நோக்கி, ' கையும் காலும் கட்டி இவனை வெளி இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் பற்கடிப்பும் இருக்கும் ' என்று சொன்னான்.
மத்தேயு 22 : 14 (RCTA)
ஏனெனில், அழைக்கப்பெற்றவர்களோ பலர்; தேர்ந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர்."
மத்தேயு 22 : 15 (RCTA)
பின்னர், பரிசேயர் போய் அவரைப் பேச்சில் அகப்படுத்த ஆலோசனை செய்தனர்.
மத்தேயு 22 : 16 (RCTA)
தங்கள் சீடரை ஏரோதியரோடு அவரிடம் அனுப்பி, "போதகரே, நீர் உண்மை உள்ளவர்; கடவுள்வழியை உண்மைக்கேற்பப் போதிக்கிறீர். நீர் யாரையும் பொருட்படுத்துவதில்லை, முகத்தாட்சணியம் பார்ப்பதில்லை என்று எங்களுக்குத் தெரியும்.
மத்தேயு 22 : 17 (RCTA)
எனவே, எங்களுக்குச் சொல்லும்: செசாருக்கு வரி கொடுப்பது முறையா ? இல்லையா ? இதைப்பற்றி உம் கருத்து என்ன ?" என்றனர்.
மத்தேயு 22 : 18 (RCTA)
இயேசு அவர்களது கெடுமதியை அறிந்து, "வெளிவேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள் ?
மத்தேயு 22 : 19 (RCTA)
வரி நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்" என்றார். ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தனர்.
மத்தேயு 22 : 20 (RCTA)
இயேசு, "இவ்வுருவமும் எழுத்தும் யாருடையவை ?" என்றார்.
மத்தேயு 22 : 21 (RCTA)
"செசாருடையவை" என்றனர். அப்பொழுது அவர்களை நோக்கி, "ஆதலால் செசாருடையதைச் செசாருக்கும், கடவுளுடையதைக் கடவுளுக்கும் செலுத்துங்கள்" என்றார்.
மத்தேயு 22 : 22 (RCTA)
இதைக் கேட்டு அவர்கள் வியப்புற்று அவரை விட்டுப்போயினர்.
மத்தேயு 22 : 23 (RCTA)
உயிர்த்தெழுதல் இல்லையென்று கூறும் சதுசேயர் அவரை அன்று அணுகி,
மத்தேயு 22 : 24 (RCTA)
"போதகரே, ' ஒருவன் பிள்ளையின்றி இறந்துவிடுவானாயின், அவன் சகோதரன் அவனுடைய மனைவியை மணந்து, தன் சகோதரனுக்கு மகப்பேறு அளிக்கட்டும் ' என்று மோயீசன் சொல்லியிருக்கிறார்.
மத்தேயு 22 : 25 (RCTA)
எங்களிடையே சகோதரர் எழுவர் இருந்தனர். மூத்தவன் மணம்முடித்து மகப்பேறின்றித் தன் மனைவியைச் சகோதரனுக்கு விட்டு இறந்தான்.
மத்தேயு 22 : 26 (RCTA)
அப்படியே இராண்டாம், மூன்றாம், ஏழாம் சகோதரன்வரைக்கும் நடந்தது.
மத்தேயு 22 : 27 (RCTA)
எல்லாருக்கும் கடையில் அப்பெண்ணும் இறந்தாள்.
மத்தேயு 22 : 28 (RCTA)
ஆகவே, உயிர்த்தெழும்போது அவள் அந்த எழுவருள் யாருக்கு மனைவியாக இருப்பாள் ? எல்லாரும் அவளை மணம்செய்திருந்தனரே" என்று கேட்டனர்.
மத்தேயு 22 : 29 (RCTA)
அதற்கு இயேசு, "மறைநூலையும் கடவுளுடைய வல்லமையையும் நீங்கள் அறியாததால் தவறாக நினைக்கிறீர்கள்.
மத்தேயு 22 : 30 (RCTA)
ஏனெனில், உயிர்த்தெழும்போது பெண் கொள்வதுமில்லை, கொடுப்பதுமில்லை. வானகத்தில் கடவுளின் தூதரைப்போல் இருப்பார்கள்.
மத்தேயு 22 : 31 (RCTA)
இறந்தோர் உயிர்த்தெழுவதுபற்றிக் கடவுள், ' நாம் ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள் ' என்று உங்களுக்குக் கூறினதை நீங்கள் படித்ததில்லையா ?
மத்தேயு 22 : 32 (RCTA)
அவர், வாழ்வோரின் கடவுளேயன்றி இறந்தோரின் கடவுள் அல்லர்" என்றார்.
மத்தேயு 22 : 33 (RCTA)
இதைக் கேட்ட மக்கட்கூட்டம் அவர் போதனையைப்பற்றி மலைத்துப்போயிற்று.
மத்தேயு 22 : 34 (RCTA)
அவர் சதுசேயரை வாயடக்கியது கேள்வியுற்ற பரிசேயர் ஒன்றுகூடினர்.
மத்தேயு 22 : 35 (RCTA)
அவர்களுள் சட்டவல்லுநனாகிய ஒருவன்,
மத்தேயு 22 : 36 (RCTA)
"போதகரே, திருச்சட்டத்தின் பெரிய கட்டளை எது ?" என்று அவரைச் சோதிக்கக் கேட்டான்.
மத்தேயு 22 : 37 (RCTA)
இயேசு அவனிடம், "உன் கடவுளாகிய ஆண்டவருக்கு முழு உள்ளத்தோடும் முழு ஆன்மாவோடும் முழு மனத்தோடும் அன்பு செய்வாயாக.
மத்தேயு 22 : 38 (RCTA)
இதுவே எல்லாவற்றிலும் பெரிய முதன்மையான கட்டளை.
மத்தேயு 22 : 39 (RCTA)
இரண்டாவது இதை யொத்ததே; உன்மீது நீ அன்பு காட்டுவதுபோல் உன் அயலான்மீதும் அன்பு காட்டுவாயாக.
மத்தேயு 22 : 40 (RCTA)
திருச்சட்டம் முழுவதற்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளும் அச்சாணி போன்றவை" என்றார்.
மத்தேயு 22 : 41 (RCTA)
பரிசேயர் திரண்டு கூடியிருக்கையில் இயேசு,
மத்தேயு 22 : 42 (RCTA)
"மெசியாவைப்பற்றி உங்கள் கருத்து என்ன ? அவர் யாருடைய மகன் ?" என்று வினவினார். "தாவீதின் மகன்" என்றார்கள்.
மத்தேயு 22 : 43 (RCTA)
அதற்கு அவர், "அப்படியானால் தாவீது, தேவ ஆவியால் ஏவப்பட்டு,
மத்தேயு 22 : 44 (RCTA)
அவரை ஆண்டவர் என்று அழைப்பது எப்படி ? ஏனெனில், ' ஆண்டவர் என் ஆண்டவரிடம் சொன்னது: நான் உம் பகைவரை உமக்குக் கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கத்தில் அமரும் ' எனச் சொல்லியிருக்கிறாரே.
மத்தேயு 22 : 45 (RCTA)
ஆகவே, தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, தாவீதுக்கு அவர் மகனாக மட்டும் இருப்பது எப்படி ?" என்றார்.
மத்தேயு 22 : 46 (RCTA)
அதற்கு ஒருவனும் ஒரு வார்த்தைகூட மறுமொழி சொல்ல முடியவில்லை. அன்றுமுதல் அவரிடம் மேலும் கேள்வி கேட்க ஒருவனும் துணியவில்லை.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

BG:

Opacity:

Color:


Size:


Font: